எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும்.
இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும். மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் விட்டுச் செல்லும். ஆனால் நேரம் சீக்கிரம் கடந்து விடும்.
வயதான காலத்தில் சிங்கங்களால் வேட்டையாட முடியாது. கொல்ல முடியாது. தன்னைத்தானே காத்துக் கொள்ளக் கூட முடியாது. திரியும், உறுமும். இறுதியில் கழுதை புலிகள் ஒன்றுகூடி வயதான சிங்கங்களை அடித்து சாப்பிடும்.
அதுவும் சுலபமான மரணமாக இருக்காது. சிங்கங்கள் உயிரோடு இருக்கும் போதே அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய் கடித்து தின்னும் கழுதைப்புலிகள்.
பொதுவாக இள வயதிலேயே வேட்டையாடும் போது ஏற்பட்ட காயங்களால் சிங்கங்கள் சாகும். இல்லையேல் வயதான காலத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு சாகும்.
இதுதான் உலகம் இது தான் வாழ்க்கை.மிகவும் குறுகிய காலக்கட்டமான, இந்த வாழ்க்கை மிகவும் தற்காலிகமானது.
அந்த தற்காலிகத்தை சிங்கங்களில் மட்டுமல்ல. வயதான மனிதர்களின் வாழ்க்கைகளிலும் பார்க்கலாம். நீண்ட காலம் வாழ்ந்து இறுதியில் வலிமையற்று வீழும் ஒவ்வொரு உயிரிலும் பார்க்கலாம்.
இந்த உலகில் நிரந்தரம் என்று ஒன்றுமில்லை. காதல், ஆற்றல், தகுதி, திறமை ஆகிய அனைத்தும் காலத்தால் அழியும்..அல்லது காணாமற் போகும்.
இது இயற்கையின் விதி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை