சனி 18 2014

மார்க்சிஸ்டு கட்சி என்பதே தொழிலாளி வர்க்க அமைப்பு அல்ல”

ww.vinavu.com 







ஒரு காந்தியால் ஏற்பட்ட
அகிம்சையின் இரணமே ஆறவில்லை,
ஆயிரம் காந்தி அமைதி ஊர்வலமா?
பகத்சிங் படையல்லவா
பாட்டாளி வர்க்கத்திற்கு தேவை என்றார்.
இந்திய வாலிபர்  சங்கம்
வர்க்க ஸ்தாபனம் இல்ல தோழர்
என்றார் அந்த மார்க்சிஸ்டு கட்சி ஊழியர்.

மதவெறியை மாய்ப்போம்.
மனித நேயம் காப்போம்என
தட்டிக்கு தட்டி கதை கட்டிவிட்டு
விநாயகர் சதுர்த்திக்கு செட்டு போட்டு
இந்து வெறிக்கு சிவப்புக்கொடி கட்டுவதுதான்
கம்யூனிசமா என்றார்
தோ........ழ.......ர் சி.ஐ.டி.யு வர்க்க ஸ்தாபனம இல்ல
 என்றார் அழுத்தமாக.

அயல்நிதி வாங்கும் தன்னார்வக் குழுக்களுடன் சேர்ந்து
சுயநிதி கல்லூரி எதிர்ப்பு பிரச்சாரமா?
மாணவர் சங்கம் உருப்படுமா என்றார்

மனப்பாடம் செய்தவர் போல
எஸ்.எஃப்.ஐ வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் திருத்தமாக.

மீன் குழம்புக்கும் விலை மாதருக்கும்
சோரம் போகிறவர்கள் தோழர்கள் என்று படமெடுக்கும்
குருதிப்புனல் கமலஹாசனுக்கும்
தேவர் வெறி பாரதிராஜாவுக்கும்
திரைப்பட விருதா என்றார்.
த.மு.எ.ச. வர்க்க ஸ்தாபனம் இல்ல
 என்றார் தயக்கமின்றி.

தீபாவளி,திருவண்ணாமலை தீபத்திற்குச் சிறப்பிதழும்
ஆடிக கிருத்திகைக்கு அழைப்பிதழுமாய்
தீக்கதிர் வந்து விழுகிறதே என்றார்.
அது என்ன வர்க்க ஸ்தாபனமா,
வெகுஜன பத்திரிக்கை தோழர் என்றார்
 தனித்த சிரிப்புடன்

 “நானொரு பாப்பாத்தி”என்று
கோட்டையிலே சொன்ன
ஜெயலிதாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு
மதச்சார்பற்ற....ஜனநாயக......முற்போக்கு என்றீர்களே
கனவு என்னாயிற்று என்றார்.
தோழர் உங்களுக்குச சொன்ன புரியாது
 என்பது போல
கன்னபின்னாவென முகத்தை சுழித்தார்

இந்த முறை அந்தத் மாக்சிஸ்டு ஊழியர்க்கு  சென்னார்

                                                “மார்க்சிஸ்டு கட்சி என்பதே
தொழிலாளி வர்க்க அமைப்பு(ஸ்தாபனம் )அல்ல” என்று

நன்றி!..-- துரை சண்முகம்( புதியகலாச்சாரம் செப்-2003).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...