செவ்வாய் 13 2012

அது எப்படி ? கூடங்குளத்தை திறந்துவிட்டால் மின்வெட்டு தீர்ந்து விடும்! அதுஎப்படி?

தமிழ்நாட்டின் மின்தேவை 12 ஆயிரம் மெகாவாட்டு
,உற்பத்தி செய்வதோ 8ஆயிரம் மெகாவாட்டு
பற்றாக்குறையோ 4ஆயிரம் மெகாவாட்டு,
கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கினால்
 கிடைப்பது 750 மெகாவாட்டு !!அது எப்படி?

கூடங்குளம் அனுமின் நிலையம் திறந்தால்
தமிழ்நாட்டின் மின்வெட்டை போக்கமுடியும்.
 அது எப்படி? பற்றாக்குறையைபோக்காத
அனுமின்நிலையமா? அதுஎப்படி?

அது அப்படித்தான் என்றால்
மின்சாரத்தை உறிஞ்சி தேக்கி வைத்து
பயன்படுத்தும் இன்வெட்டர்,
டீசல்,மண்ணெண்ணெணய் பயன்
படுத்தும் சாதனங்களில் விற்பனை
அமோகமாக இருக்கிறதே? அது எப்படி?
இழவு விழுந்த வீட்டில் புடுங்கின
வரைக்கும் ஆதாயமா? அது எப்படி?

புறம்போக்குத்தமிழன் ஆளும்போது
ரெண்டு மணிநேரமாக இருந்தமின்வெட்டு
“அங்கிள் நான் லண்டல்ல படிச்சவ”
பட்டிக்காடா-பட்டணமா வில் வசனம் பேசி
ஆறே மாதத்தில் மின்வெட்டைபோக்குவேன்
வாக்குறுதி விட்ட ஆத்தாவின் ஆட்சியில்
மின்வெட்டு பத்து மணி நேரமாக அமுலாகுதே!
அது எப்படி? கூடங்குளம்போராட்டக்காரர்களால்
மின் பற்றாக்குறையா?  அது எப்படி?

சென்னையில் ரெண்டுமணிநேரம் மின்வெட்டாமே?
அதுஎப்படி? ஊரெல்லாம் துாங்காமல் கொசுக்கடியால்
 புளுக்கத்தால்  கொட்ட கொட்ட விழிச்சிருக்க,
பித்தம் புடிக்காமல் தவித்திருக்க,பண்ணாட்டு
நிறு வனங்களுக்கு தடையில்ல மின்சாரமா?
அது எப்படி?? அது எப்படி?..........................

அதுவும் குறைந்த விலையிலா? அது எப்படி?
அதுக,போராடாவும் இல்லை, அவதிப்படவும்
இல்லை.! அது எப்படி? ஊரை அடிச்சு உலையில்
போடும் கணக்கீடா? அது எப்படி?

கூடங்குளம் திறந்தால் மின்வெட்டு தீரும்
 கெட்டிக்காரன் புளுகை அறியாமை
இல்லாதவனும் அறியாமை உள்ளவனும்
நம்புறானே?  அது எப்படி? .

அஞ்சு வருடத்துக்கு ஒருவாட்டி வந்து
எனக்கு போடு ஓட்டு! நான் காட்டுறேன்
பாரு வேட்டு என்றானே?  என்றாளே?
அது எப்படி?.................................

 காட்டிக் கொடுப்பவனுக்கும்
கூட்டிக் கொடுப்பவனுக்கும்
துரோகிக்கும். ஓட்டுப் போடாதே!
புரட்சி செய்!  என்றார்களே!

ஓட்டுப்போட்டு ஏமாறுவது எமது பிறப்புரிமை!
போலீசிடம் அடி வாங்குவது எமது தனியுரிமை!
சொல்லாமல் சொல்கிறார்களே! அது எப்படி?

( ஓ.......ஓ......அதுவா? அது அப்படித்தான்)
அது அப்படித்தான் என்றால் அது எப்படி??????ஃஃஃ



















6 கருத்துகள்:

  1. அணுமின் நிலைய ஊழியர்களை இன்று அனுமதித்தால்கூட இரண்டு வருடத்திற்குள்ளாக மின் உற்பத்தி தொடங்காது ..இதுதான் இங்குள்ள உண்மை ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தெரியாமல் கூடங்குளத்தை திறக்கச் சொல்லி கூப்பாடு போடுறாங்களே! நாதாரிகள்!

      நீக்கு
  2. பதில்கள்
    1. திறக்கச்சொல்லி கூப்பாடு போடறவனத்தான் கேடகனும் இது எப்படி? இருக்குன்னு? அதுக்கும் மழுப்பலா அது அப்படித்தான் என்று சொல்வார்களோ?

      நீக்கு
  3. ஆமா .... பெரிய பெரிய அணு விஞ்ஞானிகள் எல்லாம் திரு . உதயகுமார் ( senior அணு விஞ்ஞானி ) தலைமையில் அணுமின்சக்தி பற்றி ஞானமாக (?) பேசுவதை பார்த்தாலே தெரியவில்லை (? / ! ).. பார்க்கலாம் பொறுத்து இருந்து நண்பரே

    பதிலளிநீக்கு
  4. கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா? நண்பரே!பொருத்து இருந்து பார்க்கலாம் யார் வீழ்வார், யார் வாழ்வார் என்று?

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...