புதன் 25 2013

தேநீர் விற்றவர் பிரதமரானால்...நாட்டை விற்கமாட்டார் என்பதற்கு உத்திரவாதம் உண்டா.....??ஃ



veyilaan.com 




















நாட்டை விற்பவர்களை விட தேநீர் விற்பவர் மேல் என்றார் ஒரு கட்சி அறிவித்த பிரதம வேட்பாளர் ஒருவர்.

நாட்டை விற்றவர் யோக்கியதைகள் கொள்ளைக்கு முதலிடமும் கொலைக்கு அடுத்த இடமும் கொடுத்தவர்கள்

ஆனால், தேநீர் விற்றவர் யோக்கியதைகள் கொலைக்கு முதலிடமும், கொள்ளைக்கு அடுத்த இடமும் கொடுத்தவர்

தேநீர் விற்பவரின்  தொழில் யோக்கியதை என்னவென்று , தேநீர் குடித்த அநேகம் பேர்களுக்கு தெரியும். இருந்தாலும் என் அனுபவத்தை சொல்கிறேன்.

கொஞ்சுன்னு பால், நிறைய தண்ணி,  தேநீரில் அதிக தண்ணீர் இருப்பது தெரியாமல் இருப்பதற்க்காக தேயிலைத்தூள் கலந்த கலவை,இத்துடன்
சிறிது சீனி...........

ஒரு கிளாசில் கால்அளவே உள்ள தேநீரை...சர்ர்ர்......சர்ர்....ரென்று ஆற்றி  நுரையை பெருக்கி முழு கொள்ளவு கொண்ட தேநீரா...........ஆக்குவது.

இதோடு பார்சல் தேநீர் என்றால். சீனியை குறைத்து போடுவது...அல்லது போடாமல் விடுவது. கூடுதலாக சுடுதண்ணிரையும் தேயிலைத்தூள் கலவையை  ஊற்றுவது.

படி அரிசியில் முனி அரிசி சோமாறுவது மாதிரிதான் தேநீர் விற்பதும்.

இப்படி. தேநீர் விற்று கல்லாவை நிரப்பிய வியாபாரி. நாளை பிரதமரானால் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற நாட்டையும் விற்க மாட்டார் என்பதற்கு உத்திரவாதம் உண்டா..........???

தேநீர் விற்ற வியாபாரின் குணம்தான் மாறாமல் இருக்குமா.......???

உலக வங்கியில் பண்ணி மேச்ச  அதிகாரியே..........நாட்டை ஏலம் போட்டு விற்ற  வியாபாரியாக மாறிவிட்டபோது...............

வியாபாரி குணமுள்ள தேநீர் வியாபாரி, பிரதமராகி............வியாபாரத்தை வரிவுபடுத்த எண்ணி>  ஏற்கனவே உள்ள  முன்னால் உலக வங்கி வியாபாரியை முந்த வேண்டி அவனுக்கு நான் இளச்சவனா என்ற கோதாவில் இறங்கி..... நாட்டை கூவிக் கூவி விற்கமாட்டார்  என்பதற்கு உத்தரவாதம்தான் உண்டா.................???

குடிகாரன் பேச்சு........விடிந்தால் போச்சு என்பது மாதிரி, தேநீர் வியாபாரி தற்போது பேசிவரும் பேச்சு................. பிரதமராக ஆகி பிரதான வியாபாரியாக மாறிவிட்ட பிறகு முன்ன பேசிய பேச்சும் பின்னதில் இருக்குமா.......??
கானாமல் போகும்மா.............என்பதற்க்காவது உத்திரவாதம்தான் உண்டா.............???


3 கருத்துகள்:

  1. ""நாட்டை விற்றவர் யோக்கியதைகள் கொள்ளைக்கு முதலிடமும் கொலைக்கு அடுத்த இடமும் கொடுத்தவர்கள்""

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ நினைப்பனின் பதிவு.

    மோடியை கொலைகாரனாக ஆக்கியவர்கள் யார். ஒருவருமே போய்த் தொழாத இடத்தை இடித்தது தவறுதான். அதற்காக அப்பாவி மக்களை மும்பையில் நூற்றுக்கணக்கில் பழிவாங்கியது சரியா.

    ஒரு ரயிலில் 50 பேரை சிலர் கொளுத்தியது பொய் என்று சொல்கிறீர்களா. உண்மையானால் அவர்கள் வெளிநாட்டிலிருந்து வ்ந்தவ்ர்களா. இதற்கான தீர்வு. காந்தியின் அகிம்சை என்று நெஞ்சைத் தொட்டுக் கூற முடியுமா. (நான் காந்திய வாதி இல்லை). ஒரு மனித உயிரைப் போக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று பேசும் எல்லோரும் மோடி செய்த்து மட்டும் தவறு என்று கூறுவது ஏன் என்று புரியவில்லை.



    அயல் நாட்டு முதலீடு இங்கு வந்தபிறகுதான்."வேலை காலியில்லை" என்ற போர்டுகள் அழிந்து போயின.

    மன வருத்தததுடன்

    கோபாலன்

    பதிலளிநீக்கு
  2. தேநீர்விற்றவன் தேசியத்தையும் விற்பானுங்க....

    பதிலளிநீக்கு
  3. திரு.கோபாலன் அவர்களே! அவர்கள் உண்மைகள் மோடியை பற்றி சில பதிவுகள் போட்டு இருக்கிறார். படித்துப்பாருங்கள். இன்னும் புள்ளி விபரமாக கூடுதல் விபரம் தெரிய வேண்டுமென்றால் வினவு தளத்தை பாருங்கள் மோடி எப்படிபட்டவர் என்று தெரியும். கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...