வியாழன் 11 2018

நினைவலைகள்-4.

இளைப்பாற ஒரு போக்கிடம் ........


Related image






எனை   ஈன்று
வளர்த்த கடனுக்காக

அந்தக் கடனை
அடைக்க தாயுடன்
பாரம் சுமந்தேன்.

குடும்ப பாரத்தின்
சுமை தாளாமல்
இடையில் தாய்
விடை பெற்றுக்
கொள்ள தனியாய்
 நான் சுமந்தேன்.

தனியாய் சுமந்ததால்
பாரம் பெரும்
சுமையாகி மேலும்
எனை அழுத்த....

சுமையான பாரத்தை
இறக்கவும் வழியில்லை
பாரத்திலிருந்து விடுபட்டு
இளைப்பாறவும் ஒரு
போக்கிடம் இல்லை.

இப் பிறப்பில்
போக்கிடம் இல்லாத
போது மறுபிறப்பில்
கிடைக்கும் என்பதற்கு
உத்தரவாதம் ஏது....???

2 கருத்துகள்:

  1. பலருடைய நிலைப்பாடு இதுதான் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. தங்களிடம் வந்து திருமுழுக்கு பெற்றால் சொர்க்கம் செல்லலாம் என்று மதவாதிகள் ஆசை மட்டும் காட்டி ஏமாற்றுவார்கள்.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...