புதன் 20 2017

கெட்டவர்களுக்கும் நல்லவர்களுக்குமுள்ள வேறுபாடு




கவிதை க்கான பட முடிவு
நன்றி!       




அண்ணே.....  நீங்க கவித எழுதுவீங்களாமே.......?

எவன்டா  சொன்னது......

அதோ அங்கன உக்காந்து இருக்காங்கள அவுங்கதாண்ணே...!!!!!!1

 ஓ...........அந்த கும்பலா..........??

ஆமாண்ணே.... எனக்கு ஒரு கவித எழுதிக் கொடுங்கண்ணே.....

அந்தக் கும்பல் என்னிடம் உன்ன எழுதிச் தரச் சொன்னாங்களா....?

ம்ம்ம்.....ஆமாண்ணே........இன்.....இல்லேண்ணே......

டேய்...பயப்படாத....ரெடிமேடா உனக்கு எழுதி தர்ரேன்.அதை அந்த கும்பலிடம் படித்து காட்டுவியா...?ஃ

சரிண்ணே............

சரி..பேனா..வச்சிருக்கியா...? பேப்பரு.......?

இந்தா வாங்கிட்டு வர்ரேண்ணே......

சரி.....நான்  சொல்லச் சொல்ல  நீயே எழுது..

ம்ம்ம்  சரிண்ணே.............

” கெட்டவர்கள் ஒன்று
சேர்ந்தால் அது
கும்பல் எனப்படும்..

-எழுதிட்டியா..? அடுத்து   எடம் விட்டு எழுதுடா...?

நல்லவர்கள் ஒன்று
சேரந்தால் அவை
அமைப்பு என்றழைக்கப்படும்

- அடுத்து எடம் விடு.....

சரிண்ணே......

கும்பல்களில் ஒருவகை
ஆட்சி செய்தால்
மக்களின் உரிமைகளை
பறிக்கும் ஊழலில்
திளைக்கும் கும்மாளத்தில்
ஆட்டம் போடும்.......

 பல அமைப்புகள்
இருப்பவைகள்  சில
மக்கள் உரிமைக்காக
போராடும் கைது
சிறை என்று
இம்சை படும்

இது நல்லவர்களுக்கும்
கெட்டவர்களுக்கும் உள்ள
வேறுபாடு......

படித்துப் பாருடா......

படிச்சிட்டேண்ணே....

எதுவும் புரியுதா...?

கொஞ்சம் புரியுதுண்ணே....

சரி.... அந்த கும்பல்கிட்ட படிச்சு காமி....அவிங்கிட்டயே அர்த்தம் என்னான்னு கேளு.....மத்தெதல்லாம்  நாளபின்னக்கி பாத்துகிரலாம் போடா...

சரிண்ணே.....

1 கருத்து:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...