வியாழன் 11 2019

அதிகாலை கனவு-39.

 நடப்பும் சிந்தனையும்......








வர வர என் தொழில் நலிவடைந்து வருகிறது..கிடைக்கின்ற ஒன்ரண்டு வேலைகளையும் உடனுக்குடன் முடித்துக் கொடுத்தாலும்  உடனடியாக பில்லும் உடனடியாக கிடைப்பதில்லை.. இதனால் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிரமமாக இருக்கிறது. வேலையாட்களும் இதை உணருவதில்லை.. சென்ற மாதத்திற்குண்டான பில்லுக்கான ஜிஎஸ்டி
வரி கட்டுவதற்கு கூட திண்டாடும் நிலை....


சும்மாவே பகலில் நான் தூங்குவதில்லை... வேலை இல்லாததால். சுத்தமாக தூங்கவதில்லை.... வேலையில்லாததால் படிக்காமல் விட்ட புத்தகங்களை படிக்கலாம் என்று புத்தக்ததை திறந்தால்  தலை கோடாங்கி அடித்தாலும் விடக்கூடாது என்று உறுதியுடன் புத்தகத்தை விரித்தால்...கெடுப்பதற்கே சிற்றெறும்புகள் படை வரிசையாக வந்து தொல்லை கொடுத்தன. அவற்றோடு ஒரு சில பெரிய கருப்பு எறும்புகளும்  நான் படிப்பதை கெடுத்தன..


ஒரே அடியாய அடித்து போட கையை ஓங்கினாலும். எனக்கு இருக்கும் இரக்க குணத்தால்.. சே.... நாம..யாரு.அதக் கொல்வதற்கு..அது என்ன  தெருவில இருக்கிற மனுசி, மனுசன்மாதிரியா  நமக்கு தொல்ல கொடுக்குது... அம்புட்டு தொல்ல கொடுத்த அந்த மனிதர்களையே விட்டுவிட்டோம்..இதுகிட்டயா நம்ம வீரத்த காட்டுறது என்ற சிந்தனை வந்தவுடனே... ஓங்கிய கையை மாற்றாமல். அப்படியே  அந்த பெரிய கறுப்பு எறும்புகளை பிடித்து வாசல் வெளியே தூக்கி எறிந்து விட்டு  புத்தகத்தை பார்த்து படிக்க ஆரம்பித்தால் இன்னொறு எறும்பு... இப்படி  நாலந்து தடவை... படிக்கிற சிந்தனை போச்சு..

சிற்றெறும்பு கட்டெறும்பு, கறுப்பு எறும்பு..என எல்லாவற்றையும் அடிக்காமல் டேபில் காற்றாடியை  அதி வேகத்தில் ஓடவிட்டு எல்லாவற்றையும் ஓடவிட்டேன். அதை முடித்துவிட்டு கடையப் பக்கம் மற்றும் ரோட்டு பக்கம் சென்று கொஞ்சம் நடை நடைந்து  அப்புறம் வீட்டுக்குவந்து.. இருக்கிறதை அதாவது தட்டில் போடுவதை வயிற்றுக்கள் இறக்கிவிட்டு...  சிறிது நேரம் செல் போன்  நோண்டல் அதுவும் போரடித்துப்போக...  தூக்கம்வர மீண்டும் புத்தகத்தை திறந்து ஒரே பக்கம் ஒரு பக்கம்தான் படித்திருப்பேன்  கண்கள் சொருக..அப்படியே சாய.....


அப்படி சாய்ந்து தூங்கின தூக்கத்தில் மேற்படி  சொன்னவை எல்லாம் நிணைவுக்கு வர திடிரென்று  காதுக்குள் எறும்பு புகுந்து விட்டதால் தூக்கம் கலைய காதுக்குள் சென்ற எறும்பு காதை கடிக்கும் வலியை பொறுத்துக் கொண்டே அருகில் வைத்திருக்கும் தண்ணீரை  காதுக்குள் விட  வலி குறைந்தது.... விபத்தினால் காது சரிவர கேட்பதில்லை.. இந்த லட்சணத்தில் இந்த எறும்பு போயி காதை கடித்தால்  காது என்ன கேட்டுவிடவா போய்கிறது என்று சிந்தித்தபடியே  சூரிய வெளிச்சம் வருவதற்க்காக ஊறும் எறும்புகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் காத்திருந்தேன்...


2 கருத்துகள்:

  1. நானும் இப்படித்தான் நண்பரே மூட்டைப்பூச்சியை நசுக்க மனம் வராமல் வெளியில் போட்டு வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா..மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாக இல்லாமல் இருந்ததே பெரும் விசயம.. என்னைவிட தங்களுக்கு இரக்க குணம் அதிகம் நண்பரே..!!

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...