வியாழன் 03 2014

வாய்தா கொடுத்த முதல் அமைச்சரும் வாய்தா கேட்ட முன்னால் முதல் அமைச்சரும்.

பக்தவச்சலம்





பத்தவச்சலம் என்பவர்  களவானி காங்கிரசில் காமராஜர்க்கு பின் முதல் அமைச்சராக இருந்தபோது

 சட்டசபை தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில்  பிழைப்பு வாத்த்தின் பிதாமகன்  வெற்றி பெற்றார்.

அப்போது  பிதாமகனிடம் பதவி இழந்த பத்தவச்சசலம் வாய்தா கேட்டார். எதற்கு வாய்தா கேட்டார் என்றால்..

 முன் னோரு காலத்தில்  இந்தியாவின் அரசர்கள்   எல்லாம்  தலை முடி வளர்த்து கொண்டை யிட்டு முக்காலியில் அமர்ந்து ஆட்சி செய்தார்கள் .

 அதையெல்லாம்  கும்பினிக்காரர்கள் மாற்றி மேஜை, நாற்காலி,சோபா என்று பலவற்றை மாற்றினார்கள்

கும்பினிக்காரகள் கொண்டு வந்து பழக்கப்படுத்திய   நாற்காலியில் அமர்ந்து பழக்கப்பட்டுப்போயிருந்தனர்.இந்திய அமைச்சர்கள்.

இதனால் அந்தக் காலத்தில்  தமிழ்நாட்டை ஆளும்  முதல்அமைச்சர்  அடுத்த தேர்தலில் தோற்று பதவியிழந்தால் அவர் வீட்டிலிருக்கும் சோபா நாற்காலிகளை எடுத்துக்கொண்டு , வெற்றி பெற்று புதிதாக பதவி ஏற்கும் முதல் அமைச்சரின் வீட்டுக்கு கொண்டு சேர்ப்பது அந்தக்கால நடைமுறை.

அந்த நடைமுறையின்படி  பத்தவச்சலம் வீட்டிலிருந்த சோபா மேஜை,நாற்காலி எடுத்துச் செல்வதற்க்காக அதிகாரிகள்  சென்றனர்.

அப்போது பிழைப்பு வாதத்தின் பிதாமகனிடம் களவானி காங்கிரசின் பத்தவச்சலத்தின் மகள் தொலைபேசியில் பேசினார்.

எங்கள் வீட்டீலுள்ள சோபா,நாற்காலிகளை அதிகாரிகள் எடுக்கிறார்கள். அதை எடுத்து சென்றுவிட்டால். உட்காருவதற்கு சோபா,நாற்காலி எதுவுமில்லை, நீங்கள் அதிகாரியிடம் சொல்லி, ஒரு வாரம் வாய்தா கொடுத்தால் அதற்குள் வேறு நாற்காலி,சோபாக்களை ஏற்பாடு செய்து விடுவோம். இதை அப்பா உங்களிடம் சொல்லச் சொன்னார் என்றார்.

இதைக்கேட்ட புதிய முதல்அமைச்சரான பிதாமகன், அதிகாரிகளை கூப்பிட்டு பத்தவச்சலம் வீட்டிலிருந்து நான் சொல்லும்வரை நாற்காலி,மேஜைகளை எடுக்கக்கூடாது என்று உத்தரவு போட்டார்.


2 கருத்துகள்:

  1. இது பரவாயில்லையே ,சமீபத்தில் ஒரு மந்திரி தங்கி இருந்த வீட்டில் இருந்து எல்லாவற்றையும் அள்ளிச் சென்று விட்டாராமே ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. அது கொள்ளைக்கார மந்தியதாக இருக்கும்ஜீ

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...