வியாழன் 01 2012

வாத்திமார்கள...ஏங்கினால்....நாடே ஏங்கின மாதிரியாம்




வைரம் பாய்ந்த மரமான முட்டாள் மாணவர்களுக்கு கல்வியறிவு புகுத்தியதில் சோர்வுற்று தளர்ந்து போன அரசு உயர்,மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்களின் மன அழுத்தத்தையும் சோர்வையும் போக்ககுவதற்க்காக இடைநிலைக்கல்வித்திட்டதில கல்வி மேம்பாடு சுற்றுலா என்ற பெயரில் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப் படுகின்றனர்.

இந் த சுற்றலாவில் ஆசிரியர்களின் யோக்கிமான நடவடிக்கைகளைக் கண்டு இடைநிலைக்கல்வி திட்ட கூடுதல் இயக்குநர் சில கட்டுப்பாடுகளை விதித்து உத்திரவுட்டுள்ளார்.

அந்த உத்திரவில்,ஆசிரியர்கள் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும், கவர்ச்சியான வகையில் உடை அணியக்கூடாது. ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக குழுத் தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். குழுத்தலைவர் ஒவ்வொரு நாளும் பயண நிகழ்ச்சிகளை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்க்கு தெரியப்படுத்த வேண்டும். ஆசிரியரின் பணியின்கவுரத்தை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.. ஒழுங்கற்ற முறையில் நடந்துக் கொள்ளக்கூடாது. சுற்றுலா பேருந்து பயணத்தின் போது திரைப்படம் பார்க்கக்கூடாது. இது மாதிரி இன்னும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

சுற்றுலா செல்லும் ஆசியர்களுக்கு ரெம்பவும் சாந்தோஷமாக இருந்திருக்கும்
என்பதைவிட அவர்களுடைய மாணவர்களுக்கு ரெம்ப.ரெம்ப சந்தோஷமாக இருந்திருக்கும். என்பது சொல்லவேண்டியதில்லை

இந்த வாத்தியார்களின் மக்கள் சேவையை தெரிய வேண்டுமானால் தமிழ் சினிமாவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.. சினிமாவில்
ஆடுனவங்கதானே இப்ப நாட்டையும் ஆளுறாங்க,  

தமிழ் சினிமாவில் வரும் ஆசிரியர்களைப்போல், கதாநாயகியை காதலிப் பதற்கும் டூயட் பாடுவதற்கும், டீச்சர்களுக்கு அடுத்த டீச்சரிடம்
புளியங்கா கேட்பதற்குமே, நேரம் பத்தமாட்டுது. இதில் சுற்றுலா செல்லும் சந்தோஷத்திலும் மண்ணு விழுந்திருச்சு.....அய்யோ பாவம்!!!!!!!

இருந்தாலும் மரமண்டையை கருங்கல்லாக மாற்றும் வாத்திமார்கள். இதுக்குஒரு குறுக்கு வழியை கண்டுபிடிக்கலாமா இருந்திருப்பார்கள். வருங்கால பெரிய பெரிய துாண்களை உருவாக்குபவர்களாச்சே!!!!




2 கருத்துகள்:

  1. வேறு எந்த அரசு ஊழியரையும் விட,வேறு எந்த துறை சார்ந்த ஊழியர்கள்,அதிகாரிகளை விடவும் ஆசிரியர்களுக்கு அதிக பொறுப்பும்,கடமையும் இருப்பதாகவேபடுகிறது.குரு ஸ்தானத்தில் வைத்துப்பார்க்கப்படுகிற அவர்களை பற்றியான அக்கறைகளை சமூகத்தில் அரசுகள் இன்னும் ஆழமாக விதைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டின் எல்லையை காப்பது ரானுவம், உள்நாட்டை காப்பது போலீஸ் என்பது மாதிரி அரசின் கல்வி கொள்ளை(யை)களை காப்பது ஆசிரியர்களாகவே எனக்கு தோன்றுகிறது நண்பரே!

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...