பக்கங்கள்

நிகழ்வுகள லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய் 25 2015

ஆசான்களாகவும் தோழர்களாகவும் நண்பர்களாகவும் இருந்த இருவர்...

படம்-வினவு--

மாபெரும் ஆசான்களான கார்ரல் மார்க்சும். எங்கெல்சும்  அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவரகளாக இல்லை.

1818-ஆம் ஆண்டு பிறந்தவரான காரல் மார்க்ஸ், தனது காலத்தைச் சேர்ந்த பல்வேறு விதமான த்த்துவங்களை அனு அனுவாக, நுணுக்கமாக, விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்தார். “ ரெய்ன்ஷ் செய்டுங்  என்ற முற்போக்கு நாளேட்டின் ஆசிரியர் என்ற முறையில், காரல்மார்க்ஸ். தமது காலத்திய அரசியலையும்,வர்க்க மோதலையும்- குறிப்பாக குறிப்பாக ஜெர்மனியின் ரைன் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்க்கையை- விரிவாக ஆய்வு செய்யத் தொடங்கினார்.

 இளைஞரான காரல் மாக்ஸ் “ ஆளுமைமிக்கவராக, விரைந்து பணியாற்றுபவராக ,உணர்வு கொந்தளிப்புமிக்கவராக. எல்லையற்றத் தன்னமபிக்கைமிக்கவராக விளங்கிய அதே வேளையில், ஆழ்ந்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும், மேதமைமிக்கவராகவும், ஓய்வு ஒழிச்சலற்ற இயங்கியலாளாராகவும் விளங்கினார்.

எங்கெல்ஸ். ஜெர்மனியின் செல்வமிக்க முதலாளித்துவக் குடும்பத்தில் 1820-ஆம் ஆண்டு   பிறந்தார். அவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்ட போதிலும், சுயமாகவே கல்வி கற்றுக் கொண்டார். தமது குடும்பத்தின் நூற்பு ஆலையை  நிர்வகிப்பதற்க்காக 1842-ஆம் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மாநகர்க்கு அனுப்ப்பட்டபோதும். அவரது மனதில் பிரெஞ்சுப் புரட்சியின் பாடல்கள் நிறைந்திருந்த்தாகவும், பாரிசின் புகழ்மிக்க சிவப்பு பயங்கரத்தின் அடையாளமான “கில்லட்டின்மீண்டும் தோன்றாதா என்று தன் மனம் எங்கியதாகவும் பிற்காலத்தில் அவர் நிணைவு கூர்ந்தார்.

எங்கெல்ஸ் இங்கிலாந்தில் முதலாளித்துவ வளர்ச்சியின் அதி உன்ன முன்னேறிய நிலையை நேருக்கு நேராகக் கண்டார். வல்லமைமிக்க பிரம்மாண்டமான தொழில் உற்பத்தி சாதனங்கள், புதிய ஆலை நகரங்களின் துன்பங்கள் நிறைந்த தொழிலாளர் சேரிகள், கொள்ளை நோய்கள் ஆகியவற்றை கண்கூடாகப் பார்த்தார்.

இங்கிலாந்து தொழிலாளர் வர்க்கத்தின் முதல் மக்கள் திரள் இயக்கமான சாசனவாதிகளைப் ( சார்ட்டிஸ்டுகள்) பற்றி அவர் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார். எங்கெல்ஸ், முதலாளித்துவத்தை உளமார வெறுத்த அதேபொழுதில், முதலாளித்துவம் பழைய உலகை விரைவாக மாற்றியமைப்பதையும் தெளிவாக்க் கண்டார்.

அரசியல், பொருளாதாரம், வரலாறு மற்றும் த்த்துவத்தை ஆழமாகக் கற்று ஆய்ந்த்தன் அடிப்படையில், ஒரு புதிய, நறுக்கான, முற்றொருமை கோட்பாடுகளை உருவாக்க மார்க்சும், எங்கெல்சும் இணைந்து செயல்பட்டனர். அவர்களுடைய அறிவியல்பூர்வ அணுகுமுறை கம்யூனிசத்தைக் கற்பனாவாதப் பகற்கனவுகளில் இருந்து மீட்டு, எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட நடைமுறை அரசியல் உலகுக்குத் தகவுடையதாக மாற்றியது.

அந்த நாட்களில் மார்க்சையும் எங்கெல்சையும் நன்கு அறிந்த தோழர் பின்வருமாறு விவரித்தார். 

மார்க்ஸ் அப்போது 28 வயதேயான இளைஞர்: அவர் எங்களை மிகவும் ஈர்ப்பவராக இருந்தார்.. அவர் நடுத்தர உயரம், அகன்ற தோள்கள், நல்ல உடற்கட்டு, வேலைகளில் சுறுசுறுப்பு,..... அவருடைய பேச்சு நறுக்குத் தெறித்தாற்போல் சுருக்கமாக இருந்தது. அவருடைய தர்க்கம் அனைவரும் ஏற்கும் விதமாகவும், மறுக்கவியலாத்தன்மையோடும் இருந்தது. மார்க்ஸ் தம்மைப் பற்றி கனவு காண்பவராக இல்லாமல் எதார்த்தமானவராக இருந்தார்.

மார்க்சின் உயிருக்குயிரான சகோதர்ர் பிரடெரிக் எங்கெல்ஸ்- மெலிந்தவராக, கம்பீரமானவராக,அழகான தலைமுடி- மீசையுடன் காணப்பட்டார். ஒரு அறிவாளிக்குரிய தோற்றத்தோடு அல்லாமல் மிடுக்கான இளம் படைத் தளபதியைப் போல் இருந்தார்.


நன்றி!!----கம்யூனிஸ்டு அறிக்கையின் கதை.. யிலிருந்து.......


,

திங்கள் 11 2013

தீர விசாரிக்காமல் கொல்லும் நீதி.........



முன்னொரு காலத்தில்
இந்தியாவை ஆணடான்
வெள்ளைப் பரங்கியன்

அந்தப் பரங்கியன்
சொன்னான்-அன்று
நாயைக் கொல்வது
என முடிவு எடுத்தால்
தீர விசாரனை செய்து 
கொல்லுவோம் என்று...

அந்தப் பரங்கியரின்
வழிவந்த விசுவாசிகள்
சொல்கிறார்கள்-இன்று

நாய்களை விசாரித்து
விடுதலை செய்வோம்.
ஏன்?என்றால்- அதுகள்
எங்களின் ஏவல் நாய்கள்.

ஆண்டானை எதிர்க்கும்
மனிதர்களை போராளிகளை
தீர விசாரிக்காமல் உடன்
இரகசியமாய் கொல்லுவோம்.

செவ்வாய் 25 2012

நாய் ஒன்று நரியாக ஊளையிட்டது..........


ஓங்கி வளர்ந்த
மரங்கள் மட்டுமே
நிறைந்த காடுமல்ல..

முட்களும் புதற்களும்
மனித நடமாட்டம்
இல்லாத மலையுமல்ல...

வான் உயர்நத மாடா
மாளிகைகளும்,இயற்கை
மிஞ்சும் சொகுசு
பங்களாக்களும்..சீறிப்
பாய்கின்ற கார்களும்
நிறந்த ஜனநாயக நாடு.

காற்றில் பறக்கும் ஓடு வீடுகளும்
மழையில் மீன் பிடிக்கும்
கூரை வீடுகளும்  கூடவே
பஞ்சமும் பசியும் வேலை
இண்மையும் விலைவாசி
உயர்வும்  மிகுந்த வல்லரசு நாடு..

வல்லரசு நாட்டின........
நாடாளும் மாளிகையில்
எஜமானர்களின் விசுவாசமிக்க
அடிமை நாய் ஒன்று..........
குரைப்பதை மறந்து
அமைதிகாத்தது.....

திடீரென்று ஒருநாள்
எஜமானர்களின் உயர்வுக்காக
தன்நிலை மறந்து.......
நரியாக ஊளையிட்டது

நரி குரைத்தாலும்
நாய் ஊளையிட்டாலும்
வீட்டிற்கும் கேடு.......
நாட்டிற்கும் கேடு.........


.

புதன் 18 2012

சிறையை சம்ரோட்சனம் செய்த இந்தியாவின் மாபெரும் (துரோகத்) தலைவர்...

இணையத்தில் எழுதுகிறவர்களில் படிப்பவர்களில்எத்தனைபேர் குடியரசு இந்தியாவின் சிறைக்குள்சென்று வந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது.

சொந்தப்பிரச்சினை,பொது பிரச்சினை.அரசியல்பிரச்சினை போன்ற அரசின்அடக்குமுறைகளில்ஒரு முறையாவது சிறைக்கு சென்று வந்திருந்தால்

சினிமாவில்அதுவும் தமிழ் சினிமாவில் காட்டப்படும் சிறைக்கும் உண்மையான சிறைக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்ளலாம்

சட்டம் எப்படி அனைவருக்கும் சமமாக இல்லையோ!அதேபோல் சிறைச்சாலையும் சமமாக இருப்பதில்லைஎன்ற உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

சிறை ஒருசிலருக்கு மாமியார் வீடாக இருக்கலாம்.அதுஎல்லோருக்கும் மாமியார் வீடாக இருந்ததில்லை.இருக்கப்போவதுமில்லை.

இப்படிபட்ட குடியரசு இந்தியாவிற்கு சுதந்திரம் என்ற ஒன்றைபெருவதற்கு முன்னால்.அந்த சுதந்திரத்தை வாங்கித்தந்தாகசொல்லப்படுகிற அந்த மாபெரும் (துரோகத்)தலைவர் ஒருவர்

ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் இருந்தபோது அவருக்கு எல்லா வசதியும் இருந்தன சிறையில்இருக்கும் உணர்வே அவருக்கு இல்லை. மாமியார் வீடுன்னுகூடவச்சுகிருக்கலாம். அவர் சாதாரன குடிமகனில்லை. தலைவருக்கெல்லாம் அவர்தான் முதன்மையான( துரோகத) தலைவராகஇந்தவர்.(துரோகத் தலைவருக்கான ஆதாரம் .பு.மா.இ.முவின்காந்தியும் காங்கிரசும்-வெளியீடு)

எரவடா சிறையில் எல்லா வசதியுடன் அந்தத் தலைவர் இருந்தபோதும் மேலும் வசதி குறைகளை தெரிந்து கொள்வதற்க்காக அந்தச்சிறையின் முக்கிய அதிகாரி ஒருவர்அவரை பார்க்க வந்தார்.

அந்தத்தலைவரிடம் வசதி சௌரியங்களை தெரிந்துகொண்டுசென்றுவிட்டார். அந்த அதிகாரி சென்ற சிறிது நேரத்தில் அந்தஅதிகாரி வந்து சென்ற இடத்தை சம்பு ரோட்சனம் செய்தார்அதாவது அந்த அதிகாரி வந்து சென்ற இடம் தீட்டு பட்டுவிட்டதால் அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார்.

இப்படித்தான்.இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் சிறீரங்கத்து ரங்கநாதனின் கருவரைக்குள் சென்று சும்மாபடுத்தே காலத்தை கழித்த ரங்கநாதனை தொட்டு எழுப்பினார்கள் மகஇக,விவிமு தோழர்கள்.

தோழர்கள் எழுப்பிய போது முழிச்சு பார்க்காத ரங்கநாதன்ரெண்டு குடுமி போயி நின்றவுடன் முழிச்சு பார்த்தாரோஇல்லை குரட்டை விட்டாரோ தெரியவில்லை. தோழர்கள்ரங்கநாதனின் கருவரைக்குள் சென்று தொட்டதால் தீட்டுபட்டுவிட்டதாக சம்புரோட்சனம் செய்து திட்டு கழித்தார்கள்

திட்டுகழித்த இந்த வாரிசுகளின் முன்னோடியான அந்தத்தலைவர்தான் சிறையை சம்புரோட்சனம் செய்து திட்டுக்கழித்தார்

தான் சம்புரோட்சன்ம் செய்ததை மறைப்பதற்க்காக மற்றவர்களிடம்... வந்த அதிகாரி புாட்ஸ்காலுடன் வந்ததால் தரை முழுவதும் மண்ணாகி விட்டதென்று சப்பைகட்டுகட்டினார்.அந்தத் துரோகத்தலைவர்.




மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...