| படம்- |
சுவர் இருந்தால்தானே
சித்திரம் வரைய முடியும்
உடல் நலமாக
இருந்தால்தானே உழைக்க
முடியும் நன்றாக
தெரிந்தும் புரிந்தும்
அன்பு மிக்கவர்களின்
ஆதங்கத்தை இந்த
மண்டையும் உணர்ந்த
போதும் ..நிலவிய
சமூக வாழ்க்கை
நிலை அப்படி
இருக்க விட்டதில்லை.
இளமையில் உணவும்
உழைப்பும் காதலும்
தேவையாய் இருந்த
நேரத்தில் எதுவும்
கிடைத்து விடவில்லை.
மண் புழுவாய்
வாழ்க்கையை ஓட்டி
முதுமையின் வாயிலில்
நிற்கும் நேரத்தில்
உணவும் உழைப்பும்
கிடைத்தும் நேரத்துக்கு
உண்ண முடிவதில்லை
உழைக்காமல் இருக்கவும்
முடிவதில்லை .வேறு
என்ன செய்வது
காட்டின் அழைப்பை
எதிர் பார்த்து
காத்து இருப்பதை
தவிர...............