வெள்ளி 05 2015

மூனு பட்டை போட்டு இந்(து)தீயர் என்று பெருமிதம் கொள்வோம்..

படம்- www.dinakaran.com

ஒம்பாடு தேவலை தோழர்
ஓட்டும் போடுவதில்லை
விரல் அடையாளமும் பெருவதில்லை
என்றார் ஓட்டு கேட்கும் கட்சியை
சேர்ந்த நண்பர் ஒருவர்..

என்ன வி்சயம் என்று
தோழர் கேட்டபோது
செய்தி ஏட்டில் வந்த
விபரத்தை சொன்னார்.

தேர்தலில் கள்ள ஓட்டு
போடுவோரை தடுப்பதற்கு
வாக்களித்தப் பின் நகமும்
சதையும் சேரும் இடத்தில்
இடது பெருவிரலில் அழியா
மை வைக்கப் படுகிறது. அந்த
அழியா மை ஓட்டு போட்ட
சிறிது  நேரத்தில் அழிந்து
விடுகிறதாம்.... இதைத் தடுக்க
இடது ஆட்காட்டி விரலில்
தொடங்கி விரலின் முதல்
மடிப்பு வரை அழியா மை வைக்க
ஓட்டுக்கு பணம் கொடுக்கும்
வல்லவர்களை அந்த நல்லவர்களை
வாழ்த்தி வழியனுப்பி வைத்துவிட்டு

ஓட்டுக்கு காசு வாங்கி
ஓட்டு போடும் வறியவர்களை
மிரட்டும் தேர்தல் ஆணையத்துறை
உத்தரவாம் தோழரே என்றார்

அது கேட்ட இன்னொரு நண்பர்
சே...அவ்வளோ நீளத்துக்கு மை
வைப்பது ரெம்பவும் ரிஸ்க்கான
வேலை.. வேண்டுமென்றால்
ஓட்டு போட்டவர்களின்  நெற்றியில்
மூனு பட்டையை போட்டு விட்டால்
முகம் பார்த்தவுடன் இவர் ஓட்டு
போட்டவர் என்றும் கள்ள ஓட்டு
போட முடியாதவர்  இவர் இந்திய
நாட்டு இந்(து)தீயர் என்றும் பெருமை
பட்டுக் கொள்ளலாம் அல்லவா....என்றார்.


.

22 கருத்துகள்:

  1. ஹா...ஹா ஒட்டு போடுறவங்க மூஞ்சியில திருப்பதி கோவிந்தா நாமம் போட்டுடலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டையா..நாமம்மா ....என்று ஓட்டு போடுபவர்களின் விருப்பத்தினைக் கேட்டு போடலாம்..

      நீக்கு
  2. ஓட்டுப்போடும் ஒவ்வொரு முறையும் நெற்றியில் பட்டைதானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பட்டையால் அணைவருக்கும் தெரியுமே..அய்யா.....

      நீக்கு
  3. ஏன் அப்படியே மொட்டையும் போட்டா?,,,,,,,,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்.ம்..இப்படியும் செய்யலாம்தாம்.... ஆனால் பெண்கள்...?????

      நீக்கு
    2. ஆனால் பெண்களுக்கு?,,,,,,,,,,,,
      அய்யோடா, இப்படி வேற எங்களை மதிக்கிறீங்களா?
      நன்றி.

      நீக்கு
  4. ஒரு முறை யானைக்கு இட வேண்டியது ,வடகலை நாமமா தென் கலை நாமமா என்று தலைபோகும் பிரச்சினை வெடித்ததாம் !ஆனால் ,மனுஷன் காசை வாங்கிகிட்டு எந்த நாமத்தையும் போட்டுக் கொள்ள தயாராய் இருக்கிறானே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்குத்தான்திரும்பவும் ஓட்டு போடாமல் இருப்பதற்குத்தான் மூனு பட்டை யோசனை....

      நீக்கு
  5. தேர்தலுக்கு மறுநாள் நாடு முழுக்க நெற்றியில் பட்டை. எப்படி இருக்கும் நினைக்கும் போது ஐந்து வருட பலன்களும் கிடைத்துவிடுகிறது.
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலன் இல்லாமால்“ இருக்க கூடாது என்பதற்குத்தான் இந்த யோசனை.....

      நீக்கு
  6. தோழரே!
    மூன்று போட்டால் ஓட்டு போட வில்லை என்று அர்த்தம் என்பது உமக்கு தெரியாதாக்கும்!
    எட்டு போட்டல் ஓ கே !
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி மூன்று பட்டை போட்டால்.. ஏற்கனவே ஓட்டு போட்டுவிட்டார் என்று முடிவு நண்பரே

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...