செவ்வாய் 30 2019

அதிகாலை கனவு-46.


 சந்நியாசிக்கு  இப்படியோரு விதிமுறை இருக்கோ...??

மதுரையில் சந்நியாசி மாநாடு க்கான பட முடிவு

அண்ணே...என்னண்ணே இங்க... இது உங்களுக்கான இடம் இல்லையே..


“அய்யோ... நானும் சந்நியாசிதானப்பா...... சந்நியாசி மாநாட்டுக்கு வரக்கூடாத..??


“யாருண்ணே சொன்னா உங்கள சந்நியாசின்னு  நீங்க தியாகிண்ணே.... போங்கண்ணே  வீட்டுக்கு.....


“யாருப்பா..இவரு......ஆ..ஆ  சார்..வாங்க......நல்லாயிருகீங்களா..... வேலை எல்லாம் எப்படி போகுது...”

“அதுவா... தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துகிட்டு அதுபாட்டுக்கு போய்கிட்டு  இருக்கு... வேல இல்ல  அதான் இங்க வந்து உட்காந்துட்டு இந்த கூட்டத்தை பார்த்திட்டு போகலாம்முன்னு வந்தா..சாரு  நானு சந்நியாசி இல்லன்னு சொல்றாரு...


“ உங்களுக்கு கல்யாணம் ஆகியிருச்சா....”

“இல்ல”

“பிள்ள குட்டிக”

“கல்யாணமே ஆகல.. பின் எப்படி புள்ள குட்டி...”

“ உங்களுக்கு கல்யாணமே  ஆகலையா..” அப்போ  , நீங்க சந்நியாசி லிஸ்ட்ல வரமாட்டிக....”

“பின்ன எந்த லிஸ்டுல வருவேன்”

“ அது தெரியல.... ஒரு சந்நியாசிய கூப்பிட்டு கேட்டுப்பார்ப்போம்.”


கல்யாணம் ஆகாதவுக.... சந்நியாசி லிஸ்டுல வருவாங்கலா.... அந்த விபரத்த  சார்க்கு கொஞ்சம் விவரமா சொல்லுங்க  ..ஜி”

” நீங்க ஏன்? கலயாணம் செய்துக்கல..?”

“ அது பெரிய கதைங்க..” சுருக்கமா சொல்லனும்னா.? அந்த வாய்ப்பே கிடைக்கலங்க...” இப்ப கிடச்சா செய்விங்கலா.

“ கிடச்சாதானே..?  கிடைச்சா செய்துகிறலாம்...”

“ .அப்ப நீங்க செய்த பின் சந்நியாசியா மாறலாம்...”

“ இப்ப  நடப்புல..சந்நியாசியாகத்தானே இருக்கேன்”  

“ இருக்கலாம்  கல்யாணம் ஆகி இல்லற சுகத்தில் முழ்கி..பின் தெளிந்து  எல்லாவற்றையும் துறந்து  காவி உடையணிந்து இறைவன் மேல் பற்றாகி இருந்தால் ” நீங்கள் சந்நியாசி லிஸ்டுல வரலாம்....”அதன் மோட்சம் பெறலாம்..


“அப்போ காவி உடை அணிந்தால்தான் சந்நியாசி  என்று தெரியுமோ..?”

“ காவி உடை அணிவது அது ஒரு படி... முதல்படி, இரண்டாம்படி என்பதுபோல் இது ஒருபடி..”

“அப்போ கல்யாணம் ஆகி இல்லற சுகம் அனுபவிச்ச பிறகுதான்..சந்நியாசி ஆக முடியுமா...?”

“ஆமாம்”

“அப்ப சரிங்க...” சார்    இவரு சொல்வதை பார்த்தா... நான் சந்நியாசி லிஸ்ட்டுல வரவே முடியாதுங்க..வர்ரேன் சார்..  சார் வர்ரேன்..


“சரிண்ணே.. ”  ...சரிங்க சார்,....

விடிந்த பிறகுதான் புரிந்தது. நான் சந்நியாசி ஆக மாட்டேன் என்று...அதாவது  அதாவது வந்து..... 












4 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...