கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து மகாபாரதப்போரில் அரவானை
பலியிடுவதற்கு முன் திருமணம் செய்து கொண்டதை குறிக்கும் வகையில் கூவகம் கூத்தாண்டவர் விழா கொண்டாடுகிறார்கள்.
அதே கிருஷ்னர் என்ற பெருமாளு கள்ளஅழகர்
அவதாரமெடுத்து மலையிலிருந்து இறங்கிவந்து வைகை ஆற்றில் இறங்கிவந்து மண்டூக முனிவருக்கு
சாவு விமோசனம் கொடுத்துவிட்டு தசவதாரத்தின் ஒரு அவதாரமாக வைப்பாட்டி வீட்டுக்கு
சென்று அங்கு அவதாரம் செய்வதை விழவாக கொண்டாடுகிறார்கள்.
இத்தகைய
கூத்து கும்மாளத்தில் ஆயிரக்கனக்கான கூட்டம்,இதே சித்திரையில் ஐபிஎல்
என்று கிரிகெட்என்ற கூத்தும்
கும்மாளத்துக்கும் ஆயிரக்கனக்கான கூட்டம்.
இப்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒருவிழா,அதுக்கு ஒரு தசவதாரம்,அடுத்து
ஒரு தெருவுக்கு இருக்கும் கோயில்களுக்கும்
ஒருவிழா, அதுக்கு ஒரு தசவதாரம். நாட்டிலே ஒரே கூத்தும் கும்மாளமும் விதிவிலக்கு
எதுவுமில்லாமல் தொடர்நது நடந்துகிட்டு இருக்கு.....
நாடே நாறிக்கிடக்குது,நாடு மட்டுமில்லாமல்
வீடும் சேர்ந்து நாறுது. வீட்டீலே இருக்கிற ஆம்பிளைக்கு டாஸ்மாக்குன்னா, வீட்டீல
இருக்கற பொம்பளைக்கு சீரியலு. பயல்களுக்கும் பொன்னுகளுக்கும் செல்லு,சினிமா,
,கிரிகெட்டு, இதுவும் பத்தாதுன்னு தேரோட்டம்,கல்யாணம் என்று இப்படியோரு கூத்தும்
கும்மாளமும்
எப்படியும் தப்பித்து மாற்றுவழியை பற்றி
சிந்தித்துவிடக்கூடாதுன்னு ஏகப்பட்ட தடைகள் ஒன்றா ரெண்டா எடுத்து சொல்ல, இப்படி
நாறிக்கிடக்குதப்பா, நாட்டிலேயும் சமூகத்திலேயும்..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக