ஞாயிறு 19 2012

நண்டு கொழுத்தா சிலவு( பொந்து)க்குள்ளே இருக்குமா?...

கெட்டிக்காரங்க,புத்திசாலிங்க இருக்கிர வரைக்கும் கேனையர்கள்,கிறுக்கர்கள் இருப்பாங்களா? அல்லது கேனையர்கள்,கிறுக்கர்கள் இருக்கிற வரைக்கும் கெட்டிக்காரர்கள் இருப்பார்களான்னு ,இப்பவரைக்கும் எனக்கு தெளிவு வரலிங்க

அதனால.மத்தவங்களை கேனையானாக,கிறுக்கனாக ஆக்கறவங்க எல்லாருமே, கெட்டிக்காரனுங்க, இதோடு,சும்மா,சும்மா புளுகித் தள்ளுகின்ற
வர்கள் எல்லாருமே புத்தலிசாலிங்கன்னு நானே முடிவு கட்டி்டேனுங்க.
ஆசை காட்டி , வாக்குருதிகொடுத்து ஏமாத்துபவன் எல்லாருமே. அறிவாளி, மேதைன்னு நிணைக்கிறனுங்க.......

நாட்டு நடப்புகளை சாதரனமாக கவனித்தாலே. போதுமுங்க, நாட்டுல உலாவுற அம்புட்டு கெட்டிக்காரன்களையும் தெரிந்து கொள்ளலாம். எனக்கு இருக்கிற இம்புட்டுனு அறிவச்சு இந்த கெட்டிக்காரர்களையும் புத்திசாலிகளையும் பற்றி சொல்லுகிறேன்.

கேளுங்க.........................உதாரணமாக. செல்போனில் ஆசை காட்டி மோசம் செய்யும் புத்திசாலிகளைப்பற்றி சில பேருக்குத்தான் தெரியும்
அந்தச்சிலபேரும் பல தடவை ஏமாந்து கேனையானாக.கிறுக்கனாக மாறி..பின்பு தன்னுணர்வு பெற்றவர்கள்.

அந்தச்சிலரின் அனுபவங்களில் ஒன்று மட்டும் சொல்றேன். வாழ்த்துக்கள்!
உங்கள் மொபைல் நம்பர்க்கு எங்கள் குலுக்கலில் இவ்வளவு தொகை பரிசு
விழுந்திருக்கிறது. அதற்குரிய பரிசுகளை உங்கள் முகவரிக்கு அனுப்புவோம் அந்த பரிசுப்பொருளுக்கான தபால் செலவுகளை செலத்தியபின் பரிசு பொருளை தாங்கள் பெற்றுக் கொள்ளலாம். என்று எஸ்எம்எஸ் வரும்.இலவசமுன்னு சொன்னாலே ரெக்கை கட்டி பறந்து செல்லும் கூட்டத்துக்கு சொல்லவா வேணும்.


ஆங்கிலத்தில் வரும் எஸ்எம்எஸகளுக்கு ஆங்கிலம் தெரியாதவர்கள் கேனையானாக மாற வாய்பில்லை. ஆனாலும் அவர்களெல்லாம் வேறுவேறு
இடங்களில் கேனையாக இருப்பதற்கு மொத்தமாக குத்தகை எடுத்திருப்பவர்கள்.(உதாரணம். எத்தனை தடவை நாமம் போட்டாலும் நாமம்
போட்டவர்களுக்கும் ஓட்டு போடுவதை நிறுத்தாதவர்கள்)  அரைகுறை
மற்றும் முக்கால் பங்கு தெரிந்தவர்கள் கேனையாக மாறி யவர்கள்

இப்படியாக, இந்த மாதிரி,  மற்றவர்களை ஆசை காட்டி மோசம் செய்த, செய்து கொண்டு இருக்கிற கெட்டிக்காரர்கள் கூடங்குள அனு உலையை திறந்து உற்பத்தியை தொடங்கினால் தமிழகத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கம் அதைக்கொண்டு பல்லாயிரம் கேனையர்களுக்கு வேலை தரலாம் சிறு மற்றும் குறுந்தொழில்,பேரைச்சொல்லிக் கொண்டும்..மாவட்ட சிறு,குறுந் தொழில்கள் சங்கம் வைத்துக்கொண்டு ,அரசு தரும் மானியங்களை,தொழிற் பேட்டைகளையும் உண்மையானவர்களுக்கு கிடைக்கச் செய்யாமல் தங்களே
வளைத்துபோட்டதங்களின்சூத்தயும்சூடாகிப்போனகுண்டியையும்,தொப்பையையும் பாதகாத்து கொள்ளலாம். கார்பரெட் அதிபர்கள் அந்தஸ்தத்தில்
குவாலிக்ஸ்ஸில் பவனி வரலாம்.என்ற புத்தசாலிதனத்தோடு, அடுத்தவர்
இரத்தத்தை உறிஞ்சி யதால் தேங்கி கெட்டி தட்டிப்போன தங்களின் இரத்தத்தை...“பிறர் வாழ ரத்தம் கொடுப்போம், நாம் வாழ மின்சாரம் பெறுவோம்” என்ற தங்களின் புத்தசாலிதனத்தை வெளிப்படுத்தி கூடங்குளம்
அனுஉலைமின் உற்பத்தியை தொடங்க வலியுறத்தி இரத்ததானம் செய்கிறார் கள்



ஏற்கனவே,பல கெட்டிக்காரர்கள். அறிவுள்ளவர்களான,நாறுணசாமி,மூப்பன் மகன் வாசு, விஞ்ஞான அறிவர் அப்துாள் கலாம், நால்வர்கூட்டு சீனிவாசு
பிபி..ஜே...பிபி...இந்து முன்னணி, இவர்களின் அல்லக்கை.இடக்கை,வலக்கை
சூரியன் தோன்றுவதற்கு முன்னமே தோன்றி தொடர்ந்து எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறார்கள்.

மின்சாரம் தயாரிப்பதற்க்கானமாற்றுவழிகளைகொஞ்சுண்டுஅறிவுள்ளவர்கள.
சொல்லும் மாற்று வழிகளை நடைமுறை படுத்தினால் இவர்களின் கெட்டிக்
காரத்தனமும், புத்திசாலித்தனத்துக்கும் மதிப்பில்லாது போய்விட்டால்
என்னாவது?  நாடு என்னாவது??ஃ

இவர்கள் மாதிரித்தான், சிறு,குறுச்தொழில் சங்க அதிபர்களான கெட்டிக்காரர்கள் தங்கள்து சூத்தயும்,குண்டியையும் பாதுகாப்பதற்க்காக
சங்கத்தின் பங்களாவில் இரத்தானமும். பொதுக்கூட்டமும் நடத்துகிறார்களாம். இதற்க்காக.இணைப்பு சங்கம் உற்பத்தியாளர்கள் சங்கம் உணவு பொருள்வியாபரிகள் சங்கம்,வணிகநிறுவன உறுப்பினர்களுக்கும்
 இவர்களோடு கேனையர்களுக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.

சிறு.குறுந்தொழில்கள் சங்கம் என்று பலகையை மாட்டிக்கொண்டு பெரும்
தொழில் அதிபர்களாக,வருங்கால கார்பரேட் முதாலாளிகளாக வலம் வரும்
இந்தக் கெட்டிக்காரர்களைக் கண்டால். “ நண்டு கொழுத்தால் சிலவு(பொந்து)
க்குள்ளே இருக்காது என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.


இருந்தாலும். இந்த கொழுத்த நண்டுக்கு தெரியுமா? கொக்கு ஒன்னு வெளியே
காத்து கிடப்பது?ஃஃ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...