திங்கள் 09 2014

குண்டாந்தடி போலீசை எலக்ட்ரிக் சாக் போலீசாக காட்ட வரும் படம்

devendrarkural.blogspot.com












தமிழில் வரும்  படங்கள் எல்லாமே. குண்டாந்தடி போலீசை. மக்களை மதிக்கும்  போலீசாகவே காட்டுகிறார்கள். அதில் கதாநாயகன் அப்பு அழுக்கு அற்றவராகவும், அநி யாயத்தை எதிர்த்து  சட்டத்தையே மக்களுக்காக வளைப்பவராகவுமே நடித்துள்ளனர்.

இந்தவரிசையில் இன்னுமொரு காதுல பூ சுத்துற படமாக வருவதுதான் “ அவரு வழி தனி வழி”

இந்தப் படத்தில் இந்தியன் பொலீஸ் அதாவது தமிழன் போலீஸ், மக்கள் அல்லது  கட்சிகளின் ஆர்ப்பாட்டம் ,மறியல், ஊர்வலம் போ ன்ற போராட்டங்களில் போலீசு சொல்வதை கேட்காதவர்களை, அவர்களுக்கு பணியாதவர்களை தமிழனின் இண்டர்போல் போலீசு..லத்திசார்ஜ்சில் முதலில் குண்டாந்தடியால் அடிக்கும் பின் சரளைகற்களை குவித்துக் கொண்டு , போராட்டகாரர்கள் மீது குறி பார்த்து எறியும். அதன்பின்  கண்ணீர்புகை குண்டு வீசும்  இடையிலோ, முடிவிலோ துப்பாக்கி சூடு
நடத்தி போராட்டத்தை ஒடுக்கும்.

இந்த போலீசின் இந்த போராட்டத்தில்  அதாவது துப்பாக்கி சூட்டில் செத்தவர்களை நாய்மாதிரி தூக்கி  வந்து  வண்டியிலே போடும் இதை வசதியாக திரைக்கதையில் மறைத்துவிட்டு, இதில் குண்டாந்தடி போலிசு மக்கள்  நடத்தும் போராட்டங்களில்  போது படும்பாட்டை “என்வழி தனிவழியில்”  படம் பிடித்து காட்டுகிறார்களாம்.

அதற்க்காக குண்டாந்தடி போலீஸ் படும்பாட்டை போக்குவதற்க்காக மேலை நாடுகளில் உள்ள   போலீசு இத்தகைய போராட்டங்களின்போது எலக்டரிக்கன் என்பதை பயன்படுத்தி. பேராட்டக்காரர்கள் மேல் எலகட்ரிக்சாக் வைத்து அவர்களை சுய நிணைவை இழக்க வைத்து, அப்படி

சுய நிணைவை இழந்தவர்களைஅலுங்காமல் குலுங்காமல்  மேற்க்கண்ட குண்டாந்தடி அடி, சரளை கற்களை குவிக்காமல் எறியாமல், துப்பாக்கி தூக்காமல் துப்பாக்கி குண்டு வீணாகாமல், எந்த வித கஷ்டமில்லாமல் போரட்டக்காரர்களை கைது பண்ணி  சிறைக்கு கொண்டு செல்ல பயன்படுவதே எலக்ட்ரிக்கன் என்ற எலக்ட்ரிக்சாக் என்பது..

இது இந்தியாவைத்தவிர மற்ற எல்லா நாடுகளிலும் இருப்பதாகவும். அதை இந்தியாவுக்கும் தமிழன் போலீசுக்கும் கொண்டு வந்து தமிழன் போலீசின் சிரமத்தை குறைக்க வேண்டும் என்ற மெஜெசை சொல்லி  போலீசு மேலே ஒரு மரியாததையை ஏற்ப்படுத்துறாங்களாம்.

இதுதான் ”என்வழி தனிவழி”  படத்தின் திரைக்கதையாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...