வெள்ளி 26 2018

நினைவலைகள்-9












ஒரு நண்பன் கதை சொன்னான்....


ஒரு நண்பன் கதை சொன்னான் க்கான பட முடிவு







என்னடா..உங்க ஏரியாக்கார ஆம்பள- பொம்பளங்க..இவ்வளவு மட்டமா நடந்திறாங்க....சே..என்ன ஜென்மம்ட..அவிங்க......நானும் எனது அனுபவத்தில் பல ஏரியாக்கார சனங்களை பார்த்திருக்கேன்..உங்க ஏரியாக் கார பக்கிககள் மாதிரி எவனையும் -எவளையும் நான் பார்த்ததில்லைடா....எப்படிடா...நீ.. இத்தனை..வருடம் அந்தப் பக்கிகளோடு  மல்லுக்கட்டி வருகிற  .... இப்பத்தாண்டா  எனக்கு புரியுது....

வந்துட்டு போற..எனக்கே... இவ்வளவு சிரமம்ன்னா.... உனக்கு எவ்வளவு சிரமம் இருக்குதுன்னு.. இப்போதுதான்டா புரியுது.. ஸாரிடா..இத்தனை நாளா...உன்னை திட்டினது மனதுக்கு ரெம்பவும் வேதனையாக இருக்குதுடா...


உன் தெரு பக்கிகள் உனக்கு தரும் சிரமம்களை என்னிடம் சொல்லும்போது ..உன்னை புலம்பல்காரானாக பார்த்தேன்டா....என்னடா..இவன் எப்பப் பார்த்தாலும்..ஏரியாக்காரன்கள் தொடுக்கும் இம்சைகளை சொல்லி நம்மை கொல்லுறானே என்றுதான் மற்றவர்களிடம் சொல்லியிறுக்கிறேன். மற்றவர்கள் உன்னைப்பற்றி  பெருமையாக சொல்லும்போது... நான் செவிமெடத்ததுதில்லை..........


என்னைப்போல் உனக்கும் வாய்ப்பும் வசதியும் இருந்தால் நீ..ஏன்? அந்தப் பக்கிகளின் ஏரியாவில் இருக்கப்போகிறாய் என்று நினைத்தேன்....ஒரு கட்டத்தில் உன்னிடம் எதார்த்தமாக நான் கேட்டபோது....

. நீ சொன்னதுதான் நினைவுக்கு வந்தது..... விபரம் தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை  குடியிறுக்கும் வீட்டிற்க்காகவும் இடத்திற்க்காகவும் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். போராட்டம்தான் முடிவுக்கு வரவில்லை  என்று...போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து செல்வதற்கு  முதல் காரணமாக இருப்பது .. வருவாய்துறையும் அதனுடன் சேர்ந்த மாநகராட்சியும். பொய்புகார் என்று தெரிந்தும். நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் போலிசும்தான்..இதோடு சவ்வே அறுந்து போகுமளவுக்கு வழக்கை இழுத்துச் செல்லும் நீதிமன்றமும்தான் என்று சொன்னது..

எனது பிரச்சினையின் போதுதான் எனக்கு புரிந்தது. நண்பா...உனது பிரச்சனை..

உன் பாசையில் சொல்வதென்றால் இப்போது புரிந்து என்ன செய்ய..என்று நீ சொல்வது என்  மண்டையில்  நீ கொட்டுவது போல்.  இருக்கிறது...


அப்போது சொன்னது புரியவில்லை..நேரடி அனுபவத்தின் போதுதான் அதன் உண்மை தெரிகிறது....

எனது பிரச்சினையில் என் உறவுகளின் பலமும் பணபலமும் இருப்பதால் இழு இழு..வென்று இழுத்துக் கொண்டே சென்ற எனது பிரச்சினை ஒரு கட்டத்தில் ஒரு  கட்டத்தில் முடிவுக்கு வந்தது.

உன்னோட பிரச்சினை ஏன்? முடிவுக்கு வராமல் இருக்கிறது. என்பதும் அதன் காரணமும் நீ சொன்னதின் உண்மை தெரிந்தது. நண்பா.... உன்னை ஊதாசீனப்படத்தியதையும்... கேலி கிண்டல் செய்ததையும் மனதில் வைத்துக் கொள்ளாதே... என்னை மன்னித்துவிடு.....

நீ பட்ட கஷ்ட நஷ்டங்களை நான் பட்டதில்லை... யாருடைய ஆதரவும் உதவியும் இன்றி இந்தளவுக்கு நீ வந்திருக்கிறாய். என்றால்..அதற்க்கு பின்னால் இருக்கின்ற உழைப்பும் வலியும் எவ்வளவு என்று என் அனுபவத்தால் புரிந்து கொண்டேன்..இதையும் உன் வலைப்பதிவில் பதிவிடுவாய் என்று தெரியும்.. பதிவிட்டவுடன் முடிந்துவிட்டது என்று எண்ணிவிடாதே!. என்னால் உனக்கு தேவையான உதவியை கண்டிப்பாக செய்வேன் நண்பா.....என்னை மறந்தவிடாதே!.... புறக்கணித்து விடாதே!..

6 கருத்துகள்:

  1. துன்பமும் துயரமும் அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும் தெரியும்

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...