சனி 13 2021

அவர்கள் காசு யாருக்கு வேணும்.........!!!!!!!!

 



காலை வேளையில்

நகரத்தின் ஒரு

தெருவில் சண்டை

சச்சரவு..........


ஏன் ? சண்டை

எதற்கு சச்சரவு

வேடிக்கை பார்த்த

போது கேட்டது...


“ நான்  தேவடியாள்தான்

அதுக்காக அவன்கள்

கொடுக்கிற காசுக்காக

வாறவன் போறவன்

கிட்ட எல்லாம்

படுக்க முடியுமா..???"


சண்டையில் வந்த

 அந்த வார்த்தை

வாறவன் போறவன்

யார் ? என்றால்

கீழ்சாதி  பயல்களாம்.


அவர்களும் காசு

கொடுத்துதானே....!!!


“ அவர்கள் காசு

யாருக்கு வேணும்......"

 

சற்று நேரத்தில்

பார்வை திசை

மாறிய  போது.......


“என்னங்கடா  வேடிக்கை

நான் இங்கே..

அவுத்து போட்டா

ஆடுறேன்  போங்கடா..

ஒங்க சோலிய

பாத்துகிட்டு................!


காலையிலேயே  வெயில்

சுட்டெரித்து விட்டது







2 கருத்துகள்:

  1. காலையில் கேட்பதற்கு தகுந்த நல்ல வாக்கியங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தமிட்டு பேசியதால் காதுல..கேட்டுருச்சு..நண்பரே!!!

      நீக்கு

இந்த படம் ஒன்றே போதும்

  நண்பர் கில்லரின் கோடாரி எதற்கு என்பதற்கும். மரங்களின் நம்பிக்கைக்கும் இந்த ஒரு படமே சான்று