திங்கள் 14 2017

எழுபத்தியோராவது ஆண்டின் சுதந்திரம்


எழுபத்தியோராவது ஆண்டின்
இந்தியா  பெற்ற
சுதந்திர சூளுரை


ரோசம் இல்லா
மக்களுக்கு ரேசன்
பொருள் எதற்கு?


மானம் இல்லா
மக்களுக்கு இனி
மானியம் எதற்கு??

சினம் இல்லா
மக்களுக்கு இனி
சிலிண்டர் எதற்கு???

குட்டக் குட்ட
குனியும் குரங்கின
மக்களுக்கு கொடுங்கோல்
ஆட்சிதான் சரி............

மெல்லச் சாவார்கள்
சுதந்திரம் பெறாத
இந்திய மக்கள்.....

இருப்பவன் எல்லாம்
வெளி நாடு
ஓடிப் போயிடுவான்
மல்லையா” போல
சூ..தந்திரமாய்....

இல்லாதவன் எல்லாம்
அடிமையாக சாவான்
விவசாயிகளை” போல

இனியும்  துணியாமல்
இருந்தால்  உமக்கு
துணியும் மிஞ்சாது.....

ஓட்டு போட
உயிரை மட்டும்
விட்டு விட்டு
ஊனமாக்கி பிச்சை
எடுக்க விட்டு
விடுவார்கள் சுதந்திரம்
கொண்டாட பாக்கியம்
பெற்ற  பாதகர்கள்

ஆளும் அரசின்
திட்டம் தெரிந்து
அவர்களின் கொட்டம்
அடக்காமல் இருந்தால்
நட்டம் சாமனியர்க்கே.

 வா ஒழுங்காய்
ஒன்று கூடு
வீரமாய் போராடு...

இல்லை என்றால்
உன் இனமே
முற்றாய் அழிந்து
விடும் மண்ணோடு


3 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...