வியாழன் 14 2013

ஆகையினால் காதலர்களை வாழ்த்துகிறேன்





என்னை யாரும்
காதலிக்கவில்லை
ஆகையினால்
நான் யாரையும்
காதலிக்கவில்லை

முன்னே பின்னே
செத்திருந்தால்
தானே சுடுகாடு
தெரியும்...

சொல்வடை போல்
முன்னே பின்னே
காதலித்திருந்தால்
தானே காதல்
தெரியும்.........

முன்னேயும்
காதலி இல்லை
பின்னேயும்
மனைவி இல்லை
காதல் எப்படி
பிறக்கும்....

அரை நூற்றாண்டை
கடந்தவன்
முதியவராமே!
இந்த முதியவனுக்கு
பிப்ரவரி 14ல்
காதல் பிறக்க
வழியில்லை

ஆகையினால்
காதலில்
சாதி.மதங்களை
மறுத்து
ஏற்றத்தாழ்வுகளை
ஒழித்து
அஞ்ஞானத்தை
மிதித்து
விஞ்ஞானத்தை
மதித்து
இறக்கும்வரை
காதல் செய்யும்
காதலர்களை
காதல் குடும்பங்களை
காதலர்தினத்தில்
வாழ்க! வளர்க! என
வாழ்த்துகிறேன்.

1 கருத்து:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...