வியாழன் 10 2016

மோடி என்றால் மோசடி என்று அர்த்தம்




நண்பா..ரெம்ப சிரமாம இருக்கு .வேலை கூலிய வாங்கின பிறகுதான் 500ரூபா செல்லாதுன்னு தெரிஞ்சுச்சு....கடையில வாங்க மாட்டுறாங்கே...அட  ஏன்? கேட்குற அரசாங்க சாராய கடையில.. வாங்கினவன்..இப்போ வாங்க முடியாது .செல்லாதுன்னு சொல்லிட்டான்... என்ன செய்வது தென்று தெரியவில்லை... உங்கள மாதிரி எனக்கு  பேங்க் கணக்கு எதுவுமில்ல.. தயவு செய்து  இந்த 500ரூபாய வச்சுகிட்டு ஒரு முன்னூறு ரூபா கொடுங்க  மீதிய நாள பின்னக்கி வாங்கிக்கிறேன் நண்பா....

அதுசரி, நண்பா... ஏன்? 500ரூபா செல்லாதுன்னு தெரியுமா...?..நண்பா...


என்னமோ  கருப்பு பணத்த ஒழிக்க போறதுக்காக  500,1000ரூபாக்களை செல்லாதுன்னு அறிவிச்சு இருக்காங்கேகளாம்...நண்பா....

அப்போ..நீ வச்சு இருப்பது கருப்பு பணம் ...நண்பா...?

இல்ல நண்பா.... அன்றாட கூலி வேலை செய்து  சம்பளம் வாங்கி வருவது உனக்கு தெரியாத நண்பா.....!!!!!இது எப்படி நண்பா கருப்பு பணமாகும்


எனக்கு தெரிஞ்சு என்ன நண்பா.... செல்லாதுன்னு அறிவிச்சவன்னுக்கு தெரியவில்லையே...? இந்தப்பணம் கருப்பு பணமுன்னு சொல்லிட்டாங்க..நண்பா.....

கோபமும் ஆத்திரமும்தான்  வருது  என்ன செய்வது...நண்பா.. நான் உன்னிடம் கேட்டுவிட்டேன் நீயும்  உன் நண்பர்கள் யாரிடம் கேட்பீரு்கள்...

நீ..நான்..மற்ற நண்பர்களின் குடும்பமும் மற்றும் நம்மைப் போன்றவர்களின் குடும்பம்தான் கருப்பு பண முதலைகள் என்று கணித்து நமக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள்..... வங்கிகளில் மாற்றிக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.. வங்கிகள் உடனே பணத்துக்கு பணம் என்று மாற்றி உடனே தருவதில்லை.. எங்கும் ஒரே பரிதவிப்பும்  படபடப்பும் வேதனைதான். நானும் என் நண்பர்களும்தான் வங்கிகளில் காத்து கிடக்கிறோம் நண்பா..

உண்மையான கருப்பு பண முதலைகள் யார் நண்பா....? அவர்கள் நம்மைப் போன்று உங்களைப் போன்று வங்கி வாயில் காத்துக் கிடந்து திண்டாடுவார்களா..??

அம்பானி. அதானி, ரஜினி, நத்தம். ஓபிஎஸ், இவர்களைப் போன்றவர்கள் .யாரும்  வங்கிகளில் வரிசையில் நின்று காத்து கிடக்கவில்லை நண்பா...

அப்படியா....அப்போ...இந்த 500,1000த்தை செல்லாதுன்னு  அறிவிச்ச மூஞ்சி யாரு நண்பா.........??

உன் கூலிப் பணத்தை மாற்ற முடியாமல்... அல்லாடும் நாட்டில் பத்து இலட்சத்துக்கு உடை உடுத்தி பகட்டாக வலம் வந்த மோடி தான் நண்பா....அதோடு கருப்பு பணத்தை கண்டுபிடித்து அந்த பணத்தை ஒவ்வொரு இந்தியனுக்கும் எனக்கும் உனக்கும் ரூபா 15இலட்சத்தை கொடுப்பேன் என்று சொன்ன வீராதி வீரர் சூராதி சூரர்தான்  நண்பா....

என்னது  பிரதமர்ர்ர் மோடியா...???

ஆம் நண்பா... இனிமேல் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்..... மோடி என்றால் மோசடி என்று அர்த்தம்   ......நண்பா...

...........................!!!!!!!!!!!!!!!!




5 கருத்துகள்:

  1. பதினைந்து லட்சத்துக்கு வட்டியும் போட்டுக் கொடுப்பார் ,ஒண்ணும்கவலைப் படாதீங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனி ஒரு மனிதன் 10 லட்சத்திற்கு கோட்டு,சூட்டு போட்டு மினுக்கிறவன் ஏழையின் பசியைப் பற்றி அறிந்து கொள்ளுகிறார்.

      நீக்கு
  2. ஹாஹாஹா மோ(ச)டி ஸூப்பர் நண்பா

    பதிலளிநீக்கு

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...