சனி 16 2013

தன்னை புதைப்பதற்கு 6அடி நிலம் கேட்ட தியாகி



கானி நிலம் வேண்டும் என்று இல்லாத ஒன்றிடம் கோரிக்கை வைத்தார் மகாகவி  ஒருத்தர். அந்த மகாகவியைப்போல் இல்லாத ஒன்றிடம்    கானி நிலம் கேட்காமல் ஆளும் ஆட்சியரிடம், தான் இறந்த பிறகு புதைப்பதற்கு 6அடி நிலம் கேட்டு மதுரை மாவட்ட கலெக்டரிடம் மனுநீதி நாளில் கோரிக்கை வைத்தார்.இந்திய சூதந்திற்க்காக போராடிய தியாகி ஒருவர்.

மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் அல்லா பாக்ஸ்/85 என்பவர் தியாகியான இவர். தான் வாடகை வீட்டில் குடியிருந்து வருவதாகவும். இலவச வீட்டு மனை கேட்டு மனுநீதி நாளில் பலமுறை மனு கொடுத்தும் மக்கள் சேவையே புனித சேவையாக போற்றி பணி செய்யும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மனம் நொந்துபோன தியாகி
இந்தமுறை மனுநீதி நாளில் எனக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் வழங்க முடியவில்லையென்றால் நான் இறந்தபிறகு புதைப்பதற்க்காவது 6அடி நிலமாவது கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மனு கொடுத்தார்

தியாகியின் இந்த மனுவால் முகாமே பரபரப்பு அடைந்தது, பரபரப்பை ஏற்ப்படுத்திய மனுவை விசாரனை செய்த மாவட்ட கலெக்டர் “ வீட்டு மனை தருகிறேன்,வீடு கட்ட முடியுமாஎன்று கேட்டாராம், அதற்கு தியாகி வீட்டு மனை கொடுங்கள் கட்டிக் கொள்கிறேன் என்று சொன்னவுடன் மனு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அகில ஒலகத்தை ஆளும் பராசக்தியானவள்  மகாகவியின் கோரிக்கையை ஏற்று,கானி நிலத்தை வழங்கியதாக இதுவரை தகவல் இல்லை, மகாகவியும் பெற்றதாகவும் கூறவில்லை. தியாகி அல்லா பாக்ஸ் கோரிக்கையை ஏற்று  மாவட்ட ஆட்சியரின் உத்தரவை கொண்டு. அதிகாரிகள் வீட்டு மனை வழங்கினார்களா?  6அடி நிலத்தை கொடுத்தார்களா? அல்லது நடவடிக்கையில் இருக்கிறது என்று காலத்தை ஓட்டுகிறார்களா? என்று 6அடி நிலம் கேட்ட தியாகி அல்லா பாகஸ்தான் சொல்ல வேண்டும். அடுத்த தியாகிகளுக்கு? நமக்கும்!!!!


2 கருத்துகள்:

  1. வீடு கட்ட முடியாது என்றால் நிலம் கொடுக்க ஏற்பாடு செய்திருக்க மாட்டாரா?

    பதிலளிநீக்கு
  2. ஆமாம்,எனக்கும் அப்படித்தான் தோனுகிறது.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...