திங்கள் 13 2019

அதிகாலை கனவு-16.

படுத்த இடம் .. எழுந்த இடம்  வேற வேற........!!!!!!!!!!!!!


பொதிகை ரயில் க்கான பட முடிவு






பன்னிரெண்டு மணிக்கு படுத்தும் மூன்று மணிவரை தூக்கம் வரவில்லை... காற்றாடி  காற்று வீசியும் புழுக்கம் தாள முடியவில்லை.. மேலுக்கு சிறிது தண்ணீர ஊத்திவிட்டு படுக்கலாம் என்றால் உடல் அசதியில் மனது சோம்பலாகி விட்டது. எழுந்திருக்க முடியவில்லை.. போதாதக்குறைக்கு தண்ணீர் பற்றாக்குறை  முழுபசியா இருக்கிறவன் விட அரைகுறை பசியா இருக்கிறவன் தூங்கமாட்டான் என்கிறமாதிரி என் நிலைமை ஆகிப் போச்சு..
எப்படியும் தூக்கம் வந்திடும் என்ற நம்பிக்கையில்  ஒன்னுலிருந்து ஆயிரம் வரைக்கும் மனதிற்குள்ளே  எண்ண ஆரம்பித்தேன்...


எதுவரை எண்ணுனேனோ தெரியவில்லை...தூங்கிவிட்டேன்.......மதுரை ஜங்சனில் நிற்கிறேன் பொதிகை எக்ஸ்பிரஸ் வந்து நிற்கிறது...எஸ்2 என்ற ட்ரக்கைில் ஏறுகிறேன்..இருப்பதைந்தாம் இருக்கையில் அமருகிறேன். எதிர் சீட்டில் கல்லூரி மாணவி தன் லேப்டாப்பில்  டைப் செய்து கொண்டு இருக்கிறது. அந்தப் பெண்ணிடம்  என் செல்போனை காட்டி இந்த சீட் சரியா என்று கேட்கிறேன். அந்த மாணவி செல்போனை வாங்கி பார்த்துவிட்டு இதுதான் என்று உறுதி படித்தியது.

அதற்குப்பின் அருகில் வந்தமர்ந்த ஊனமுற்ற ஒருவர். மேலே படுத்துக் கொள்கிறீர்களா? என்று கேட்கிறார். அதற்கு அர்த்தம் எதுவும் தெரியாமல் இல்லை வேண்டாம் நான் கீழேயே படுத்துக் கொள்கிறேன். என்று சொல்லி விட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை... இருட்டையே பார்த்துக் கொண்டு வந்த எனக்கு  விபத்தில் விழுந்த இடம் என் அருகில் தெரிந்து கடந்தது தெரிந்தது.

பக்கத்தில் அமர்திருந்தவர்கள் படுக்கலாமே என்றார்கள்.... ஓ..படுக்கலாமே என்றுவிட்டு.. நான் அமர்நதிருந்த சீட்டிலே படுத்துக் கொண்டேன்..நீ....ங்க எங்க போகனும் என்று கேட்டார்கள். ஒரு அம்மா...... எதோ சொன்னேன் என்ன சொன்னேன் என்று தெரியவில்லை....

என் கன்னத்தையும்  கையையும் தட்டி..மாமா..மாமா என்று தட்டி எழுப்பினான் மருமகனின் பள்ளித்தோழனான மகா கிருஷ்ண கோபாலன்...என்ன மாமா இப்படி தூங்குறிங்க...மணி ஒன்பதாகப்போகிறது மாமா...என்றான்...

ஓ...வேலயத்தான்ய்யா முடிச்சுட்டு படுக்கிறதுக்கு ஒரு மணிக்கு மேல ஆச்சு...அதான் இப்படி தூக்கம் என்றதும்.....அங்க படுத்து இருக்கிற உன் ஆளப்போயி எழுப்பு என்றதும் மகா கிருஷ்ண கோபாலன் தன் நண்பனை எழுப்ப போய்விட்டான்....

என்னடா..இது நாம ரயில்ல போய்கிட்டுல்ல தூங்கிட்டு இருந்தோம்.....  மகா வந்து எழுப்புல.... இங்க படுத்து கிடக்கோம்... படுக்கையை விட்டு அமர்ந்திருந்த நான் எழுந்திருக்க சில நேரமாகிவிட்டது.... பாட்டுபாடவும் சாமி கும்பிடவும் அருள் வந்த பிறகுதான் தடாபுடலாக எழுந்திருச்சு ஓட வேண்டியதாகிவிட்டது.

4 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...