வியாழன் 12 2015

புழுதி வாரி தூற்றியவர்களுக்கு...........!!!!!!!!!!

படம்-மாபெரும் ஜனநாயகவாதி தோழர் ஸ்டாலின்
எதற்காக எல்லோரும் ஸ்டாலினை "சர்வாதிகாரி" என்று சொல்கிறார்கள்? ஸ்டாலின் கால சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப் பட்ட உண்மைக் கதை இது:

ஸ்டாலினின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஒருவர், பொது மக்களின் பணத்தை சுருட்டி வந்தார். அந்தப் பணத்தில், மாஸ்கோ நகருக்கு வெளியே ஆடம்பரமான பங்களா வீடொன்றை கட்டி வந்தார். வீடு கட்டி முடிந்ததும், ஸ்டாலின் அவரைத் தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பேசினார்.

"அமைச்சரே! உங்களுக்கு பிள்ளைகள் என்றால் விருப்பமா?"


"ஆமாம், எனக்குப் பிள்ளைகள் மீது கொள்ளைப் பிரியம் உள்ளது." என்றார் அமைச்சர் ஆர்வத்துடன்.

"நல்லது. அப்படி என்றால் நீங்கள் புதிதாக கட்டிய அந்தப் பெரிய வீட்டை, சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு தானமாக கொடுத்து விடுங்களேன்?" என்றார் ஸ்டாலின் அமைதியாக.

(நன்றி: The Red Executive, by David Granick (1960)) 

 தகவல்..Kalaiyarasan Tha

10 கருத்துகள்:

  1. எமக்கு புதிய தகவல் நன்றி நண்பரே
    தமிழ் மணம்1

    பதிலளிநீக்கு
  2. கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு. புதிய தகவல் அறியதந்தமைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. மகேஸ்வரி பாலசந்திரன் அவர்களே!!!

      நீக்கு
  3. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. யாழ்வாவணன் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  4. ஆனால் அதே ஸ்டாலின்தான் போலந்துநாட்டின் பல மக்களை குலாப் முகாம்களில் அடைத்து சித்தரவதை செய்து தன் நாட்டின் உலோக வளங்களை உற்பத்தி செய்தார் என்பதும் வரலாற்று உண்மையாயிற்றே தல ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் புழுதி வாரி தூற்றியதில் ஒன்றுதான் தல......

      நீக்கு
    2. Kalaiy Arasan
      குலாக் முகாம்களில் போலந்து காரர்களை மட்டும் அடைக்கவில்லை. வர்க்க எதிரிகள் என்று கருதப் பட்ட அனைவரையும் பாரபட்சம் காட்டாமல் அடைத்து வைத்தார்கள். குலாக் என்பது எல்லாம் ஒரே மாதிரியான முகாம்கள் இல்லை. தண்டனை கொடுக்கும் சில கடும் உழைப்பு முகாம்கள் பல இருந்துள்ளன.

      நீக்கு

கதையும் காரணமும்..

ஒன்று-  அன்புள்ள உறுப்பினர்களே! இன்று கூடவிருந்த நமது கூட்டம் எதிர்பாராத சில காரணங்களால்  தள்ளி வைக்கப்படுகிறது. இரண்டு- அன்பிற்கினிய உறுப்ப...