செவ்வாய் 18 2017

“தீட்டு கழிக்கும் சுலோகம் தெரியுமா உங்களுக்கு ?

அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி....
                                                  காட்சி---1

மாணவன்-1.  டேய் இங்கப்பாருடா... நம்ம வகுப்புக்கு பாடம் நடத்தப்போறவன் தீண்டத்தகாதவனாம்..டா...

மாணவன்-2.....“இது எங்கப்பாவுக்கு தெரிஞ்சது, அவ்வளவுதான்டா..”

மாணவன்-3....டேய்...இதுல அந்த தீண்டத்தகாதவன் நமக்கு இங்கிலீஷ்ல பாடம் நடத்தப் போறானாம்டா..!!!!!”

(இப்படியாக அந்த வகுப்பறை மாணவர்கள் திண்டத்தகாதவர்களைப்பற்றி எள்ளி நகையாடி சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்“)

                                                              காட்சி-2
மாணவர்கள் குறிப்பிட்டு பேசிக் கொண்டு இருந்த . அந்த ஆசிரியர் வகுப்பு அறைக்குள்  வந்து பேசுகிறார்.

ஆசிரியர்-      “ I am proessor ambekar .” ..“ நான் உங்களுக்கு எடுக்கப் போற சப்ஜெட், அரசியல்-பொருளாதாரம்..., உங்களுக்கு என்ன கத்துக்குடுக்க முடியுமின்னு நீங்க  நிணச்சீங்கன்னா....என் அறிமுகம் உங்கள் சந்தேகத்தை போக்கும்.... I have a M.A.and Ph.d.in Public Finance from Colombia university in new york. My thesis civered the financial history of india from 1765 tp the present in addition I am working towads an Msc from the London school of econmics,- இனியும் எனக்கு கற்பிக்கத் தகுதியில்லை என்று உங்களில் யாரேனும் நிணைத்தால் அவர்கள் தாரளமாக வகுப்பு அறையை விட்டு வெளியே செல்லலாம்... NOW

(ஆசிரியர் பேசி முடித்ததும்.  அந்த வகுப்பறை   சிறிது நேரம் அமைதியாக இருந்தது.

ஆசிரியர்-....“ சரி, நாம் பாடத்தை துவங்குவோமா....?????

                                                              காட்சி-3

இடைவேளையின் போது  professorகளுக்கான  அறையில் வைக்கப்பட்டு இருந்த பானையில் புதிதாக வந்த ஆசிரியர் நிீர் அருந்த முயலுகிறார். அப்போது ஒருவர் குறுக்கிடுகிறார்)

குறுக்கிடுபவர் -....“ டாக்டர் அம்பேத்கர்...............”

டாக்டர் அம்பேத்கர்:-     “யெஸ்...”

குறுக்கிட்டவர்:-    நான் புரபசர் திரிவேதி....இங்கு வைத்ததுள்ள குடிதண்ணீர் இங்கு பணிபுரியும் புரபசர்களுக்கு மட்டும்தான்   ”

டாக்டர் அம்பேத்கர்:-    அப்படியென்றால“ நான் யார்???

புரபசர் திரிவேதி:- ..'“யெஸ்..யெஸ்...நீங்களும் புரபசர்தான் நாங்க ஒத்துக்கிறோம்....ஆனா ஒரு முக்கியமான விசயம் என்னான்னா..., நீங்க குடிப்பதற்கு தண்ணீரை உங்கள் வீட்டிலிருந்துதான் கொண்டு வரவேண்டும்.

(டாக்டர் அம்பேத்கர் குவளையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு அங்கிருக்கும் அனைவரையும் பார்த்து சொல்கிறார்)

டாக்டர் அம்பேத்கர்:- “ இந்தக் குடிநீரை நான் குடிப்பது. மெத்த படித்த உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால்.... நீங்கள் அருந்தும் நீரை உங்கள் வீட்டிலிருந்து கொண்டு வாருங்கள்.

(குவளையில் பிடித்த நீரை அருந்தகிறார். பின் சொல்கிறார்)

டாக்டர் அம்பேத்கர்:-     நல்லது. இனி தூய்மைப்படுத்துங்கள்.

( திரிவேதியைப் பார்த்து) திரிவேதி அவர்களே! நீங்கள் மூன்று வேதம் கற்றவர் உங்களுக்கு தீட்டுப்பட்ட நீரை தூய்மைப்படுத்தும் மந்திரம் தெரிந்திருக்கனுமே..??

திரிவேதி:-  தெரியாதுங்களே.........( தலை குனிகிறார் திரிவேதி)

டாக்டர் அம்பேத்கர்:-  “உங்களுக்கு தெரியதெனில் நான் கூறுகிறேன். அமேதீஸ்டுவ சண்டாள மத்தியமாம் சாதி தூஷிட்டா ஹர்ஸமித் ஹர்ரிஷ்ட்ட ஸ்மிருதி....

( குவளையை வைத்துவிட்டு, தன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு) மீண்டுமொருமுறை சொல்லவா  என்று கேட்டுவிட்டு அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் தீட்டு கழிக்கும் அந்த சுலோகத்தை சொல்லிக் கொண்டே செல்கிறார்)

டாக்டர் அம்பேத்கர்:- அமேதீஸ்டுவ சண்டாள மத்தியமாம் சாதி தூஷிட்டா ஹர்ஸமித் ஹர்ரிஷ்ட்ட ஸ்மிருதி.


குறிப்பு:-   மேற்படி காட்சிகள்  கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த அம்பேத்கர் படக் காட்சிகள்... நன்றி!!



7 கருத்துகள்:

  1. இப்ப இது எனக்கும் தெரிஞ்சு போச்சு நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. இது உண்மையா ,படத்தின் சுவாரசியத்துக்காக சேர்க்கப் பட்டதா :)
    வரலாறு கூட சினிமாவில் மிகைப் படுத்தப் படும் ,கடவுளின் திருவிளையாடல்கள் போல :)

    பதிலளிநீக்கு
  3. இந்த ஒரு வியாதியாகப்போய் விட்டது இப்ப பல இடங்களில் .

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு! நான் அந்தப் படம் பார்க்கவில்லை. உங்களுடைய இந்தப் பதிவைப் படித்ததும் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...