ஞாயிறு 11 2013

நாடறிந்த உண்மையை மூடி மறைக்கும் இந்திய பிரதமர் கிரிமினல் அலுவலகம்.....



போபால்  நச்சு வாயுப் படுகொலையை பற்றி ஒப்புக்குக்கூட நாடறிந்த உண்மையை தெரிவிப்பதற்கு பிரதமர் அலுவலகம்  தயாராக இல்லை.இதிலிருந்து

இந்தியாவுக்கான பிரதமர் அலுவலகம் இல்லை, இது அமெரிக்காவுக்கான அமெரிக்க அலுவலகம் என்பதையே பறைசாற்றுகிறது.

போபால் விஷவாயு படுகொலையில் நாடறிந்த உண்மைகள் எதுவும் இல்லை என்றும்,நேற்றுதான் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து இறங்கி பணிபரிவது போலவும்   இந்திய பிரதம அலுவலகம் நடிக்கிறது..

நாடறிந்த உண்மைகள் இதோ,....

 1975-ல் அவசர காலத்தில் தொழில் அமைச்சகத்தின் ஆட்சேபத்தை மீறி இந்த ஆலைக்கு உரிம்ம் வழங்கியது மட்டுமின்றி ஆராய்ச்சி என்ற பெயரில் ஆலைக்குள் இரகசியமாக இரசாயனப் பரிசோதனைகள் நடத்துவதற்கும் அனுமதி அளித்த்து இந்தியாதான் இந்திரா-வின அரசு. 

இந்த ஆலையை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும் என்று கூறிய நகராட்சி அதிகாரியை அங்கிருந்து தூக்கியடித்தவர் அன்றைய மத்திய பிரதேச முதல்வர் அர்ஜூனசிங்

அமெரிக்காவிலிருந்து வந்து இறங்கிய ஆண்டர்சனை போலீசு கைது செய்தவுடனே.தலையிட்டு பிணையில் விடுவித்தவுடன,அரசின் தனி விமானத்தில் டெல்லிக்கு வரவழைத்து, ஆண்டர்சனிடம் மன்னிப்பும் கேட்டு, அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் ராஜீவ்காந்தி. இதனா ல்தான் செத்துப்பொனவனெல்லாம் உத்தமன் அல்ல என்று குறிப்பிடப் படுகிறது.

“ஆலையை பார்வையிட ஆண்டர்சன் வருகிறார். அவரை பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அரசு கூறியது. நாம் உத்தரவாதம் கொடுத்தோம் என்று கூறியிருக்கிறார் அன்றைய வெளியுறவுத்துறைச் செயலர் ரஸ்கோத்ரா. 

“வெளியுறவுத்துறையின் நிர்ப்பந்தத்தினால்தான் ஆண்டர்சனை விடுவித்தோம் என்று பேட்டி கொடுத்திருக்கிறார் இவ் வழக்கை கையாண்ட சி.பி.ஐ. அதிகாரி லால். 

ஆனால் 1984இல் ஆண் டர்சன் வந்து போனதற்கு எவ்வித ஆவணச்சான்றுஇல்லை என்று அப்பவே, கொட்டை போட்டஉள்துறை அமைச்சாக இருந்த ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். 

ஆனால்,செத்தப்போன உத்தமன் ராஜீவுக்கு இது பற்றிஎல்லாம் எதுவுமே தெரியாது என்று சாதித்து இருக்கிறது. காங்கிரஸ்கட்சி.

அப்பவே கொட்டை போட்ட இந்த கிரிமினல்கள் புளுகி தள்ளியிருக்கிறார்கள். இப்பொழுது அவர்கள் அரசாங்கமும் அவர்களின் அலுவலகமும் இதைத்தான் புளுகித்தள்ளமுடியும்.

நம்வே முடியாத அளவுக்கு நயவஞ்சகமான முறையில் இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும்  காங்கிரசு கட்சியும் பிஜேபியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்கான துரோகம் இழைத்திழத்திருக்கின்றன. அதற்க்கான  

 தகவல் மற்றும் ஆதாரத்துக்கு படியுங்கள். மேற்க்காணும் புத்தகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...