ஒருமுறை போஸ்டர் ஒட்டும் போது
பிடித்துச் சென்று விட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனின் உதவி ஆணையர், “நக்சலைட்டுக்கும் நக்சல்பாரிக்கும் என்ன வித்தியாசம்னு சொல்லு, உங்கiளை உடனே ரிலீஸ் பண்ணிர்றேன்” என்று மாணவர்களை கிண்டல் செய்தார்.
அப்போது தோழர், “அவங்க கிட்ட ஏன் கேக்கறே, நான்தான் தலைவர், என் கிட்ட கேளு ” என்று முன் வந்தார். “நக்சலைட்டுக்கும் நக்சல்பாரிக்கும் என்ன வித்தியாசம்னு உங்கிட்ட நான்
ஏன் சொல்லணும், சொல்ல முடியாது” என்று பதில் சொன்னார். உறுதியாக அதிகார வர்க்கத்தை எதிர் கொள்ளும்
நெஞ்சுரத்தை அவரிடம் கற்றுக் கொண்டோம்.
சின்ன தீப்பொறி பெரும் நெருப்பாக
பரவுவது போன்ற இதுதான் நக்சல்பாரி அரசியல் என்று நடைமுறையில் கற்பித்தார் தோழர்
சீனிவாசன். தோழரின் உறுதிதான் எங்களை வலுப்படுத்தியது
மக்கள் கலை இலக்கிய கழகத்தின்
சார்பில் தோழர் சீனிவாசனின் மறைவுக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் கார்த்திகேயன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பேசியதிலிருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக