ஞாயிறு 26 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-75.

உண்மையும் பொய்யும்.........




Image result for சொர்க்கம் நரகம்





நான் பிறந்தது உண்மை
நீ என் முன் இருப்பது உண்மை
நான் உண்டதும் உண்மை
நீ அவசரமாய்  போய் பேண்டதும் உண்மை
நான் உன்னிடம் கடன் வாங்கியதும் உண்மை
நீ கொடுத்த கடனுக்கு நான் வட்டி கட்டினதும் உண்மை
 நான் உன்னிடம் ஏமாந்தது உண்மை
நீ என்னை ஏமாற்றியதும் உண்மை
உனக்கு முன்னோ பின்னோ நான் சாவதும் உண்மை
நீ சாவதும் உண்மை..ஆனால்  சாகும்போது
அநியாயம் செய்தவன்  நரகத்துக்கும்
நேர்மையாய் இருந்தவன் சொர்க்கத்துக்கும்
போவான் என்பது மட்டும் பொய்..பொய்...
 நரகம் என்று ஒன்று இருந்தால் அநியாயம் செய்வதற்கு
அநியாயக்காரன் பயப்பட வேண்டுமல்லவா..
பொய் வழக்கு போடுபவன். பொய்யாய் தீர்ப்பு
சொல்றவன், தேர்தலில் பொய் வாக்குறுதி
சொல்பவன். கொலைகாரன் கொள்ளைக்காரன்
போன்ற அநியாயக்காரன்கள் நரகத்தை கண்டு
பயப்பட வேண்டமல்லவா...யாரும் பயம்படாமல்
துணிந்தல்லவா அநியாயம் செய்கிறார்கள்.


உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன்
நான் வாழும்போது ஒரு தடவையாவது
அந்தச் சொர்க்கத்தை கண்டறியவில்லை
 என் வாழ்க்கையில் ஒரு தடவைகூட
கண்டறியாத அந்தச் சொர்க்கத்தை
நான் செத்த பிறகு சொர்க்கம் போவேன்
என்று கூறுவது கடந்தெடுத்த அயோக்கனின் பித்தலாட்டம்
 இல்லாமல் வேறு என்னவென்று சொல்வது.........


2 கருத்துகள்:

  1. சொர்க்கம் நரகம் என்பதெல்லாம், வலியவர்கள் வறியவர்களின் ஏக்கம் தீர்க்க செய்து வைத்த ஏற்பாடுதானே

    பதிலளிநீக்கு
  2. //நான் செத்த பிறகு சொர்க்கம் போவேன்
    என்று கூறுவது கடந்தெடுத்த அயோக்கனின் பித்தலாட்டம்
    இல்லாமல் வேறு என்னவென்று சொல்வது.........//
    முற்றிலும் உண்மை.
    உயிர்வாழும் காலத்தில் நல்லதை செய்யாத கடவுள், அவரை வணங்கி வந்தால் இறந்த பின்பு சொர்க்கத்திற்கு கொண்டு செல்வாராம்.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...