ஞாயிறு 09 2018

நினைவலைகள்-35.

 திட்டும்  பின்அறிவுரையும்.




யாரைப் பற்றியும் பொருட்படுத்தாமல் அவர். அவனை திட்டிக் கொண்டு இருந்தார். சமாதனம் செய்யப்  போகிற வரையும் திட்டி தீர்ப்பதோடு சில கேள்வியோடு உத்தரவாதம் கேட்ப்பதால்  ..அவர் திட்டும்போது யாரும் ஊடே போவதில்லை.. அவராக பார்த்து எதாவது கேட்டால் என்னவென்று எதுவும் புரியாமல்  அவருக்கு சார்பாக தலையை ஆட்டிவிட்டு ஒதுங்கி கொண்டனர்.

இது வழமையாக நடந்து கொண்டிருக்கும்போல....அன்று நடந்த திட்டில் நான் மாட்டிக் கொண்டேன்..அவர் கேட்ட எல்லாவற்றுக்கும் சளைக்காமல் பதில் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டவர். அவர் தன் மகனை அன்றிலிருந்து தன் மகனை திட்டுவதையே விட்டு விட்டார்.

என்னைப்பற்றி விசாரித்தவர்...நான் என்னைப் பற்றி உள்ளதை சொன்னதைக் கேட்டு வியப்பால் ஆச்சரியமானார்.. இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தனா...? என்று நம்ப முடியாமல் வியந்தார். என்னைப்பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்தாரோ அல்லது நான் சொல்லியது உண்மைதான் என்று நம்பிக் கொண்டாரா..என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால்  ...திட்டுவதை குறைத்துக் கொண்டு..நிறுத்தியே விட்டார் என்றே எனக்கு தோன்றியது... நான் அந்தப் பக்கம் செல்லும் போது அவரின் குரல் கேட்பேதில்லை என்பதிலிருந்து அறிந்து கொண்டேன். நேரில் பார்க்கும்போது என் நலன் பற்றி விசாரிப்பார். தேநீர் அருந்தும் பழக்கம் இல்லை. கடையில் சாப்பிடும் பழக்கம் இல்லையென்று சொல்லி மறுத்துவிடுவதால் அவருக்கு சிறிது வருத்தம்.

அவர். அவர் மகனை திட்டுவிட்டு அறிவுரை சொல்வதை கேட்ட நான்.. அதிலிருந்து நானும் சில வற்றை தெரிந்து கொண்டேன்..

சிக்கனத்திற்கும் கஞ்சனத்திற்கும் உள்ள வித்தியாசம் என்றால்

 தேவைகள் அதிகமா இருந்தாலும் சிறிதளவு உண்பது சிக்னம். அதையும் உண்ணாமல் இருப்பது கஞ்சத் தனம் ( கிடைக்காமல் அல்லல்படுவது வேறு)

ஒரு வேலையை முன்னிட்டு செல்லாமல்.. கூடவே  போகிற வழியில் ஆகிற சில வேலையை முன்னிட்டு செல்வது..-- இது மாதிரியாக சில ..

தும்பை விட்டுட்டு வாலை பிடிப்போம் என்ற எண்ணத்தில் வாலையும் பிடிக்க முடியாமல் விட்டகதையாக..எந்த பிடிமானமும் இல்லாமல் இருக்கும்  எனக்கு சற்று  ஆறுதலை தந்தது...

சுற்றி இருப்பவர்களாலும்  உறவுக்காரர்களாலும்  எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும்  பொருள் சேதத்தையும் சற்று குறைக்கும் வழியாக  அவர் அறிவுரை தெரிந்தது.




யாரிடமும் எவரிடமும் யோசனை கேட்பதில்லை...இதுவரை யாரும் எனக்கு அறிவுரை சொன்னதில்லை.  அப்படியே சில நேரங்களில், சில சம்பவங்களில் , மன உளச்சலில் இருக்கும்போது தெரிந்தவரிடமோ. அல்லது வேறு யாரிடமோ, இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டால் “ அடே அப்பா..உனக்கு தெரியாத யோசனையா  ” என்று என்னை திருப்பி கேட்பார்கள்..


உண்மையில் என் வாழ்நாளில் இன்றுவரை எவ்வளோ இம்சைகளையும் துயரங்களையும் இன்னல்களையும் அனுபவித்தபோதும் நான் இன்று வரையில் அழுதது இல்லை. என் தாய் இறந்தபோதும் சரி என் நண்பர்கள் இறந்த போதும்சரி, போலீஸ்காரன்கள் என்னை சரமரியாக அடித்து வெளுத்த போதும் சரி அழுததில்லை. என் கண்ணில் ஒரு சொட்டு கண்ணிர் வந்ததில்லை.. அதற்கு பதிலாக என்னவோ  இரு சக்கர வாகனத்தில்  மூப்பதை கடந்து நாற்பது வேகத்தில் செல்லும்போது என் கண்களிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது. யாருக்கும் பயன்படாமல்.........

உண்மையில் “ எல்லாம் தெரிந்தவனுமில்லை.. எதுவுமே தெரியாவனுமில்லை” என்ற சொல்லாடல்தான் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று நிணைக்கிறேன்.   வருடம் அறுபதை நெறுங்கும் என்னை பார்ப்பவர்கள் பொறாமைதான் படுகிறார்கள். பள்ளியில் படிக்கும் காலத்தில் எப்படி இருந்தேனோ அப்படியே இருப்பதாக... தலையும் மீசையும் தாடி முடியெல்லாம் நரைத்து இருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார்களோ அல்லது அவர்களின் கண்களுக்கு தெரியவதில்லையோ..? தற்போது   விபத்தொன்றில் நான்  செவிடானாக போனது  உள்பட...

சிலர் வயது ஆக ஆக..எல்லாம் வரும் என்று பய கொள்ள வைக்க முயலுகிறார்கள். நானும் பயந்தவன்தான் ஆனால் சாவதற்கு பயப்படவில்லை.. எப்போதோ தொலைந்திருக்க வேண்டியவன். எப்போதும் தொலையாதிருக்க முடியுமா...??








6 கருத்துகள்:

  1. நடப்பது நடக்கட்டும் நண்பரே வருந்துவதால் பயனில்லை.

    பதிலளிநீக்கு
  2. வருத்தம் வேண்டாம்
    இதுவும் கடந்து போகும்

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான ஒரு பதிவு.
    கடையில் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இல்லை.உண்மையில் வீட்டில் தாயாரித்து சாப்பிடுவது தான் நல்லது. நான் வேலை நேரத்தில் கன்டீனிலும், பிரயாணங்களில் போது மட்டும் தான் கடைகளில் சாப்பிடுவேன்.அப்போது கோலா காப்பி குறைவாக தேனீரும் அருந்துவேன்.
    //தேவைகள் அதிகமா இருந்தாலும் சிறிதளவு உண்பது சிக்னம்.//
    நீங்க எழுதிய இந்த வாக்கியம் சிக்கனத்திற்கானது மட்டுமல்ல. தற்போது உள்ள ஆரோக்கியத்தின் ரகசியம். இப்போ ஆரோக்கிய அறிவுரை வழங்குபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்
    குறைத்து உண்
    வேகமாக அதிகம் நட, அல்லது நல்லாக ஓடு.

    பதிலளிநீக்கு
  4. //போலீஸ்காரன்கள் என்னை சரமரியாக அடித்து வெளுத்த போதும் சரி//

    தனது நாட்டு குடிமகன் ஒருவனை இப்படி சொல்ல வைத்தது இந்திய நாட்டின் வெட்கபட வேண்டிய காட்டுமிராண்டிகளின் தனம்

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...