புதன் 08 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-61




மனதில்  உள்ளது....உள்ள படி................................ 





தமிழ் சமூகத்தை
சீரழித்த சதிகாரி
ஏ1 குற்றவாளி 
மரணித்த போது
ஏ1 குற்றவாளி மீது
கோபமும் வெறுப்பும்
தான் எனக்கு
அதிகமாக இருந்தது.
இன்னும் அந்த
கோபமும் வெறுப்பும்
மங்காமல் இருக்கிறது.


அதற்கு நேர்
மறாக அண்ணாவின்
தம்பியும் பெரியாரின்
தொண்டரும் ஆன
கலைஞர் மறைந்த
போது வருத்தமும்
அஞ்சலி செலுத்த
வேண்டும் என்ற
விருப்பமும் தான்
 மேலோங்கி நின்றது

அதற்கு காரணம்
என்ன என்று
கடவுள் மறுப்பு
கொள்கை உள்ளவர்களுக்கும்
கம்யூனிச புரட்சியாளர்களுக்கும்
 இந்த இருவர்களையும்
 ஆதாரித்து கரம்
கோர்ப்பவர்களுக்கு தெரியாமல் 
இருக்க சிறிதும்
வாய்ப்பே இல்லை..

அந்த அதே 
காரணத்தால் தமிழகத்தில் 
ஒரு மூலையில் 
இருப்புக்கும் வாழ்வுக்கும்
போராடிக்கொண்டிருக்கும் 
சிறு துறும்பான 
எனது ஆழ்ந்த 
வருத்தத்தையும் அஞ்சலியையும்
வயது மூப்பினால் 
இயற்கையின் மடியில் 
சேர்ந்து விட்ட 
கலைஞர் அவர்களுக்கு 
தெரிவித்துக் கொள்கிறேன்................






6 கருத்துகள்:

  1. நான் பார்ப்பானும் அல்ல வட இந்தியனும் அல்ல
    ஆனால் எனக்கு கருணாநிதி சாவு கொஞ்சம் கூட கவலை தரவில்லை
    தனிப்பட்ட பாதிப்பு காரணமாக இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கமெண்ட் போட்ட என்னுடைய பெயர் கோவை முத்துராஜா

      நீக்கு
  2. ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணம் அவருக்கு நிகழ்ந்தது நிகழ்ந்திருக்கிறது என்ற ஒரு எண்ணத்தை கொடுத்தாலும், ஒரு முதலமைச்சருக்கு இப்படி நிகழுமென்றால் ஒரு சாமாணியனின் வாழ்வு எத்தனை கொடுமைகளுக்கு ஆளாகுமென்ற அச்சத்தையும் விட்டுச் சென்றது. கலைஞருக்கு நான் செலுத்தும் அஞ்சலியெல்லாம் தமிழுக்கும் சமூக நீதிக்காக அவர் செய்த பங்களிப்புக்கும் தான், அவர் தமிழினத்திற்கு செய்யத் தவறிய காயத்தின் வலியும், ஊழலில் அவர்களின் பங்களிப்பால் தமிழகத்தை சீரழித்ததும் நெஞ்சை விட்டு நீங்கவே இல்லை.

    பதிலளிநீக்கு
  3. வாழ்வில் அனைத்தும் அனுபவித்து வாழ்ந்து இயற்கை எய்திய ஆன்மாவுக்கு எமது அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  4. கலைஞருக்கு கண்ணீர் அஞ்சலி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான அஞ்சலி.
    குற்றவாளி, சர்வாதிகாரி சதிகாரி போன்றவர் அல்ல கலைஞர்.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...