புதன் 23 2017

மயிர் பிளக்கும் மயிர் வாதம்.......




அன்று அந்த கூட்டத்திலே
பல வாதங்கள் அரங்கேறி
விறு விறுப்பாக நடந்து
கொண்டு இருந்த அந்த
நேரத்தில் முத்தான வாதம்

ஒருவர் கேட்டார் அண்ணே
இரண்டு மயிர்கள் ஒன்று
சேர்ந்தால் குட்டி பிறக்குமில்ல..

ஆமாண்ணே எம் புள்ள
நோட்டு புத்தகத்தில வச்சு
இருக்கிற மயிலு மயிரே
குட்டி போடயிலே இணைந்த
மயிர்கள் குட்டி போடாம
இருக்குமா குட்டி  போடும்ண்ணே....


அப்தூல் கலாம் வாரிசு
ஒருவர் இடை மறித்தார்
என்னய்யா இது மயிறு
ஆராய்ச்சியா இருக்கு மயிலு
மயிறே குட்டி போடாது
இதில இணைந்த மயிறுகள்
எப்படியா குட்டி போடும்

புரட்சி தலைவியின் வாரிசு
ஒருவர் கோபம் கொண்டார்
அறிவில்லா கூட்டம் இல்ல
இது காலஞ் சென்ற
புரட்சி தலைவரின் புரட்சி
தலைவியின் நேரடி வாரிசுகளின்
கூட்டம் இதில் சிந்திக்க
சொல்பவரை  வன்மையாக கண்டிக்கிறேன்

அதை நான் ஆமோதிக்கிறேன்

வாழ்க! அண்ணன் நாமம்!!
வளர்க ! அண்ணியின் புகழ்!!

டேய்..அண்ணி இல்லடா
புரட்சி தலைவி அம்மாடா.....


.....??????......!!!!!!!!!!!!!!!!!!!

7 கருத்துகள்:

  1. பகுத்தறிவு பகலவன்கள் ,அம்மாவின் ஆன்மா எங்களை ஒன்று சேர்த்தது என்றும் சொல்லிக் கொள்கிறார்கள் :)

    பதிலளிநீக்கு
  2. அடடே இப்படியும் இருக்கிறதா...... நண்பரே

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் கூழ்முட்டைகள் தான் அரசியல் நையாண்டி நல்லாக இருக்கு. நலமா சார்?

    பதிலளிநீக்கு
  4. புலவர் அய்யாவின் ஒரு பதிவை படித்தபோது சலிப்பில்லாமல் அனைத்து பதிவுகளுக்கும் கருத்துரை வழங்கி வரும் தங்களளைத்தான் நிணைவு கூர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. தமிழர்கள் திரு சுத்தமானவர் ஒபிஎஸ்சும்,பழனிசாமியும் சேர்ந்து பேயை உணர்தல்- ஆத்மா பேய் பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது - தலைவர் தினகரன்
    கடவுள் மிரட்டல் வேலைகளை செய்பவர் என்பதை பக்தர்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...