தெய்வங்கள் பெயரைச்
சொல்லி கோல்
ஆட்டும் இந்திய
திருடர் நாட்டில்
பழனிக்கும் சபரி மலைக்கும்
மாலை போட்டும்
மாலை போடாலும்
இருக்கும் உத்தம
பக்தி மான்களும்
தெருவுக்கு ஒரு
கோயில் கட்டி
அதற்கு ஆடியில்
கடவுளின் வழிபாடு
என்று சொல்லி
தெரு ரோட்டையே
மறித்து பக்தியை
காட்டி ஆட்டம்
போடும் பக்தர்களும்
பக்த கேடிகளும்
ஒரு பூகம்பம்
என்று ஒன்று
வந்தால் அந்த
பக்தி மான்களும்
பக்த மாக்களும்
பக்த கேடிகளும்
உடனே ஓடி
ஒளிவது கடவுள்
குடி இருக்கும்
கோவிலுக்கு உள்ளே..
அல்ல அல்ல
அவர்கள் அனைவரும்
பதறிஅடித்து
நான் முந்தி
நீ முந்தி
என்று ஓடி
வந்து நிற்பது
நடுத் தெருவுக்குதான்..
எதிரே யானை ஒன்று, மதம் பிடித்து வந்தாலே போதும் ,தோளில் சுமக்கும் உற்சவ மூர்த்தியைக் கீழே போட்டு விட்டு ஓடியே விடுவார்கள் :)
பதிலளிநீக்குஅருமையா உண்மையை வெளிபடுத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குமுன்னால் எல்லாம் கோவில்கள் உருவாக்கப்பட்டதற்கு இந்த நோக்கமும் காரணம். ஊரின் நடுவில் இருக்கும் ஒரு பெரிய கோவில் அந்த ஊர் மக்கள் தங்குமளவு இடம் கொண்டிருக்கும். வெள்ளத்தாலோ, பூகம்பத்தாலேயே பாதிக்கப்படாமல் இருக்கும் அளவு கட்டட அமைப்பு இருக்கும். இப்போது தெருவுக்கு இரண்டு ரோடோரக் கோவில்கள் முளைத்து விட்டன.
பதிலளிநீக்குஸ்ரீராமின் கருத்தை ஆமோதிக்கின்றோம்
நீக்குOK
பதிலளிநீக்கு