ஞாயிறு 01 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-42



Image result for அய்யோ








அண்ணே.!.என்னண்ணே!!
பாத்தா கூட பேசமாட்டுறிங்க
 என்னாச்சுண்ணே! ன்னு
கேட்குக்றீங்க.........

எனக்கு ஒன்னும்
ஆகலண்ணே ஆனதெல்லாம்
உங்களுக்குதாண்ணே...என்றால்..
ஹீ ஹீன்னு பல்ல காட்டுறீங்க

அத வச்சு உங்கட்ட
நாட்டு நடப்ப
பத்தி பேசுனா..
அய்யோ..கொம்மான்னு
அலறுறீங்க.. சரி..

அரசியல பத்தி
பேசுனா... ரெம்ப
அறுக்காதீங்கண்ணே
என்றீங்க.. என்
நிலைமையைச் சொன்னா
ஓவரா  புலம்பாதீங்கண்ணே
என்றீங்க.....வேற
எதைப் பத்திதான்
பேசுறதுன்னு ...யோசித்து
உங்களுக்கு பிடித்த
அந்தரங்களைப் பற்றி
பேசுனா..சும்மா
கதை விடாதேன்னு
கிண்டல் பண்ணுறீங்க

இப்ப எனக்கு
காதும் வேறு
சரிவர கேட்பதில்லை
அதனால..நீங்க
கசு கசு  முசுமுன்னு
பேசுறது என்னான்னு
எனக்கு புரிவதில்லை..


இதுக்கு மேல
நா.... உங்ககிட்ட
எண்ணத்த பேசுறது
அதனால ....தாண்ணே
உங்ககிட்ட பேசுறத
விட்டுட்டேன் அண்ணே...



1 கருத்து:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...