செவ்வாய் 13 2019

அதிகாலை கனவு-49.

ஏமாந்த பாதகத்தன்....



பலமுறை  கைபேசி மணி அடித்தது. வண்டியில் சென்றதாலும்  காது கேட்பு திறன் பாதிக்கப்பட்டு இருந்ததாலும் கேட்கவில்லை.. வீடு வந்து சேர்ந்து கைகால் முகம் கழுவி வயிற்றுக்குள் ஆகாரத்தை தள்ளிவிட்டு பின் கைப்பேசியை எடுத்து பார்த்தபோது மிஸ்டு கால் பத்துக்கு மேல் அதில் ஒருத்தர் மட்டும் ஆறுதடவைக்கு மேல் இருந்தது.

முதலில் தெரிந்த நபர்களிடம் இருந்து வந்த கால்க்கு ஒவ்வொன்றாக பேசி முடித்துவிட்டு  ஆறு..ஏழுாவது தடவையாக அடித்த தெரியாத நபர்க்கு கால் செய்து  சார்..வணக்கம், வண்டியில் போய்க் கொண்டு இருந்ததால் பேச முடியவில்லை மன்னிக்கவும்.  இனி விபரத்தை சொல்லுங்கள் என்று பேச்சை முடிக்குமுன்....

ஆ...ஆ.... மன்னிப்பா...சே...சே... வேண்டாம்   ...இதுவரையில் கேட்டிராத பெண் குரல்.  எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? என்றது. குரல்... என்ன உதவி சொல்லுங்கள் என்னால் முடியுமா?  என்று சொல்கிறேன்.. நீங்கள் அன் மேரிடா என்றது குரல்...ஆமாம் என்றதும்.. ஓ..ஓ... தேங்கஸ் என்றது குரல்.

பின் அந்தக் குரலே..பேசியது.... நான் வீட்டைவிட்டு ஒடி வந்துவிட்டேன்... நான் வைத்திருந்த காசுபணமெல்லாம் செலவாகிவிட்டது..... அதனால....நீங்க
எனக்கு ஒரு உதவி ..??  எவ்வளவு வேண்டும்....அய்யோ..பணம் கேட்கவில்லை ஒரு உதவி மட்டும் வேண்டும்... என்ன உதவி  சொல்லுங்கோ...... நீங்க நேரில வரமுடியுமா..? நேரிலா...? எங்க வரணும்... இடத்த சொல்லுங்கள்..

இடத்தை கேட்டபின் தயக்கமாக இருந்தது .. போகவர   இருநூறுக்கு மேல் செலவாகும்...பேரு. ஊரு, போன் நம்பரு இடம் எல்லாத்தையும் தப்பு இல்லாம சொல்லுது... உண்மையாகத்தான்...இருக்கும்...  எவரிடமும்  எதுவும் சொல்லாமல் பஸ் ஏறி... புறப்பாட்டுச்சு.......



பஸ்சில் செல்லும்போது பற்பல நினைவுகள்.  ஊசலாட்டங்கள்.   பின் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்தக் குரல் சொன்ன இடத்தை அடைந்த போது அந்தத் தெரு  திருவாளர் ஏரியாகவாக இருந்தது.. திருவாளர் ஏரியா என்றால்... பக்கத்துவீடடில் யார் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது...

கேட்டை திறந்து வாசல் மணியை அடித்து நின்றபோது..கதவைத் திறந்த பெண்... ஓ...வந்திட்டீங்களா...!!! வாங்க.... வாங்க உள்ளே வாங்க  ! என்று அழைத்துப் போனார். வரவேற்பு பலமாக இருக்கிறதே உள் குத்து எதுவும் இருக்குமோ என்ற சந்தேகத்தில் உள்ளே போனதும் என் பெயரைச் சொல்லி அழைத்த குரல் .வந்த திசையை பார்த்தவுடன்    திடுக்கிட்டு போனேன்...












4 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...