வெள்ளி 06 2012

தனியார் மயத்தை ஒழித்தவர் மாவீரர் திப்புசுல்தான்


கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்ட போது மைசூரை
ஆட்சி புரிந்த திப்பு  வர்த்தகத்தில் பிரிட்டிசாரின் ஏகபோகத்தை
வளராது தடுக்கவும்.மக்களின் நலனுக்காவும் பல திட்டங்களை
தீட்டினார் அத்திட்டங்களில் ஒன்று, தனியார் மயத்தை ஒழிப்பது

மிளகு,சீரகம்.ஏலம் போன்றவற்றை நேரிடையாக உற்பத்தி
யாளர்களிடமிருந்து பரங்கிய வெள்ளை முதலாளிகள் வாங்குவதை
தடுத்து.அரசே, அவற்றை வாங்கி அரோபியாவிற்கு விற்பனை
செய்து. அரேபியாவிடமிருந்து வெள்ளை பிரிட்டீஸ் தொழிலதிபர்களை
வாங்கச் செய்தார்.

இதனால்.அரசே,பெரும் வர்த்தகராக்கி,தனியார் சுரன்டலையும்
 தரகு ஏஜென்டகளின் இடைத்தரகு தனத்தை ஒழித்தார்.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டத்தை இயற்றிய முதல்
மன்னன் என்ற பெருமை பெற்றார்.இலவசங்களை வெறுத்தவர்.
தன் மகன் இலவசமாக காய்கறிகளை வாங்கியதற்க்காக தன்
மகனையே தண்டித்த நேர்மையாளர் திப்பு.

நிலவுகின்ற தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் இன்றைய
கைக்கூலி ஆட்சியாளர்களின் முன்னோர்கள் கொண்டுவந்தபோது
தனியார்மயத்தை அன்றே ஒழித்தவர் பெருமைமிக்க  மாவீரர்
திப்புசுல்தான்தான்.

2 கருத்துகள்:

  1. இரண்டே கேள்விகள்:

    1.
    //மிளகு,சீரகம்.ஏலம் போன்றவற்றை நேரிடையாக உற்பத்தி
    யாளர்களிடமிருந்து பரங்கிய வெள்ளை முதலாளிகள் வாங்குவதை
    தடுத்து.அரசே, அவற்றை வாங்கி அரோபியாவிற்கு விற்பனை
    செய்து. அரேபியாவிடமிருந்து வெள்ளை பிரிட்டீஸ் தொழிலதிபர்களை
    வாங்கச் செய்தார். இதனால்.அரசே,பெரும் வர்த்தகராக்கி,தனியார் சுரன்டலையும் தரகு ஏஜென்டகளின் இடைத்தரகு தனத்தை ஒழித்தார்.//

    இதனால் யாருக்குப் பணம் சேர்ந்தது, ஐயா? திப்புவிற்குத்தானே? அரேபியாவிற்கு விற்றதின் மூலம் தங்கள் மதத்தவரை இடைத்தரகர் ஆக்கினார் என்றும் கொள்ளலாமே?

    2.
    //உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டத்தை இயற்றிய முதல்
    மன்னன் என்ற பெருமை பெற்றார்.இலவசங்களை வெறுத்தவர். //
    சரி, இவருக்கு மன்னர் பதவி எப்படிக் கிட்டியது? இவரது அப்பாவிடமிருந்து இலவசமாகத் தானே வந்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி1க்கு .இன்றை தனியார் முதலாளி மார்கள செய்கிற அயோக்கிய தனமாதிரி ,திப்பு அந்தப் பணத்தை லாக்கரில் வைத்து பூட்டிவைக்கிறதுக்கு இல்லை அய்யா....

      கேள்வி2.திப்புவை கடவுளுக்கு அர்பணிக்கிறதுக்காக துறவியாக வளர்க்கப்பட்டவர். இரண்டாவதுமகன் மனவளம் குன்றியவராக இருந்ததால் ஆட்சி பொருப்பு சுமத்தப்பட்டது. பதவிக்காகவும் சுக போகத்துக்காகவும் வாழ்ந்தவரல்ல.

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...