சனி 25 2017

மேற்கில் தோன்றிய அகிம்சையும் தெற்கில் மறைந்த இம்சையும்..

சார்.... வணக்கம் ...

வணக்கம்..சார்.....

நலமா...?சார்.....

நலம் சார்...... நீங்க நலமா சார்..??ஃ

நலம் சார்.....

நல்லது சார்....... ம்.ம்..நாட்டு நடப்பு வீட்டு நடப்பு பற்றிய செய்தி எதுவும் இருக்கா..சார்...

ஓ.......இருக்கே....

அப்ப சொல்லுங்க.....சார்.....

அப்படியே பதிவுல போட்டுவிடுவிங்களே...சார்..

 நாட்டு நடப்பதானே சார்....பரவாயில்ல  சொல்லுங்க......சார்

சரி  சார்.... இதுக்கு பதில சொல்லுங்க...... மாட்டின் லூதர் கிங்குக்கு கொடுத்த நோபல் பரிசு, ஏன் சார்....நம்ம காந்திக்கு கொடுக்கல....

என்ன சார் இது அநியாயமா......இருக்கு காந்திய நம்ம காந்தியின்னு சொல்றீங்க..... ஒங்க காந்தின்னு சொல்லுங்க..... நீங்க தானே  காந்தி மன்றத்தில இருக்கீங்க......

அய்யோ...சாரி சார்......  காந்திக்கு... ஏன்? சார்... அந்த நோபல் பரிசு கொடுக்கல...


நோபல் பரிசு கொடுக்கும் குழுவில நான் இல்லையே சார்......

ஹா...ஹா....ஹா........ஆமா..நீங்க இருந்தாலும்.... காந்திக்கு கொடுத்திட்டுத்தான் மறு வேல பாப்பிங்க..........

தெரியுதுல சார்.... நானே கொடுக்க மாட்டேன்னு  சொல்றேன்..... கொஞ்சம்....அவகாசம் கொடுங்க. அவிங்க..ஏன்? உங்க காந்திக்கு நேபால் பரிசு கொடுக்கலன்னு சொல்லிவிடுகிறேன்....  எனக்கு.சட்டுபட்னு எனக்கு உடனே வராது ?யோசித்துக்கிறேன் சார்......

நல்லாவே யோசிங்க.......அதுவரைக்கும்  வாங்க அந்த டீக் கடையில போயி டீயக் குடிப்போம்.

சார்..ஒரு கன்டீசன்...நான்  டீ குடிப்பதில்லை...உங்க கூட வேனா சும்மா வர்ரேன்... வந்து  நீங்க டீய குடிக்கிறத பாத்துகிட்டு நிக்கிறேன்... நான் பார்க்கிறதனால  உங்களுக்கு வயிறு வலிக்கும் என்று பயந்தால்.... நீங்க டீ குடிச்சுட்டு வர்ர வரைக்கும் இங்கயே நிக்கிறேன்....

அய்யோ....நீங்க டீயே குடிக்க வேணாம்    சும்மா.. வாங்க......சார்...

.அப்ப சரி..சார்..........

வடை, பிஸ்கட் எதாவது.........

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்  சார்.......நீங்க டீய குடிச்சுகிட்டே  நான் சொல்றத கவனிங்க......

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி......   எந்த ஆண்டு என்று .. சரியாக தெரியவில்லை.. அமெரிக்காவின் வாஷிங்டனில்  நடந்த ஒரு அமைதிப்பேரணியில் மார்ட்டின் லூதர் கிங் ஒரு சொற்பொழிவு ஒன்றை ஆற்றினார்..அதில்

“எனக்கு ஒரு கனவு உண்டு. அந்தக் கனவில்.. ஒருநாள் இந்த தேசத்தில் என்னுடைய நான்கு பிள்ளைகளும், அவர்களுடைய தோல் நிறத்தின் அடிப்படையில் இல்லாமல் அவர்களுடைய குணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுவா்கள்.. என்றாவது ஒருநாளில் வெள்ளையின சிறுவர்களும், கறுப்பின சிறுவர்களும் கைகோர்த்து  நடப்பார்கள் ”என்று பேசினார்  சார்...

அந்தசொற்பொழிவானது உலகம் முழுக்க உள்ள கோடிக்கணக்கான கறுப்பின மக்களையும்அடிமைத்தனத்தில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டு இருந்த இனக் குழுக்களையும் ஒரு சேர எழுச்சி அடைய செய்து புகழ் பெற்று விளங்கியது சார்.....

அவருடை கால கட்டத்தில் ஆதிக்கம் செய்யும் அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு சம உரிமை  இல்லாமல் இருந்தது. உதாரணமாக சொல்வதென்றால்... வெள்ளையர்கள் ஏறும் பேருந்தில் கறுப்பா்கள் ஏறக்கூடாது.பொது இடங்களில் வெள்ளையர்கள் அமரும் இடங்களில் கறுப்பர்கள் அமரக்கூடாது.. கறுப்பர்கள் உட்காருவதற்கு தனி இடங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் இப்படி பல கடுமையான கட்டுப்பாடுகள்... கொடுமைகள்..


கட்டுப்பாடுகளை மீறினால் அடியும் உதையும் கூடவே சிறைத்தண்டனையும் வழங்கினார்கள் வெள்ளையர்கள். கறுப்பர்களுக்கு  சம உரிமை மறுக்கப்கட்ட நிலையில்தான் கிறிஸ்துவ பாதிரியராக இருந்த மார்ட்டின் லூதர் கிங்  கறுப்பர்களின் சம உரிமைக்கான போராட்டங்களில் வன்முறை தலை எடுக்க முடியாதபடி கவனமாக தொடர்ச்சியாக போரட்டம் நடத்தினார். வெற்றியும் பெற்றார்.

அவருடைய போராட்டத்தால் 1965ம் ஆண்டு கறுப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது.அதோடு கறுப்பினத்தவரும் வெள்ளையினத்தவரும் சமம் என்ற மனித உரிமைச் சட்டம் நிறைவேறியது.
கறுப்பினத்தவர்களின் சம உரிமைக்கு பாடுபட்டதால் மார்ட்டின் லூதர் கிங்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.  

மார்ட்டின் லூதர் கிங்   சமூக நீதியின் காவலராக  செயல் பட்டதினால் ஆத்திரமுற்ற வெள்ளையின வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அது மாதிரிதானே..சார் ...காந்தியும் இந்து மத வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார்...........


இருங்க...இருங்க....சொல்லிக்கிட்டே வர்றேன்....சார்.....  இதுவரைக்கும் சொன்னது  மேற்கில் தோன்றிய அகிம்சை வாதி மாரட்டின் லூதர் கிங்

இனி. தெற்கில் மறைந்தவரை சொல்கிறேன் கேளுங்கள் .சார்...

ஒரு  பானைக்கு ஒரு சோறு மாதிரி .பலவற்றில். குறிப்பா ஒரு நிகழ்ச்சி மட்டும் சொல்றேன்....இரண்டாம் ஒலகப் போரின் போது . இந்திய மக்களை  ..அடிமை படுத்தி ஆண்ட பிரிட்டீஸ் அரசாங்கம் அந்த போரில் ஈடுபட்டது. அந்த சமயத்தில்  மோகன்தாஸ் காந்தி.. அந்தப் போரைப் பயன்படுத்தி அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்களை மீட்காமல்.... அந்த உலகப் போரில் பிரிட்டீஷ் அரசாங்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்க்காக..இந்திய மக்கள் அறுபதாயிரம் பேரை திரட்டி பிரிட்டீஷ. இராணுவத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுத்தார்.சார்

கரம்சந்த் காந்தி ஆள்பிடித்து சேர்த்த 60,000 பேர்களை பெற்றுக் கொண்ட பிரிட்டீஷ் இராணுவம் மற்றும் பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள்  ..இந்திய வீரர்களுக்கு இராணுவ பயிற்சி அளித்தால் நாளைக்கு நமது ஆட்சிக்கு எதிராக திரும்பி விடுவார்கள் என்ற பயத்தினால் காந்தி பிடித்துக் கொடுத்து 60,000பேர்களுக்கு பயிறிச்சி எதுவும் கொடுக்காமல் போரில் ஈடுபத்தி அநியாயமாக அவர்களை இட்லரின் நாஜி படைகளுக்கு பலி கொடுத்துவிட்டது சார்....

இதோடு மேற்கில் தோன்றிய அகிம்சையைப்போல்..சம உரிமை காவலராக இல்லாமல் பிரிட்டீஷ்காரர்களின் ஆட்சியில் அடிமைபட்டு கிடந்த தன் நாட்டு மக்களின் ஒருப் பிரிவினரைகளை “அரிசன்” என அதாவதுஅரியின் புதல்வர்கள் என்றுபிரித்து வைத்தார்.  ஏற்கனவே இருந்து வந்த இந்துமத தீவிரவாதிகளைப் பிரித்து  இந்து மத காவலானாக தன்னை முன்னிறுத்த முயன்தால்..வெறுப்படைந்த இந்துமத திவிரவாதிகளின் ஒருவன் இவரை சுட்டுக் கொன்றான்.சார்

மேற்கில் தோன்றிய அகிம்சையும்..தெற்கில் மறைந்த இம்சையும் சாவில் ஒற்றுமை இருந்தாலும்...  மேற்கில் தோன்றிய அகிம்சையைப்போல்  தன்நாட்டு மக்களை காப்பாற்றாமல்   அடக்கி ஆண்டவர்களுக்கு பாடுபட்டதால்  தெற்கில் மறைந்த இம்சை வாதிக்கு நோபல் கொடுக்கல சார்...........



நான் சொன்னவற்றை  மனதில் வைத்துக் கொண்டு ..உங்கள்  மன்ற தலைகளிடம் கேளுங்க சார். அவர்கள் சொல்வதையும் கேட்டு எது சரியென்று நீங்கள் முடிவு எடுங்கள்... ஏன்? காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லை என்று.. தெரியும் அப்புறம் நாம சந்திக்கும்போது தர்க்கம் பன்னலாம்... சார்

எப்படி சார்....இப்படியெல்லாம் சிந்திக்கிறிங்க...............

அய்யோ....எனக்கு அம்புட்டு எல்லாம் அறிவு இல்லீங்க சார்...  படித்தத...கேட்டத... அப்படியே ஒங்ககிட்ட சொல்றென் சார்...........

வரவா...சார்..............

நல்லது சார்...வாங்க....



2 கருத்துகள்:

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...