திங்கள் 27 2014

அங்கே நடந்தது..இங்கே (தமிழ்நாட்டில்) நடக்காதது.




மக்களின் தீர்ப்பு:
உக்ரைன் நாட்டில், ஊழல் புரிந்த அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பிடித்து, குப்பைத் தொட்டிக்குள் வீசியெறியும் பொது மக்கள். நம்நாட்டு மக்களுக்கு எப்போது இது போன்ற அரசியல் விழிப்புணர்வு தோன்றும்?

பிற்குறிப்பு: இணையத்தில் உலாவும் இந்தப் படங்களை, ஒரு நெதர்லாந்து தினசரிப் பத்திரிகை பிரசுரித்திருந்தது (NRC, 25-26 oct. 2014). இந்தப் படங்கள் உக்ரைனின் எந்தப் பகுதியில் எடுக்கப் பட்டன என்ற விபரங்கள் கொடுக்கப் படவில்லை.

LikeLike ·  · பகிர்







10 கருத்துகள்:

  1. நீங்கள் இதையெல்லாம் முன்கூட்டியே சொல்லிவிட்டால் குப்பைத் தொட்டிகளை எல்லாம் பெரிதாக்கி ஏசி பொருத்திவிடப்போகிறார்கள் அய்யா!
    த ம1

    பதிலளிநீக்கு
  2. உக்ரைன் மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பு உக்கிரமமானது என்றாலும் வரவேற்புக்குரியதே!
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. இங்கே ஊழல் புரிந்து தண்டணை பெற்றவரை போற்றி கொண்டாடினரே! ஊழல் புரிந்ததிற்கு தண்டணையா என்று நியாயமும் அல்லவா பேசினார்கள்.

    பதிலளிநீக்கு
  4. நம்ம இலங்கையிலும்
    இப்படி நடந்தால் எப்படி இருக்குமென
    எண்ணிப் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. சத்தியம் தவறாத மக்களாக இருப்பதனால்தான் இங்கு நடக்க சாத்தியமே இல்லையென்று சொல்கிறீர்களா ?? நண்பா......!!

    பதிலளிநீக்கு
  6. கக்கூஸ்க்கே ஏ.சி இருக்கும்போது குப்பைத் தொட்டிக்கு ஏ.சி போடாமல் விட்டுவிடமாட்டார்கள் .நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் ஊமைக்கனவுகள் அய்யா...

    பதிலளிநீக்கு
  7. அடித்து கையை..காலை உடைத்தால்தானே உக்கிரமானது.அதைவிட இது அவ்வளவு உக்கிரமானது இல்லை பகவான்ஜீ

    பதிலளிநீக்கு
  8. அதுதான் நன்றி மறவாத அடிமை மக்கள் என்று கின்னஸ் புத்தகத்தில் எறிவிட்டதே... வேக நரியாரே....

    பதிலளிநீக்கு
  9. இனி எண்ணிப் பார்த்து என்ன செய்ய..பலமுறை கத்தி கத்தி பார்த்தவர்களும் செவிடனாக நடித்தவர்களும் ஊதிய சங்காகி போய்விட்டார்கள். இலங்கையில் வாழ்ந்தவர்களெல்லாம் திக்குக்கு ஒன்றாக சிதறிவிட்டார்கள்.....

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...