செவ்வாய் 27 2021

அது ஒரு தனி இனம்.


 உரிய வாரன்ட் இல்லாமல் அரசு பேருந்துகளில் போலீசார் இலவசமாக பயணிக்க கூடாது: டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை

"போலீஸ்காரர்கள் எல்லா அரசு ஊழியர்களைப் போலத்தான்! மற்ற அரசு ஊழியர்கள் எல்லாம் டிக்கெட் எடுக்கும் பொழுது, போலீஸ் மட்டும் டிக்கெட் எடுக்க மறுப்பது ஏன்? ”தாங்கள் தனி இனம்” என்கிற திமிர் தான்! டிக்கெட் எடுக்கச் சொல்லி ஏகப்பட்ட இடங்களில் தகராறு! ஒரு பேருந்தின் ஓட்டுநரை கொன்ற பிறகு, மனித உரிமை ஆணையம் வழக்கை எடுத்து நடத்திய பிறகு இப்பொழுது டிக்கெட் எடுத்து பயணிக்கவேண்டும் என உத்தரவு போடுகிறார்கள். போலீஸ்க்கு கடுமையான கண்டனங்களை அனைவரும் தெரிவிக்கவேண்டும்.”
- வினைசெய்
சென்னை: உரிய வாரன்ட் இல்லாமல் போலீசார் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கூடாது, என்று காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஒரு வழக்கில் போலீசார் பேருந்தில் கட்டணம் எடுக்காமல் சென்றபோது, பேருந்து நடத்துனர் மற்றும் காவலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், போலீசார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உரிய வாரண்ட் இல்லால் பயணம் செய்ய கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்று தெரிவித்திருந்தது. எனவே, அனைத்து போலீஸ் அதிகாரிகளும் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் கருத்தை உறுதி செய்ய வேண்டும். உரிய வாரண்ட் இல்லாமல் போலீசார் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கூடாது.
- தினகரன் நாளிதழ்
 















4 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...