திங்கள் 24 2014

காதல்.......திருட்டு காதல்.......???

திருட்டு காதலுக்கு நந்தியாக இருந்த கணவனை போட்டுத்தள்ளிய மனைவி,திருட்டு காதல் செய்த மனைவியை போட்டுத்தள்ளிய கணவன், இப்படித்தான் பெரும்பாலும் தினசரிகளில செய்திகள் வலம் வரும்.

அவ்வப்போது திருட்டுக காதலியை போட்டத்தள்ளிய திருட்டுக் காதலன், திருட்டு காதலனை போட்டுத்தள்ளிய காதலி --இப்படியான செய்திகளும் வலம் வரும். இப்படியான செய்திகள் பத்தரிக்கை காரர்களுக்கும் அதை படிக்கும் வாசகர்களுக்கும் அல்வா சாப்பிட்ட மாதிரி.................

இப்படியெல்லாம் ஏன் ?நடக்குது. இதுக்கெல்லாம் காரணகர்த்தா யாருன்னு பத்திரிக்கை நடத்துகிறவனும் சரி,அதை படிக்கிறவனும் சரி, சொல்றதும் இல்லை,யோசிக்கிறதும் இல்ல...........

பத்திரிக்கைகாரன் சொல்றதுமில்லை.படிக்கிறவன் யோசிக்கிறதுமில்லை பின்ன எப்படி ?  காதல்......சரி  அதென்ன திருட்டுக்காதல் இந்ததிருட்டுக்காதல்னு கண்டு பிடித்த சிஐடி யாரு????

 திருட்டுக் காதலனை போட்டுத்தள்ளிய காதலி என்ற காதல் தொடர்பான செய்தியில் யார் திருட்டுக்காதலன் ,யார் திருட்டுக்காதலி என்ற வரைறையே இல்லை . செய்தி பத்திரிக்கை காரர்களுக்கு,

கணவனோ.மனைவியோ இருவரும் சேர்ந்து வாழும்போது, கணவனோ,மனைவியோ...அடுத்தவருடன் காதல் கொள்வதுதான் திருட்டுக் காதல் என்று பொதுவாக சொல்லப்படுகிறதா.,..........???

கீழ்கண்ட திருட்டுக்காதல்  செய்தியில் காதலியானவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார்.  இவர் காதல் கொண்டவரை திருட்டுக் காதலன் என்றா சொல்லமுடியும். செய்தியில் திருட்டுக்காதலன் என்றே சொல்லப்படுகிறது எழுதப்பட்டு பரப்பபடுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு நாண்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டனர்.

பிரிந்த வெள்ளையன்  இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்த வள்ளியம்மாள்.தன் பிள்ளைகளுக்காக மறுமணம் முடிக்காமல் . அதே ஊரைச் சேர்ந்த சடையன் என்பவருடன் காதல் தொடர்பு வைத்துக் கொண்டார். இதில் வெள்ளையம்மாளின் காதலன் சடையனை திருட்டுக் காதலன் என்று சொல்ல வது சரியா.........???

சடையனுக்கு மனைவி  இருந்து  சடையன் தன் மனைவிக்கு தெரிந்தோ,தெரியாமலோ, வெள்ளையம்மாளுடன் உள்ள காதல் தொடர்பை வைத்திருப்பதை வேண்டுமென்றால் சடையனின் திருட்டுக்காதலி  வெள்ளையம்மாள் என்று சொல்லலாமா.........???

 வள்ளியம்மாளின் காதலன் சடையன் அடிக்கடி குடிபோதையில் வந்து“ ஓடிப்போகலாம் , ஓடிப்போகலாம் வற்புறுத்தி தகராறு செய்ததில் அவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டதில், கீழே விழுந்த சடையனுக்கு தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்தது.

இதைக் கண்ட வள்ளியம்மாள் காதலனை உயிரோடு விட்டால் தன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டார் என்று எண்ணி சடையனின் துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்தார் என்ற செய்தியை   திருட்டு காதலால் திருட்டுக்காதலனை பரலோகம் அனுப்பிய திருட்டுகாதலி என்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில்  திருட்டுக் காதலன்  யாரு?திருட்டுக்காதலி...யாரு ??ஃ.......யாரைச் சொல்லலாம், உண்மையான காதலையே நாடகக் காதல் என்றார்கள் சாதிவெறித்தலைவர்கள்.இப்படிபட்ட  காதலை என்னவென்று சொல்வார்கள்,.....இப்படிபட்ட காதலுக்கு யார் முன்னோடிகள் இந்து  முஸலீம் கிறிஸ்தவ மதக் கடவுளா்களா???? சினிமாக்காரானா............. அந்தப்“புரத்தில் கூத்தடித்த   ஆண்டை பரம்பரைகளா???ஃஃஃஃஃஃஃஃ






2 கருத்துகள்:

  1. களவுக் காதல் என்று சொல்லாம்...வீட்டில் கிடைக்காத காதல் அன்பு வெளியிடத்தில் கிடைக்கும் போது அதை எற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் திருடுவதில்லை. வீட்டில் சாப்பிட சாப்பாடு கிடைக்கவில்லையெனில் ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவது இயல்பு அதை யாரும் திருட்டுச்சாப்பாடு என்று கூறுவதில்லை

    பதிலளிநீக்கு
  2. அந்த சாப்பாட்டுக்கும் இந்த சாப்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லையா..?? தலைவரே!!!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...