திங்கள் 12 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-10

வரும் வழியில்தான் தமிழ்மணத்தை பார்த்தேன். அதில் அறிமுகமான, தெரிந்திருந்த சிலரைத் தவிர... முன்னால் இன்னால் பதிவர்களைக் காணவில்லை...எல்லாம் புதியவர்களாக இருந்தார்கள். அவர்களின் தளத்துக்கு போய் பார்த்த்தால் 19ம் நூற்றாண்டில் எழுதிய பதிவாக இருக்கிறது. அதில் ஆப்பு வைத்துவிட்டார்களா? என்று மகிழ்ச்சி வேறு பீறிட்டு கிளம்பகிறது. இவை இப்படி இருக்க....
தமிழ் மணமும்..இப்போது.“.போன மச்சான் திரும்பி வந்தான் பூ...மனத்தோட”என்ற கதையாக புதுப்பிக்கப்பட்ட தேதியையும் நேரத்தையும் காட்டியபடி  இருக்கிறது..

முன்னோரு காலத்தில் மொய்க்கு மொய்யாய் பரந்துரைக்கப்பட்ட  இடுகைகளில்  ஒரு இடுகையையும் காணவில்லை....வசதியானவர்கள்தான் அதிக மொய்யில் பெயரும் புகழும் பெற்று விளங்கினர்.  மொய் விவகாரம் தமிழ் மணத்திற்கே அதிக இம்சையாக இருப்பதால் ....ஓட்டு பட்டையை நீக்கி  விட்டார்களோ..? என்று நிணைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்னால் தமிழ்மணத்தில் முதல்வனாக இருந்து வந்த ஜோக்காளியை  மர்மயோகிகளால் பின்னுக்கு தள்ளியதால்..மர்மயோகிகளின் இம்சைகளால் பிளக்கர் தளத்தை விட்டு வெளியேறி விட்ட. .பகவான் அவர்கள் இட்ட ஏவல்களால்.. தமிழ்மணத்தில் இருந்து வந்த இம்சைகள் நிறுத்தப்பட்டு, வேறு வகைகளில்  மீண்டும்  தமிழ்மண இம்சைகள்  தொடர்கின்றன.. என்று.எனது அறிவின் பின் சைடில் மூட்டை கட்டி வைத்துள்ள  ஒரு பகுதிக்கு படுகின்றன.....

என் வாழ்நாளில் பல தரப்பட்ட பல வகையான பல்வேறு இம்சைகளை தொடர்ந்து அனுபவித்து வருகிற காரணத்தால்  பத்தோடு பதினொன்றாக இல்லை பனிரெண்டாக தமிழ்மண இம்சையையும் அந்த வரிசையில் சேர்த்துக் கொண்டு.... பதிவு எழுத கம்யூட்டரில் இடம் கிடைக்காத காரணத்தால்  இந்த இம்சையை இத்துடன் நிறுத்திக் கொண்டு அடுத்த இம்சையின் அனுபவத்தை தொடருகிறேன்... 

7 கருத்துகள்:

  1. தமிழ்மண மொய்க்கு மொய் பற்றி அதிகம் அலட்டுவதில்லை))) இம்சை தொடரட்டும் !

    பதிலளிநீக்கு
  2. வந்து போனவர்கள் அதிகம் தான் யாரும் தங்கிவிடுவதில்லை இப்பூமியில்)))அது போலத்தான் திரட்டியும்!

    பதிலளிநீக்கு
  3. தமிழ் மணம் திரும்பவுமா,வரட்டுமே,,,/

    பதிலளிநீக்கு
  4. தமிழ் மணம் பட்டை அடிக்காமல் ஸாரி பட்டை இல்லாமல் வருவதே சிறப்பு என்று தோன்றுகிறது நண்பரே...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...