புதன் 09 2014

மூன்றே நாட்களில் எழுதி முடித்த ஒரு நாவல்! ! !


படம் .பாலகுமார்.

கடந்த மூன்று நாட்களாக வேலை இல்லை.அதனால் தூக்கம் வரவில்லை. வேலை இருந்தாலும். வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும்என்றஎண்ணத்திலும் தூக்கம் வருவதில்லை................

முன்னே போனால் கடி, பின்னே போனால் உதை,  அப்படி ஒரு நாளில் வேலை இல்லை. அன்று வழக்கம்போல் கூகுல் பிளஸில் நுழைந்து  செல்போனில் நோண்டிக் கொண்டு இருந்த பொழுதினில்..............

“வலசை” உரையாடல் அரங்கு, கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு. நாவல், கட்டுரை,  அனைவரும் வருக!! என்ற பதிவு கண்ணில் பட்டது.

அட.நாமளும் கதை.கவிதை.கட்டுரை எழுதுறோம்ல........ நம்மளையும்தான் வரச் சொல்லுறாங்க.......... என நினைத்து.....மறக்க கூடாது என்பதற்க்காக செல்போனில் அலாரம் வைத்துவிட்டு மீண்டும்  செல்லில் நோண்டுற வேலையை தொடர்ந்தேன்.


காலையில் மறந்திருந்த எனக்கு மறக்காமல்...அலாரம் அடித்து நிணைவு படுத்தியது எனது செல்போன்.........

பிரேம் நிவாஸ்ஹோட்டலை  அடைந்து வரவேற்பாளரிடம் வலசை  உரையாடல் அரங்கை பற்றி கேட்டபோது .ஆறாவது மாடிக்கு போகச் சொன்னார்.

அஆ.. என்று வாய் பொளக்காமல் படியைப் பார்த்து நின்ற போது, லிப்டில் போகச் சொன்னார். யாரவது உடன் வருவார்களா?? என்று சிறிது நேரம் எதிர்பார்த்து காத்து இருந்தேன். யாரும் வருவது மாதிரி தெரியவில்லை

எதுக்கு வம்புன்னு படியில் நடந்தேன். லிப்டில் தனியாக போகாதற்குக்கு காரணமும் இருக்கிறது. முன்னொரு காலத்தில், நான் மட்டும் தனியாக  ஒரு லிப்டில் பயணித்தபோது..திடீரென்று நின்றுவிட்டது.. நான் லிப்டில்  இருந்த நேரம் பார்த்து ஜெனரெட்டரும் எனக்கு எதிராக தன் வேலையைக் காட்டிவிட்டது.

லிப்டுக்குள்லிருந்து  சத்தம் கொடுத்து போது வெளியில் உள்ளவர்களுக்கு கேட்கவில்லை.இரண்டு மணி நேரம் உள்ளே தவியா்ய் தவித்த அனுபவத்தில்தான் லிப்டில் தனியாக செல்வதை தவிர்ப்பது .இரண்டு பேர் மூன்று பேர் சேர்ந்து சென்றால்... லிப்டில்  போவது என்று முடிவு அது ஒரு..தனிக்கதை.......

படியேறி உரையாடல்  அரங்கில் அமர்ந்தபோது கவிதை அமர்வு நடந்து கொண்டு இருந்தது எல்லோரும் தங்களின் தனித்திறமை வெளிக் காட்டிக் கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு அமர்வைப்பற்றியும்  வருகை தந்தவர்கள்.  அவரவர்களின் வலைப்பூவில் தங்கள் திறமையைக் காட்டுவார்கள் என்பதால்.நான் எழுதுவது அவ்வளவு நல்லா இருக்காது .

கவிதை அமர்வு முடிந்து  அடுத்த அமர்வு தொடங்கும் இடைவேளையில் எனக்கு தெரிந்த முகங்கள் யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்தேன். என்னை யாரும் சுலபத்தில் கண்டுவிடலாம் இளவயதில் எப்படி தோற்றத்துடன் இருந்தேனோ அப்படியே இன்றும் உள்ளேன். என்னால்தான் மற்றவர்களை  உருவத்திலும் சரி குரலிலும் சரி ,கண்டுபிடிக்க முடியாது .

அப்படி எனக்கு ஒன்றிரண்டு பரிச்சயமான முகங்கள் தெரிந்தன. அதில் ஒரு முகம் என்னைப்பார்த்து புன்னகைத்தது. அந்த புன்னகைக்கு பதிலாக வணக்கம் செலுத்தினேன்.

மற்ற இரண்டு முகங்களோ என்னைக் கண்டுக்கிரவே இல்லை. அதனால் நானும் கண்டு கொள்ளவில்லை.

இரண்டாவது அமர்வு தொடங்குவதற்கு சற்று முன்தான் “ மூன்றே நாட்களில் எழுதி முடித்த நாவல்” லை கொடுத்தார்கள். விலையை பார்த்தபோது  இருநூறு என்று இருந்தது.

அணிந்துரை, மதிப்புரை,வாழ்த்துரை, ஆசிரியர் உரை மற்றும் நாவலின் கடைசி பக்கத்தையும் படித்துவிட்டு புத்தகத்தை கொடுத்துவிடலாம் என்று நிணைத்த நேரத்தில்  நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும்  நாவல் புத்தகம் கொடுக்கப்பட்டது.

உணவு இடைவேளையில் நிதி நிலைமையைச் சொல்லி நாவல் புத்தகத்தை திருப்பி கொடுத்துவிடலாம் என்று நிணைத்துக் கொண்டு உரையாடல்களை கவனித்துக் கொண்டு இருந்தேன்.

இரண்டாவது அமர்வு முடிந்து உணவு இடைவேளையும் விடப்பட்டது. முன்பு  நிணைத்ததுபோல் நாவலை படித்துவிட்டு நாவலை சேர்ப்பிக்க முயன்றபோது அந்த நாவல் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாக தெரிந்தது

அரங்கில் அமர்ந்து அந்த நாவலை படித்தபோதுதான் “மூன்றே நாட்களில் எழுதி முடித்த நாவால்” லின் காரண காரியங்களை அதன் ஆசிரியர் எழுதியிருந்தது  தெரிந்தது.

ஆகவே,.......... இத்துடன் எனது புராணத்தை முடித்துக் கொண்டு,  திரு.எஸ்.வி. ராஜதுரையுடன் அவர்களின் அணிந்துரையுடன்,   திரு.லச்சுமி சரவணக்குமார் அவர்கள் எழுதிய நாவலைப்பற்றிய புராணத்தை  எனக்கு தெரிந்ததை அடுத்தப்பதிவில் குறிப்பிடுகிறேன்.


4 கருத்துகள்:

  1. நாவலை இலவசமாய்க் கொடுத்த நல்ல மனம் வாழ்க!

    படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. அடுத்த பதிவில் சொல்லிட்டா போச்சு.....

    பதிலளிநீக்கு

  3. படிச்சிட்டு பட்டுனு சொல்லுங்க....

    பதிலளிநீக்கு
  4. அடுத்த பதிவில் சட்டுன்னு சொல்லிவிடுகிறேன்ஜீ

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...