திங்கள் 18 2017

கவிஞரும்..புலவரும்..


ஒரு கவிஞரும்  ஒரு புலவரும் சந்தித்து கொண்டபோது  புலவர் கேட்ட கேள்விகளுக்கு கவிஞர் சொன்ன பதில்...





புலவர்:- ..கவிஞரே! அரசியலில் மதம் கலக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...?

கவிஞர்:- அரசியலை குழி தோண்டி புதைக்க வேண்டும் புலவரே..!

புலவ:ர்- அரசுப்பணியில் சேர்பவர்களுக்கு தங்களின் அறிவுரை...??

கவிஞர்:- ஊழல் செய்யாமல் இருப்பது கட்டாயமில்லை என்பதுதான்....

புலவர்:- உலவு துறையின் தகவல் என்று சொன்னீர.. என்ன தகவல் கவிஞரே?

கவிஞர்:- ஓ ...அதுவா!!.... பேஸ்புக்கில் பயங்கரவாதிகள் ஊடூறுவி இருக்கிறார்களாம்...


புலவர்:.. நம் இளைஞர்கள் சாதிக்க முடியாமா...????

கவிஞ:ர்- நம் இளைஞர்களால் பேஸ்புக்கில் எதையும் சாதிக்க முடியும் புலவரே...!!!

 புலவர்:- கோதார் நாத் எதற்கு அழைக்கிறது  கவிஞரே..???

கவிஞர்::- இது தெரியாத புலவரே.. பரலோகம் செல்வதற்குத்தான்....

புலவர்:-  அயோத்தி யாத்திரையில் யார் கைது செய்யப்பட்டார்கள்???

கவிஞர்:-   ஆயிரத்து அறநூற்றி தொண்ணூறு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள் புலவரே...


புலவர்:,-   செலவுகளின் விலை உயர்வால் ஏழைகளுக்கு எது எட்டாது கவிஞரே...???


கவிஞர்:.--  நீ(தி)தான் எட்டாது புலவரே.....!!!

புலவர்:-  நன்றி! கவிஞரே..... தங்களுக்கு கிடைக்காத பொற்கிளி அரச சபையில் எனக்கு தருவதாக சொல்லி இருக்கிறார்கள்... அதை நான் வாங்கிக் கொண்டு வருகிறேன். விடை கொடுக்கவும்.

கவிஞர்:-  இப்பொழுது நான் கொடுத்தது எல்லாம் வடை அல்ல புலவரே!  விடைதான் சென்று வாரும் புலவரே....

1 கருத்து:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...