செவ்வாய் 02 2016

நடுச்சாம வேளை......

நடுச் சாம வேளை
விக்கல் எடுத்தான்
ஒருவன். பக்கத்தில்
படுத்து இருந்த
மற்றவனுக்கு தூக்கம்
கலைந்தது. எழுந்த
அவன் தண்ணீரை
ஒரு மொடக்கு
குடி என்றான்

விக்கல் எடுத்தவன்
மறுத்துவிட்டு சொன்னான்
என்னவள் இந்நேரம்
என்னை நிணைப்பதை
தண்ணீர் குடித்து
தடுக்க விரும்பவில்ல
என்றான்...........

தூக்கம் கலைந்தவன்
கோபம் கொண்டு
அவனை ஒரு
எத்து எத்திவிட்டு
கேட்டான்  இப்போது
உன்னவள் உன்னை
நிணைக்கிறாளா என்று

நீ எத்தின
எத்தில் அவள்
தூங்கிவிட்டாள்
என்றான் அவன்...


4 கருத்துகள்:

  1. அடுத்தவன் தூக்கத்தையும் கெடுத்து விட்டாளோ... இவன் மனைவி

    பதிலளிநீக்கு
  2. இதைதான் தென்னையில் தேள் கொட்டினால் ......என்ற பழமொழியை சொல்லியிருக்கிறார்களோ :)

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு
    தொடருங்கள்
    தொடருகிறோம்

    பதிலளிநீக்கு

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...