பக்கங்கள்

அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள் 27 2026

நிலை மாறும் தொழில்கள்....

 



கோடாக் கேமரா நிறுவனம் நினைவிருக்கிறதா? 1997 ஆம் ஆண்டில், கோடாக்கில் சுமார் 1,60,000 பணியாளர்கள் இருந்தனர். உலகின் 85% புகைப்படம் எடுத்தல் கோடாக் கேமராக்கள் மூலம் செய்யப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக மொபைல் கேமராக்கள் அதிகரித்து வருவதால், கோடாக் கேமரா நிறுவனம் சந்தையை விட்டே போய்விட்டது. கோடாக் நிறுவனம் முற்றிலும் திவாலானது மற்றும் அதன் ஊழியர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் மேலும் பல பிரபல நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள போராட வேண்டியதாயிற்று.

எச்எம்டி (கடிகாரம்)     பஜாஜ் (ஸ்கூட்டர்)     டயனோரா (டிவி)    மர்பி (ரேடியோ) நோக்கியா (மொபைல்)  ராஜ்தூத் (பைக் )   அம்பாசிடர் (கார்)

போன்ற எந்த நிறுவனமும் மோசமான தரத்தைக் கொண்டிருக்க வில்லை. இந்த நிறுவனங்கள் ஏன் தாக்குப் பிடிக்க முடியவில்லை? ஏனென்றால் காலப்போக்கில் அவர்களால் தங்களை எதிர் காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியவில்லை.

தற்போதைய தருணத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் எவ்வளவு மாறக்கூடும் என்று நீங்கள் கனவில்கூட நினைத்திருக்க மாட்டீர்கள்! இன்றைய 70%-90% வேலை வாய்ப்புகள் அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக போய் விடும்.  மெதுவாக "நான்காவது தொழில் புரட்சி" யுகத்தில் நுழைகிறது

இன்றைய பிரபலமான நிறுவனங்களைப் பாருங்கள்-

UBER என்பது ஒரு மென்பொருள் பெயர். அவர்களிடம் சொந்தமாக கார்கள் இல்லை. இன்று உலகின் மிகப்பெரிய வாடகை டாக்ஸி நிறுவனம் UBER ஆகும்.

Airbnb இன்று உலகின் மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனமாகும். ஆனால் வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்கு உலகில் சொந்தமாக ஒரு ஹோட்டல் கூட இல்லை.

இதேபோல், Paytm, Ola Cab, Oyo போன்ற எண்ணற்ற நிறுவனங்களின் உதாரணங்களைக் கொடுக்கலாம்.

இன்று அமெரிக்காவில் புதிய வழக்கறிஞர்களுக்கு வேலை இல்லை, ஏனென்றால் IBM Watson என்ற சட்ட மென்பொருள் மூலம் எந்தப் புதிய வழக்கறிஞரையும் விட மிகச் சிறப்பாக வாதிட முடியும். இதனால், கிட்டத்தட்ட 90% அமெரிக்க வழக்கறிஞர்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் எந்த வேலையும் இருக்காது. மீதமுள்ளது 10% நிபுணர்கள் மட்டுமே இருப்பார்கள்.

புதிய டாக்டர்களுக்கும் வேலை இல்லாமல் போகும். வாட்சன் மென்பொருள் மூலம் புற்று நோய் மற்றும் பிற நோய்களை மருத்துவர்களை விட 4 மடங்கு துல்லியமாக கண்டறிய முடியும். கணினி நுண்ணறிவு 2030 க்குள் மனித நுண்ணறிவை மிஞ்சும்.

இன்றைய கார்களில் 90% அடுத்த 20 ஆண்டுகளில் சாலைகளில் காணாமல் போய் விடும். மீதமுள்ளவைகள் மின்சாரம் அல்லது ஹைபிரிட் கார்கள் மூலம் இயங்கும். சாலைகள் மெதுவாக காலியாகிவிடும். பெட்ரோல் நுகர்வு குறைந்து, எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் மெல்ல மெல்ல திவாலாகிவிடும்.

கார் வேண்டும் என்றால் உபெர் போன்ற மென்பொருளிடம் தான் கேட்க வேண்டும். மேலும் நீங்கள் கார் கேட்டவுடனேயே முற்றிலும் டிரைவர் இல்லாத கார் வந்து உங்கள் வீட்டு வாசலில் நிற்கும். நீங்கள் ஒரே காரில் பலருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ஒரு காரின் வாடகை பைக்கை விட குறைவாக இருக்கும்.

ஓட்டுநர் இல்லாமல் வாகனம் ஓட்டினால் விபத்துகளின் எண்ணிக்கை 99% குறையும். இதனால்தான் கார் இன்சூரன்ஸ் நிறுத்தப்படும் மற்றும் கார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு வேலை இல்லாமல் போகும்.

உலகில் கார் ஓட்டுனர்கள் இனி பிழைக்க வழி இருக்காது. 90% வாகனங்கள் சாலையில் காணாமல் போகும் போது, ​​போக்குவரத்து போலீசார் மற்றும் பார்க்கிங் பணியாளர்கள் தேவைப்பட மாட்டார்கள்.

யோசித்துப் பார்த்தால்.., 10 ஆண்டுகளுக்கு முன்பு கூட தெருக்களில் STD பூத்கள் இருந்தன. நாட்டில் மொபைல் புரட்சி வந்த பிறகு இந்த STD பூத்கள் அனைத்தும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன. பிழைத்தவர்கள் மொபைல் ரீசார்ஜ் கடைகளுக்கு மாறிவிட்டனர். மொபைல் ரீசார்ஜில் மீண்டும் ஆன்லைன் புரட்சி. மக்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் மொபைலை ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யத் தொடங்கினர். இந்த ரீசார்ஜ் கடைகள் மீண்டும் வேறு வியாபாரத்துக்கு மாற வேண்டியிருந்தது. இப்போது இக் கடைகள் மொபைல் போன்கள் வாங்கவும் விற்கவும் பழுதுபார்க்கவும் மட்டுமே செய்கின்றன . ஆனால் இதுவும் மிக விரைவில் மாறும். அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றிலிருந்து நேரடியாக மொபைல் போன் விற்பனை அதிகரித்து வருகிறது.

பணத்திற்கான அர்த்தம் மாறி வருகிறுகிறது. முன்பெல்லாம் ரொக்கம் கையில் இருந்தது, ஆனால் இன்றைய காலத்தில் அது "பிளாஸ்டிக் பணம்" ஆகிவிட்டது. கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் புழக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு இருந்தன. இப்போது அதுவும் மாறி மொபைல் வாலட் காலம் வரப்போகிறது. Paytm Gpay இன் வளர்ந்து வரும் சந்தை, மொபைல் பணத்தின் காலமாக ஆகிவிட்டது.

காலத்துக்கு ஏற்ப ஒத்துப்போக முடியாதவர்களை, காலம் இந்த உலகத்திலிருந்து நீக்குகிறது. 


வெள்ளி 10 2026

இரண்டு நண்பர்கள்








இரு நண்பர்கள் 
கனவுகள் இருந்த
இடத்தில் விஞ்ஞானத்தை
நிலை நாட்டினார்கள்.. 

மனிதர்கள் தங்கள் 
வரலாற்றை உருவாக்குகிறார்கள்
ஆனால் அந்த 
வரலாற்றை தாங்கள் 
விரும்பும் படியெல்லாம்
அதை உருவாக்குவதில்லை 


ஆலோசனை சொல்வதற்கு
ஆசான்கள் காத்து 
கொண்டு இருக்கிறார்கள். 
நாம்தான் காதை
திறந்து வைத்துக் 
கொள்ள வேண்டியிருக்கிறது 


 நிச்சயமாக அறிவியலை 
உரசி பார்க்க பழகிக் 
கொண்டால் புரட்சி 
சாத்தியமில்லாமலா போகும்...............



வெள்ளி 19 2026

எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!

 






இளமையில் அழகாக

இல்லை முதுமையில்

அழகாக இருக்கிறாய்.

                                         -  ஒரு பாட்டி சொன்னது

ஓடோடி சென்றேன்

கண்ணாடியில் பார்க்க

தேடியும் கிடைக்கவில்லை

கண்ணாடி.......பாட்டி

சொன்னது உண்மையாய்

இருக்கும்... இல்லையென்றால்

கண்ணாடி கிடைத்திருக்குமே...

               

திங்கள் 08 2026

சினிமாவில் வில்லன்- நிஜத்தில் சூப்பர் ஸ்டார்

 


“தற்கொலைக்கு முன் என்னை 

ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள். "

- இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் 

அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்! 


இவை ஏதோ சினிமா வசனம் அல்ல!

நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள்!


அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல! இந்தி நடிகர் நானா படேகர் தான்! தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் இவர் முதலில் நடித்த படம் : 'பொம்மலாட்டம்'..சமீபத்தில் 'காலா' திரைப்படத்தில் ரஜினிகாந்தோடு, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்தாரே,அதே நானா படேகர்தான்!


வறட்சியால் மிக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதி மகாராஷ்ட்ராவின் மராத்வாடா. கூரைகள் இல்லாத வீடுகள். கொடூர வெயிலில், விவசாய நிலங்கள் பாளம் பாளமாக வெடித்திருக்கும். மின்சாரமும் இருக்காது. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பார். அரசியல்வாதிகளே எட்டிப் பார்க்கத் தயங்கும் மக்கள் நிறைந்த பகுதி. இங்கு அடிக்கடி ஒரு பிரபலத்தை மட்டும் காண முடியும். இருட்டிலும் கூட செல்போன் வெளிச்சத்தில், அந்தப் பிரபலத்தின் கைகள் செக் விநியோகித்துக் கொண்டிருக்கும். சினிமா உலகில் அவரது பெயர் நானா படேகர், மராத்திய மண்ணில் பிறந்த நடிகர்.


திரையுலகுக்கு வருதற்கு முன் போஸ்டர் ஒட்டியும், சாலைகளில் ஜீப்ரா கோடு வரைவதும்தான் நானாவின் பிழைப்பு. தினச்சம்பளம் 35 ரூபாய். சொற்ப சம்பளத்தில் தாயும் மகனும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். மராத்தி நாடகங்களில் நடித்து, ஹிந்தி சினிமாவில் புகுந்த பிறகு, வருமானம் கொட்டியது. மூன்றே மாதங்களில் முழு சினிமாவை முடித்து விடும் இன்றைய காலத்தில், 'பிரகார் ' என்ற படத்தில் நடிப்பதற்காக, இந்திய ராணுவத்திடம் 3 ஆண்டுகள் சிறப்புப் பயிற்சி பெற்ற, சற்றே வித்தியாச நடிகர் நானா. 


மகாராஷ்ட்ராவில் கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத வறட்சி. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை. அரசாலும் தடுக்கமுடியவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராடியும் இயலவில்லை. நடிகர் என்பதையும் தாண்டி, சொந்த மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கொத்து கொத்தாக செத்து மடிவது நானாவை என்னவோ செய்தது. குறிப்பாக மராத்வாடாப் பகுதியில் நாக்பூர், லாத்தூர், ஹிங்கோலி, பிரபானி, நான்டெட் மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகம்.


விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க என்ன செய்யலாம் என யோசித்தார் நானா. சில காலம் சினிமாவை ஒதுக்கி வைத்தார். சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து 'நாம் ' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். முதல் நாளே 80 லட்ச ரூபாய் நன்கொடை குவிந்தது. நானா படேகர் என்ற அந்த பெயருக்கு மக்களிடம் அத்தனை செல்வாக்கு. 2 வது வாரத்தில் 7 கோடியாக உயர்ந்தது. மொத்தம் 22 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது.


நன்கொடை பணம் முழுவதும் விவசாயிகளுக்கு முழுமையாகச் சேர வேண்டும் என்பது நானாவின் அடுத்த இலக்கு. இந்த விஷயத்தில் நானா படேகர் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார். நன்கொடையும் ஏராளமாக வந்துவிட்டது. வேறு ஏதாவது அமைப்பு வழியாக வழங்கிடுவோம் என்று அவர் ஒதுங்கி விடவில்லை. மூன்றாவது அமைப்பின் தலையீட்டை அவர் அனுமதிக்கவில்லை. எந்த அமைப்பையும் அணுகவில்லை. அவரே நேரடியாகக் களத்தில் குதித்தார்.


மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை வீடு வீடாகச் சென்று நானாவே நேரடியாக சந்தித்தார்.  வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர்க்கும் நேரடியாகச் சென்று நிதியுதவி வழங்கினார். கணவரை இழந்த மனைவிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.


மகாராஷ்ட்ராவில், இப்போது 700க்கும் மேற்பட்ட கிராமங்களில், நானா படேகரின் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் கண்டறிந்து உதவி செய்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை குறைந்திருப்பது நானாவுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நிதியுதவி போக, எஞ்சிய பணத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களைத் தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு கோடிக்கு மேல் மரங்கள் நடப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.


ஒவ்வொரு கிராமத்துக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது நானா படேகரின் அடுத்த இலக்கு. அறக்கட்டளை வழியாக சேர்ந்த பணத்தை மட்டுமல்லாது, சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கே நானா படேகர் வழங்கி விட்டார்.மேலும் விருதுகள் மூலம் கிடைத்தத் தொகையையும் இதில் போட்டார்.


திரையில் ஆன்டி ஹீரோவாக நடிக்கும் நானாதான், மராத்வாடா மக்களின் நிஜ ஹீரோ.கோடி கோடியாக பணம் சம்பாதித்த போதும், மும்பையில் ஒரு பெட்ரூம் கொண்ட பிளாட்டில்தான் இப்போதும் தாயுடன் வசிக்கிறார் நானா. ''சம்பாதித்த பணத்தை அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டீர்களே'' என்றால் , 'இப்போதுதான் நான் பிறந்ததற்கான அர்த்தத்தை உணர்ந்திருக்கிறேன்'' என 'நச்' பதில் வருகிறது அவரிடமிருந்து. இப்போது மும்பை, தானே, புனே,நாக்பூர், அவுரங்காபாத் என இவர் உதவும் பரப்பு விரிவடைந்திருக்கிறது.


'உங்களுக்கு தற்கொலை எண்ணம் வருமானால் தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்.!'- நானாவின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இவை.





நன்றி: 

இடது இயக்கம் (முகநூல்)

மீள்பதிவு: 01-06-2026


இந்தி நடிகர் நானா படேகர் 


புதன் 03 2026

ஆகவே, விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!

 ***


வி
ல்ஹெல்ம் லீப்னெஹ்ட் (1826-1900) ஜெர்மன் சமூக ஜன நாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருள் ஒருவர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போராட்டத்தின் வெற்றிக்கு மனப்பூர்வமாகப் பாடுபடும் தொழிலாளி வர்க்கத் தலைவர்கள் தமது வாழ்வு மற்றும் பணி மூலம் உதாரணமாக விளங்குவதைப் போன்று அவர் இருந்தார்.

“லீப்னெஹ்ட்டின் பெயர் ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்ததாகும்” என்று எழுதினார் லெனின். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லீப்னெஹ்ட் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்குத் தலைமை தாங்கினார். கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் இவர்களது நண்பராய், சக தோழராய் இருந்தார். தலைசிறந்த பாட்டாளி வர்க்க நிறுவன ஒழுங்கமைப்பாளராகவும் சங்கநாதமென ஒலித்த குரலாகவும் ஜெர்மனியின் எல்லைகளுக்கு அப்பாலும் முற்போக்குத் தொழிலாளர்களின் அன்புக்குப் பாத்திரமாகி அவர்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தார். தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த போராட்டத் தலைவராக இருந்த அவர் ஆற்றல் மிகுந்த பிரசாரகராயும் விளங்கினார்.

சிலந்தியும் ஈயும் ஐரோப்பிய நாடுகளில் அது வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் தெளிவான, எளிய நடையில் புலப்படுத்துகிறார். ஒடுக்குமுறைத் தளைகளை முறிக்க வேண்டுமாயின் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு ஒருசேரப் பாடுபடுவது ஒன்றே வழி என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

– பதிப்பாளர், மாஸ்கோ பதிப்பகம்


சிலந்தியும் ஈயும்

நீங்கள் எல்லோரும் அதை நன்கு அறிவீர்கள் – அந்தப் பூச்சி சால் போன்ற வயிறுடையது. முடிகள் மண்டிய பிசுபிசுப்பான உடல் கொண்டது. பகலின் ஒளியிலிருந்து தூர விலகி இருண்ட இடங்களில் பதுங்கியிருக்கிறது. கொலைகார வலையைப் பின்னி வைக்கிறது. கவனக் குறைவான அல்லது சிந்தனையில்லாத, பரிதாபத்துக்குரிய ஈ இந்த வலையிலே அகப்பட்டுக் கொலையுண்டு போகிறது. அருவருப்பான அந்தக் கொடூரப் பூச்சி கண்ணாடி போன்ற உருண்டைக் கண்களுடையது. தன்னிடம் அகப்பட்டுக் கொள்ளும் ஈயைக் கெட்டியாய் பற்றிக் கொண்டு அழுத்தி நெரிப்பதற்கு வசதியாய் கோணமாய் மடங்கிக் குச்சி போலமைந்த நீண்ட முன்கரங்களைக் கொண்டது. அந்தக் கொலைகாரப் பூச்சிதான் சிலந்தி.

அதோ அந்த மூலையில், இரை எப்பொழுது தன் பிடியில் வந்து சிக்குமென்று ஆடாமல் அசையாமல் உணர்ச்சியற்றுக் காத்திருக்கிறது. அல்லது மெல்லிய ஈயைச் சிக்க வைத்துத் தப்ப முடியாதபடிக் கட்டுண்டு போகச் செய்யும் தனது கொலைகார இழைகளை பேய்த்தனமாய் நெய்து கொண்டிருக்கிறது! வெறுக்கத்தக்க கொடும் பிறவியான அது அளவிலா முயற்சியெடுத்து வேலை செய்கிறது. தன்னிடம் வந்து சிக்கும் இரை தப்புவதற்குச் சிறிதும் வழியின்றி கடைசி இழை வரை யாவற்றையும் செவ்வனே அமைத்துத் தனது வலையைக் குற்றம் குறையற்றதாய் நெய்கிறது. முதலில் ஓர் இமையைப் பின்னியமைக்கிறது. பிறகு இரண்டாவது, மூன்றாவது – இப்படி மேலும் மேலும் அமைத்துச் செல்கிறது. சிக்கும் இரை சாகுமுன் எவ்வளவு தான் துடியாய்த் துடித்தாலுங்கூட வலை பிய்ந்து போகாமல், அதிரவுங்கூட இல்லாமல் கெட்டியாய் இருக்கும் பொருட்டு, இழைகளைக் குறுக்கில் இழுத்துச் சுற்றுகிறது, மறுமுறையும் இழுத்துக் கெட்டியாய்ச் சுற்றுகிறது.

முடிவில் வலை தயாராகிவிடுகிறது, கண்ணி வைக்கப்பட்டு விட்டது, இனி தப்ப வழி ஏதுமில்லை – சிலந்தி இப்பொழுது அதன் உறைவிடத்தில் பதுங்கிக் கொள்கிறது. சூதறியாத ஈ பசியால் உந்தப்பட்டு உணவு தேடிக் கொண்டு எப்பொழுது வருமென்று சிலந்தி காத்திருக்கிறது.

ஈ வந்து சேர சிலந்தி அதிக நேரம் காத்திருக்க நேர்வதில்லை. பாவம், அப்படியும் இப்படியுமாய்ப் பார்த்தவாறு ஈ ஓடி வந்து விரியப் பறந்திருக்கும் இழைகளை அடைந்து துணுக்குற்று நடுங்குகிறது. சிக்குண்டுத் துடிக்கிறது, பெரு முயற்சி செய்கிறது – அவ்வளவுதான், இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

வில்ஹெல்ம் லீஃப்னெஹ்ட்

ஈ அகப்பட்டுக் கொண்டுவிட்டதைக் கண்டதும் சிலந்தி தனது பதுங்கிடத்தை விட்டு மெள்ள முன்னே வருகிறது. பசி வெறி கொண்ட கண்களுடன் குச்சிக் கரங்களை அசைத்துக் கொண்டு தனது இரையை நோக்கி முன்னேறுகிறது. அது அவசரப்படத் தேவையில்லை, தன் வலையில் அகப்பட்டுக் கொள்ளும் அபாக்கியசாலி தப்ப முடியாது என்பது அந்தப் பயங்கர பைசாசத்துக்குத் தெரியும். அது மேலும் மேலும் நெருங்கிச் செல்கிறது, துருத்திக் கொண்டிருக்கும் மங்கலான கண்களால் தனது இரையை ஏறிட்டுப் பார்த்து எடை போடுகிறது, அதைத் தவிக்கச் செய்து திணறடிக்கிறது. ஈ தன்னை நெருங்கி வரும் பயங்கர அபாயத்தைக் கண்டு நடு நடுங்குகிறது, பிசுபிசுப்பான அந்த இழைகளிலிருந்து பிய்த்துக் கொள்ள முயலுகிறது, தப்பிப்பதற்கு அரும்பாடுபடுகிறது. இந்த மூர்க்கமான இறுதி முயற்சிகளில் அது தனது பலத்தை இழந்து விடுகிறது.

ஆனால் அதன் முயற்சிகள் பயனளிக்கவில்லை, அதன் பிரயத்தனங்கள் வீணாகின்றன! வலையில் அது மேலும் மேலும் கடுமையாய்ச் சிக்கிக் கொள்கிறது. இதற்கிடையில் சிலந்தி அதை மேலும் மேலும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. சிலந்திக் கூட்டின் வலைப் பின்னல்கள் மெல்லியனவாய் இருப்பினும் தப்ப வழியின்றி ஈயை இறுகப் பற்றிக் கொண்டுவிட்டன. இவற்றிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஈ மேற்கொள்ளும் முயற்சி ஒவ்வொன்றும் மேலும் அதிகமான இழைகளில் அதை மாட்ட வைத்து. மேலும் அதிகமான வலைப் பின்னல்களில் சிக்கச் செய்கிறது. முடிவில், எதிர்க்கும் ஆற்றல் அனைத்தையும் இழந்து ஓய்ந்து போய் மூர்ச்சித்துவிடும் ஈ, அதன் பகைவனின், வெற்றியாளனின் அந்தப் பயங்கரச் சிலந்தியின் காலடியில் கிடக்கிறது!

பிறகு அந்தப் படுபயங்கரப் பிராணி முடிகள் மண்டிய தனது கொடுங்கரங்களை நீட்டி ஈயைப் பிடித்துத் தனது கொலைகார அரவணைப்பிலே கெட்டியாய் அழுத்துகிறது. அடுத்து அது பலமிழந்து போய் நடுங்கும் ஈயின் உடலைக் கடிக்கிறது. ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் என்று தனது வெறிக்கும் பசிக்கும் ஏற்ப அத்தனை தரம் விழுந்து பிடுங்குகிறது. அதன் இரத்த வெறி தற்போதைக்கு அடங்கியதும் பாதி உயிர் போன நிலையில் அந்த ஈயை விட்டுவிட்டு விலகுகிறது. பிறகு திரும்பி வந்து மீண்டும் உறிஞ்சுகிறது. இப்படித் திரும்பித் திரும்பி வந்து ஈயின் உடலிலுள்ள இரத்தம் அனைத்தையும், சத்து அனைத்தையும் உறிஞ்சி இழுத்து விழுங்குகிறது. பாவம் அந்த ஈ, எளிதில் அது உயிரை இழப்பதில்லை, குத்துயிரும் கொலையுயிருமாய் நெடு நேரம் திணறுகிறது.

இரத்த வெறி கொண்ட அந்தப் பைசாசம் தனது இரையிடம் இம்மியளவு உயிர்த் துடிப்பு எஞ்சியிருக்கும் வரை அதை விடுவதில்லை. ஈயின் உயிரை உள்ளுக்கு இழுக்கிறது, அதன் பலத்தை உறிஞ்சியிழுக்கிறது, இரத்தத்தைக் குடிக்கிறது. ஈயிடமிருந்து பருக எதுவுமே இல்லாமற் போன பிறகு தான் அதை விடுகிறது.

முற்றும் உறிஞ்சப்பட்டு சாகடிக்கப்பட்ட ஈ மெல்லிறகையும் விட இலேசாகியபின் வலையிலிருந்து தள்ளிவிடப்படுகிறது. சிறிதளவு காற்று வீசியதுமே காற்றோடு காற்றாய் அடித்துச் செல்லப்படுகிறது. யாவும் முடிவுற்றுவிட்டன.

வயிற்றை நிரப்பிக் கொண்டு திருப்தியோடு சிலந்தி மட்டும் தனது உறைவிடத்துக்குத் திரும்புகிறது. தன்னையும் தனது உலகையும் நினைத்து மன நிறைவு கொள்கிறது. தரமானவர்கள் உலகில் இனியும் நல்லபடியாகவே காலங்கழிக்க முடிகிறதென அகமகிழ்ந்து கொள்கிறது….

***

நகரத்தையும் கிராமத்தையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர்களே, உறிஞ்சியிழுக்கப்பட்டுக் கொல்லப்படும் இந்த ஈ, விழுங்கப்படும் இந்த ஈ நீங்களேதான்! ஏனையோர் வாழ்வது உங்களுடைய இரத்தத்தைக் குடித்துத்தான்! ஒடுக்கப்பட்ட மக்களே, அறிவுத் துறையினரே, ஆலைத் தொழிலாளர்களே, உங்கள் உரிமைகளுக்காக எதிர்த்து நிற்கத் துணியாதோரான அஞ்சி நடுங்கும் இளம் மகளிர்களே, பலமற்றோராய் இருந்து மிதிபடும் பெண்டிர்களே, யுத்த வேந்தர்களுக்குப் பலியாகும் அப்பாவிகளே! சுருங்கக் கூறின் ஏழைகளும் சுரண்டப்படுவோருமானோரே, உங்களுடைய இரத்த நாளங்களிலிருந்து உறிஞ்ச ஏதும் இல்லாமற் போனதும் உதறியெறியப்படுவோரே!

எல்லாச் செல்வங்களின் உற்பத்தியாளர்களே, தேசத்தின் இதயமும் மூளையும் ஜீவ சக்தியுமானோரே, அடி பணிந்து ஓசையின்றி எங்கோ மூலையில் அவலமான முறையில் மடியும் உரிமையன்றி வேறு உரிமை ஏதும் இல்லாதவர்களே! உங்களுடைய இரத்தத்தை, வியர்வையை, உழைப்பை, உங்களுடைய சிந்தனைகளை, உங்களுடைய உயிரைக் கொடுத்து உங்கள் எஜமானர்களாகவும் ஒடுக்குமுறையாளர்களாகவும் இருப்போரை – அருவருக்கத்தக்க சிலந்திகளை – பெரியவர்களாக்குகிறீர்கள், வலியவராக்குகிறீர்கள்.

எஜமானன், பணமூட்டை, சுரண்டலாளன், ஊகவாணிபன், முதலாளி, ஆசை காட்டி மோசம் செய்கிறவன், சமயச்சபை மேலவர்கள், எல்லா வகையான புல்லுருவிகள், நம்மை வருத்தும் கொடுங்கோலன், படுமோசமான ஒடுக்குமுறைச் சட்டங்களை இயற்றுகிறவன், நம்மை அடிமைப்படுத்தும் மூர்க்கன் ஆகிய இவர்கள் தான் சிலந்தி. மக்கள் செலவில் உண்டு வாழும் ஒவ்வொருவனும், நம்மைக் காலால் மிதித்துத் துவைக்கும், நமது துன்ப துயரங்களையும் பயனற்றுப் போகும் நமது முயற்சிகளையும் எள்ளி நகையாடும் ஒவ்வொருவனும்தான் இந்தச் சிலந்தி.

ஏழைத் தொழிலாளிதான் ஈ. வேலை வாங்கும் எஜமானன் பிறப்பிக்க விரும்பும் கொடிய சட்டங்களுக்கு எல்லாம் இந்த ஏழைத் தொழிலாளி அடங்கி நடக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் வாழ வழியற்ற நிலையிலுள்ள அபாக்கியவானான இந்தத் தொழிலாளி தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஜீவனோபாயம் தேடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரிய ஆலை முதலாளிதான் சிலந்தி.

தனது தொழிலாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் நாள் ஒன்றுக்கு 6-லிருந்து 8 மார்க்(1) வீதம் சம்பாதிக்கும் இந்த முதலாளி, அதே போது 12-லிருந்து 14 மணி நேர வேலைக்கு இத்தொழிலாளர்களுக்கு மனம் துணிந்து, இல்லை அருள் கூர்ந்து 2-லிருந்து 3 மார்க் வரையிலான அரைப் பட்டினிக் கூலி தருகிறான்.

சுரங்கத்தின் நச்சுக் காற்றில் தன் உயிரைப் பலி கொடுக்கிறானே, தான் அனுபவிக்கப் போகாத செல்வங்களைத் தரைக்கு அடியிலிருந்து வெட்டியெடுக்கிறானே, அந்தச் சுரங்கத் தொழிலாளிதான் ஈ. திருவாளர் பங்கு முதலாளிதான் சிலந்தி. இந்த ஆளின் பங்குகள் மதிப்பில் இரட்டிப்பாகவும் மும்மடங்காகவும் உயர்ந்து செல்கின்றன.

ஆயினும் இவர் திருப்தியடைவதே இல்லை, மேலும் மேலும் உயர்ந்த லாப விகிதங்கள் வேண்டுமென்கிறார், தொழிலாளர்களுடைய உழைப்பின் பயன்களை அவர்களிடமிருந்து சூறையாடிக் கொண்டு விடுகிறார். தொழிலாளர்கள் சொற்ப அளவு கூலி உயர்வு கேட்கத் துணிவார்களாயின் ராணுவத்தை அழைத்துக் கலகக்காரர்களுக்குத் துப்பாக்கிக் குண்டுகளின் சுவையைத் தெரியப்படுத்துகிறார்.

சின்னஞ் சிறு வயதில் அறியாப் பருவத்தில் ஆலையிலும் பட்டறையிலும் பிறகு வீட்டிலும் மாடாய் வேலை செய்து குடும்பச் செலவுக்கு, வரவை இணையாக்க உதவ வேண்டியிருக்கும் சிறு பிள்ளை தான் ஈ. போதாமையால் தம் குழந்தைகளைக் காவு கொடுக்கும்படி பலவந்தம் செய்யப்படும் ஏழைப் பெற்றோர்களல்ல சிலந்தி; இயற்கை உணர்ச்சிகளின் இந்த வக்கரிப்புகளை, தனது சொந்தக் குடும்பம் இப்படி நாசமாவதை மாறாத மூர்க்க விதியாக்கும் இன்றைய அடாத நிலைமைகளே தான் சிலந்தி.

மக்களுடைய மகளாய்ப் பிறந்த மதிப்புக்குரிய மங்கை நேர்மையாய் வாழ வழி தேடுகிறாள், ஆனால் ஆலை முதலாளி அல்லது டைரக்டரின் காமவெறிக்குப் பணியாவிடில் வேலை பெற முடியாதவளாய்த் திண்டாடுகிறாள். அவளைக் கெடுக்கும் அந்த ஆள் பிற்பாடு – பல சந்தர்ப்பங்களில் பிள்ளையும் பிறக்கப் போகும் நிலையில் – “மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக” ஈவிரக்கமின்றி மெத்தனமாய் அவளை நடுத்தெருவில் விடவே நிற்கதியாகிறாள் – அவள் தான் ஈ.

தளுக்கு இளைஞன், “உயர் குடும்பத்தில்” பிறந்த வீணன், கூத்தடித்துத் திரிந்து அறியாப் பெண்களைச் சீரழித்துச் சாக்கடையிலே தள்ளுகிறானே, இப்படித் தன்னால் சீரழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தன் மதிப்பும் உயர்வதாய்க் கருதுகிறானே அவன் தான் சிலந்தி.

நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கும் உழவர்களே, செல்வந்தர்களான நிலப்பிரபுக்களுக்காக நிலத்தை உழுது நீங்கள் அறுத்தெடுத்துக் கொள்ளப் போகாத பயிரை விதைத்தும், நீங்கள் சுவைக்கப் போகாத கனிகளை வளர்த்தும் வரும் நீங்கள் தான் ஈ. தான் சொகுசாய்ச் சுகபோக ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்காகத் தனது ஏழைச் சாகுபடியாளர்களையும் பண்ணையடிமைகளையும் கூலியாட்களையும் கணப்பொழுதும் ஓய்வின்றி வேலை வாங்கும் அந்த நிலப்பிரபுதான், ஆண்டுக்கு ஆண்டு வாரத்தை(2) உயர்த்தியும் நேர்மையான உழைப்புக்குரிய கூலியைக் குறைத்தும் செல்லும் அந்த நிலப்பிரபுதான் சிலந்தி.

ஏழையும் எளியோருமான நாம் எல்லோரும் தான் ஈ. நீண்ட நெடுங்காலமாய் வழிபாட்டு மேடையின் படிகளில் நின்று நடுங்கியும், சமயக் குருமார்களது சாபச் சொற்களுக்குத் தலைவணங்கியும், சமயச் சபையின் கீர்த்திக்காகவும் உல்லாச விளையாட்டுக்காகவும் போராடியும் ஒருவரையொருவர் அடிமை செய்தும் வந்திருக்கும் நாம் தான், அவர்களுடைய சமயப் போதனையின் நலிவுறச் செய்யும் செல்வாக்குக்கு உட்பட்டு ஆன்மீக முடவர்களாகிவிட்டோம். ஆதலால், நமது முதுகு ஓடிய வளைந்தும் மண்டியிட்டும் வந்துள்ள நாம் தான், நமது ஒடுக்குமுறையாளர்களை அவர்களது அநீதியின் பலன்களை அனுபவிக்கும்படி விட்டு வந்துள்ள நாம் தான் ஈ.

கறுப்பு அங்கி அணிந்து நயவஞ்சகமும் பேராசையும் நிறைந்த பார்வை கொண்டுள்ள அந்த குருமார் தான், இழிநிலையிலே இருத்தும் தனது போதனையின் மூலம் தனது பக்த கோடிகளின் எளிய உள்ளங்களை மயக்கங் கொள்ளச் செய்து பணிந்து ஒடுங்கும் அடிமைப் புத்தியை வளர்த்தும், இதன் மூலம் மக்களது ஆன்மாவை மாசுபடுத்தியும், போலந்தின் விவகாரத்தில்(3) நடைபெற்றது போல் தேசங்களையே பாழ்பட வைத்தும் செல்லும் அந்த சமயக் குருமார் தான் சிலந்தி.

சுருங்கக் கூறினால் ஒடுக்கப்பட்டோரும் அடிமைப்பட்டோரும் சுரண்டப்படுவோரும் தாம் ஈ. கேடுகெட்ட ஊக வாணிபக்காரர் என்றோ, சட்ட முறையற்ற கொடுங்கோலர் என்றோ எப்படி வேண்டுமாயினும் அழைக்கப்படத் தக்கவராயுள்ள அவரேதான் சிலந்தி.

சிலந்தி முன்னொரு காலத்தில் அரண்கள் செய்யப்பட்ட பெரிய கோட்டைகளிலும் நிலப்பிரபுத்துவப் பண்ணைகளிலும் தனது வலையைப் பின்னி வந்தது. இன்று அது பெரிய தொழில் மையங்களில், இக்காலத்துப் புண்ணியவான்களது செல்வமனைகளில் தன்னை இருத்திக் கொள்ள முனைகிறது. பெரும்பாலும் ஆலை நகரங்களில் தான் அதை அதிகமாய்க் காண்கிறோம்.

ஆயினும் கிராமப்புறங்களிலும் சிறு ஊர்களிலும் அது வலை பின்னிக் கொண்டுதான் இருக்கிறது. எங்கே சுரண்டல் தாண்டவமாடுகிறதோ, எங்கே தொழிலாளியும் சொத்தில்லாத பாட்டாளியும் சிறு கைவினைஞரும் நாட்கூலியாரும் கடன் சுமை தாங்காமல் வருந்தும் சிறுவிவசாயியும் ஊகவாணிபர்களது வரைமுறையற்ற லாப வெறிக்கு ஈவிரக்கமின்றி உட்படுத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் அது இருக்கக் காணலாம்.

அது எங்கே இருப்பினும், நகரமாயினும் கிராமமாயினும், அங்கே பேதைகளான ஈக்கள் பகைவரது வலைகளில் சிக்கிக் கொண்டு தப்ப முடியாமல் தவிப்பதைக் காணலாம், துடிதுடித்துப் பலமிழந்து ஓய்ந்து உலர்ந்து போய் மடிவதைக் காணலாம்.

பல மில்லாத மெல்லிய ஈக்கும் இரத்த வெறி கொண்ட கொடூரச் சிலந்திக்கும் இடையே எத்தனையோ நூறு ஆண்டுகளாய் நடைபெறும் இந்தப் போரில் புரியப்பட்டுள்ள சொல்லொணாத படுபயங்கரங்களுக்கு அளவே இல்லை! இந்தக் கதை கொடுமையிலும் கொடுமையானது. அதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. நடந்தது நடந்து விட்டது, கடந்த காலம் போகட்டும், நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிப் பேசுவோம்.

சிலந்திக்கும் ஈக்கும் இடையே நடைபெறும் இன்றைய போராட்டத்தை நெருங்கிச் சென்று உற்று நோக்குவோம். நிலைமையை உள்ளது உள்ளபடி நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும். ஈக்களாகிய நாம் நமது பகைவர்கள் நமக்காக மீண்டும் எப்படிப்பட்ட கண்ணிகளை வைத்தமைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் கண்டு கொண்டாக வேண்டும். யாவற்றுக்கும் மேலாய் நாம் ஒன்றுபட்டாக வேண்டும்.

நாம் தனித்து நிற்கும் வரை நம்மைக் கட்டியிருத்தி வைக்கும் வலைப் பின்னல்களைப் பிய்த்தெறியப் பலமற்றோராகவே இருப்போம். நமக்கு விலங்குகளிடும் சங்கிலிகளை உடைத்தெறிவோம், நமது பகைவர்களை அவர்களது பதுங்கு இடங்களிலிருந்து விரட்டியடிப்போம், எங்கும் அறிவின் பிரகாச ஒளியைப் பரப்புவோம், பேய்த் தனமான இந்தச் சிலந்தி இனி எந்நாளும் இருண்ட மூலையில் இருந்து தனது கொலைகாரக் கைங்கரியத்தைச் செய்ய வழியில்லாதபடி செய்வோம்!

ஈக்களே, நீங்கள் விரும்பினால், மெய்யாகவே விரும்பினால், யாராலும் உங்களை வெல்ல முடியாதபடி நீங்கள் பெரும் பலம் படைத்தோராகிவிட முடியும்! மெய் தான், இன்றும் சிலந்திகள் பலமுடையதாகவே இருக்கின்றன, ஆனால் எண்ணிக்கையில் அவை மிகமிகச் சொற்பம். ஈக்களான நீங்கள் சின்னஞ் சிறியவர்களாய் இருப்பினும், செல்வாக்கு இல்லாதிருப்பினும், எண்ணிக்கையில் அதிகமாய் இருப்பவர்கள்; வாழ்வே நீங்கள் தான், உலகமே நீங்கள் தான் – மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாமே நீங்கள்தான்!

நீங்கள் ஒன்றுபட்டால், உங்களுடைய இறக்கைகளின் ஒரேயொரு வீச்சாலேயே எல்லா இழைகளையும் அறுத்தெறிந்துவிடலாம், இன்று உங்களைக் கெட்டியாய்க் கட்டி, அடக்கி வைத்திருக்கும் சிலந்தி வலைகளை எல்லாம், உங்களைத் திணற வைத்துத் துடிக்கச் செய்து பட்டினியால் சாகடிக்கும் இந்த வலைகளை எல்லாம் அடியோடு துடைத்தெறிந்துவிடலாம், வறுமையையும் அடிமை வாழ்வையும் நீங்கள் ஒழித்துக் கட்டிவிடலாம். மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாம் செய்யலாம்!

ஆகவே விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!

 அடிக்குறிப்புகள்:



  1. மார்க் – ஜெர்மன் மார்க் – ஜெர்மன் நாணய முறை.
  2. வாரம் – நிலவாரம் – நிலவுடைமையாளர்கள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் கொடுக்க வேண்டிய நிலவாடகை, நிலத்துக்கான குத்தகை.
  3. ஆஸ்திரிய மற்றும் பிரஷ்யவுக்கு எதிரான போலந்தின் தேசிய விடுதலை எழுச்சியில் சமயகுருமார்கள் அடிமைச் சிந்தனையை பரப்பி தேசத்தின் ஆன்மாவை சீரழித்தனர்.

வில்ஹெல்ம் லீப்னெஹ்ட்

சனி 30 2026

இதுவும் மதுரைக்கு பெருமைதான்..



மதுரை 2500 ஆண்டுகளுக்கு மேலான சிறப்பு மிக்கது.  “யாதும்ஊரே யாவரும் கேளீர் என்ற இந்த மண்ணில்தான் எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றி கொன்றான். மதுரையை தலைநகரமாக கொண்டு ஆண்ட கூன்பாண்டியன் என்ற மாறவர்மன் என்பவன்.

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில்தானதிருஞானசம்பந்தர் கைங்கர்யத்தால் எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். திருநாவுக்கரசர் கைங்கரியத்தால் ஆயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்.

சமணர்கள் படுகொலைகளை மறுக்கிறவர்கள் திருஞானசம்ந்தரை திருநாவுக்கரசரை, சேக்கிழாரை, பரஞ்சோதியாரை பொய்யர்கள்  என ஒப்புக் கொள்ள வேண்டும்! அவர்கள் ஒப்புக் கொண்டால் தேவாரமும், பெரிய புராணமும் திருவிளையாடல் புராணமும் பொய்யாகி விடும்.

திருஞானசம்பந்திரனின் சூழ்ச்சியால் சமணர்கள் கழுவேற்றப்பட்டதை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் திருநாவுக்கரசால் சமணர்கள் படுகொலையானது பற்றி யாரும் வாயே திறப்பதில்லை.

தூங்கா நகரமல்ல..தூக்கத்தை கெடுக்கும் நகரமும்கூட 


இப்பேற்ற பட்ட சிறப்பும் பெருமையும் கொண்டதுதான்.. மதுரை...  

தங்க ஊசி என்றால் கண்களை குத்திக் கொள்ளவா முடியும்!!!!!!!!!!







வியாழன் 28 2026

வள்ளுவர் வாக்கு பலிக்கட்டும்..

 





உழைத்து வாழ 

வேண்டும் பிறரிடம்

கையேந்தக்கூடாது

அப்படி கையேந்திதான்

வாழ முடியும்

என்ற நிலையில்

 உலகை படைத்தவன்

எவனோ அவன்

அழிந்து போகட்டும்

                                          -------- வள்ளுவர்.

செவ்வாய் 19 2026

ஒரு யோக்கியனின் நிலை...

 




வாய்ப்பு கிடைக்காதவர்கள்

 எல்லாம் யோக்கியர்கள் தான்

என்றார் வந்தவர்


என்னைத்தான் சுட்டுகிறார்

என நிணைத்து

அவருக்கு பதிலுரைத்தேன்

இல்லையே எனக்கும் 

பல வாய்ப்புகள்

வந்தது  வந்த

அந்த வாய்ப்புகளை

பயன் படுத்தாமல்

நான் யோக்கினாகவே

இருக்கிறேன். என்றேன்


சந்தேகம் கொண்டு

அப்படி இருந்திருக்க

முடியாதே பொய்

உரைக்கிறீர் என்றார்.


நம்பவில்லை என்றால்

இந்திய உளவு அமைப்பை

கொண்டு என்னை உளவு

அறிந்து என் யோக்கிய

தண்ட வாளத்தை வண்டவாள 

மாக்கலாம் என்றபோது


உங்களுக்கு கோளாறு

அதனால் யோக்கியனாய்

இருக்கிறாய் என்றார்.


என் தெரு மாக்கள்

பொட்டை.ஒம்போது

என சொல்வது

போல் இருக்கிறது.

எனக்கு விபரம்

தெரிந்த நாளிலிருந்து

டீ குடிப்பதில்லை, 

புகை பிடிப்பதில்லை

சாராயம் குடிப்பதில்லை

அதே போல் வாய்ப்பு

கிடைத்தும்  பயன்படுத்தாமல்

யோக்கியவனாகவே இருந்து

மடிகிறேன் யோக்கினாக

இருப்பதற்கு எந்த

பிரிதிபலனும்  வேண்டியதில்லை


வாய் முடி

மௌனமாக இருந்து

நூற்றில் ஒருவர்

இல்லை ஆயிரத்தில்

பெரும் ஆச்சரியத்துடன்

அங்கீகரித்தார்.

  


வெள்ளி 24 2026

ஹிட்லரை மிஞ்சிய பெரும் பொய்யன் சீமான்

 தமிழினத்துரோகி_சீமான்

இப்பதிவின் இறுதியில் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. 

தொடர்ந்து படியுங்கள்!

அரசல், புரசலாக உங்கள் காதில் விழுந்ததைப் பற்றி இப்பதிவின் மூலம் ஆழமாக அறிந்து கொள்க.---- 

சென்னையில் (தரமணியில்) உலகத் தரத்திலான ஒரு பள்ளி உள்ளது.

அது மழலையர் வகுப்புக்கு முந்தைய நிலை தொடங்கி 12-ம் வகுப்பு வரையிலான கல்வியை அளிக்கிறது.

இது சிபிஎஸ்இ போன்றவை கூட எட்டமுடியாத உலகத் தரம் வாய்ந்த ஒரு கல்விக் கழகத்தின் பாடத்திட்டத்தின் படி இயங்கி வரும் பள்ளியாகும்.

அந்தக் கல்விக் கழகத்தின் பெயர் இன்டர்நேஷனல் பக்கலோரியட் (International Baccalaureate—IB) எனப்படும்.

அதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது.

இந்தக்  கழகப் பாடத்திட்டத்தின் படி நடத்தப் படும் பள்ளிகள் உலகில் 160க்கும் கூடுதலான நாடுகளில் உள்ளன.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவை செல்வாக்குடன் உள்ளன.

ஏஐ.தகவல்--- “As of March 2026, the International Baccalaureate (IB) programme is offered in over 6,100 schools across more than

160 countries.

* ....... Top Locations: The United States holds the highest number of IB students and schools. Other top countries include Singapore, Peru, Canada, and China.

சென்னையில் உள்ள இத்தகைய பள்ளி அமெரிக்க அரசும் இந்திய அரசும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி (இந்திய பாடத்திட்டத்தால் கட்டுப்படுத்தப் படாமல்) சுதந்திரமாக அமெரிக்க பாணிக் கல்வியை அளித்து வருகிறது.

The American International School Chennai (AISC) was established in 1995 through a formal bilateral agreement between the Governments of the United States and India. AISC operates as a non-profit, U.S.-style school............ 

அத்துடன் அமெரிக்க அரசின் தூதர் அல்லது அவரது பிரதிநிதி இந்தப் பள்ளியின் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். 

The U.S. Ambassador to India or a designated representative serves on the AISC Board of Directors.

இப்பள்ளி குறித்த தகவல்களை அமெரிக்க அரசின் வலைத்தளத்தில் காணலாம்----

Chennai, India: American International School Chennai: 2023-2024 Fact Sheet

OVERSEAS SCHOOLS FACT SHEET

OFFICE OF OVERSEAS SCHOOLS

OCTOBER 30, 2023

இந்தப் பள்ளியில் சேரும் மாணாக்கர் 

மழலையர் வகுப்பிற்கும் முந்தைய நிலையிலேயே சேர்க்கைக் கட்டணமாக செலுத்தவேண்டிய தொகை 4000 டாலர்!!

அதாவது--- 3,70,000 (மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரூபாய்.)

பள்ளி வளர்ச்சிக் கட்டணமாக செலுத்த வேண்டிய தொகை 12,000 டாலர்.

அதாவது, 11,08,446 (பதினோரு லட்சத்து எட்டாயிரத்து நானூறு) ரூபாய்!!!

மேற்கண்ட இரண்டு கட்டணங்களும் சேர்க்கையின் போது மட்டுமே செலுத்தப் பட வேண்டும். 

ஆனால் அக்கட்டணங்கள் இந்திய ரூபாய்களாக இருக்கக் கூடாது.

மாறாக அமெரிக்க டாலர்களில் மட்டுமே  செலுத்தப்பட வேண்டும்.

“The school charges a registration fee of US $4,000, a development fee of US $12,000 (both one-time and non-refundable), and an application fee of US $400. All fees, except for the application fees, are payable in U.S. dollars.”

அடுத்ததாக---

ஒரே ஓர் ஆண்டுக்கான கட்டண விவரம்—***மழலையர் வகுப்பிற்கு முந்தைய (இரண்டரை வயதேயான) பிள்ளைகளுக்கு--- 14,630 டாலர்.

*(சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபாய்)

அடுத்து, 

கே.ஜி. வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்---

28, 730 டாலர். (26 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்)

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரைக்கான ஆண்டுக் கட்டணம்---

29,415 டாலர். (27 லட்சத்துப் பதினாறாயிரம் ரூபாய்)

அடுத்து—

ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்---

33,045 டாலர். (30 லட்சத்து 51ஆயிரம் ரூபாய்)

மேலே குறிப்பிட்ட அமெரிக்க அரசின் தகவல் தளத்தில் இது பற்றிய தகவல் உள்ளது---  “Finances: In the 2023-2024 school year, annual tuition rates are as follows: EY: US $14,630; KG-grade 5: US $28,730; grades 6-8: US $29,415; and grades 9-12: US $33,045. “

2023-23ம் ஆண்டுக் கணக்கின்படி இந்தப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை 665 ஆகும்.

இவர்களில் அமெரிக்க நாட்டுக் குடிகள் 94 பேர்.

இந்தியர்கள் 57 பேர்.

பிற நாட்டினர் 514 பேர்.

At the beginning of the 2023-2024 school year, enrollment was 665.............. Of the total, 94 are U.S. citizens, 57 are host-country nationals, and 514 are third-country nationals.

            -------------- 

இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே அளிக்கப் படுகிறது.

மொழிப்பாடம் என்ற முறையில் ஆங்கிலத்தோடு கூடுதலாக பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் ஆகிய இரண்டு மொழிகளும் மட்டுமே கற்பிக்கப் படுகின்றன.

தமிழ், இந்தி உள்ளிட்ட வேறு மொழிகள் எவற்றிற்கும் அங்கே அறவே இடமில்லை.

இந்தப் பள்ளியில் பயிலும் 57 இந்திய மாணவர்களில் இரண்டு மாணவர்கள் யார் தெரியுமா?

*** செந்தமிழனின் சீமானின் மகனும், அவரது மைத்துனி மகனும்!!!!

நண்பர்களே,

சீமானின் மகனும் வளர்ப்பு மகனும் ஆங்கில வழிக் கல்வி பயின்று வருகிறார்கள் என்று மட்டும் தான் இன்றுவரை (அதுவும் சிலரால் மட்டும்) விவாதிக்கப் பட்டும், விமர்சிக்கப் பட்டும் வந்துள்ளது.

ஆனால் அவ்விரு பிள்ளைகளும்  எத்தகைய உலகத் தரத்திலான அமெரிக்கப் பள்ளியில், தமிழோசை என்பது அறவே கேட்காத ஒரு மோசமான சூழலில் கல்வி பெற்று வருகிறார்கள் என்பதும், அதற்காக சீமான்  ஆண்டுதோறும் எத்தனை லட்சங்களை வாரியிறைத்து வருகிறார் என்பதும் பேசுபொருளாக மாறவேயில்லை!!!

இது மிகவும் அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

ஆனால் இந்த உலக மகா அயோக்கியன் தனது கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையில் கூறியுள்ளதைப் 

பாருங்கள்----

தலைப்பு--கல்விக் கொள்கை

“தொடக்கக் கல்வி முதல் உயர் படிப்பான மருத்துவம், சட்டம், பொறியியல் வரையிலுமான அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்றுத் தரப்படும்.

தமிழ்வழிக் கல்வியே சட்டமாக்கப் படும்.”

தமிழ் பயிற்றுமொழி.

ஆங்கிலம் கட்டாயப் பாட மொழி.

இந்தி உட்பட உலக மொழிகள் அனைத்தும் விருப்ப மொழி.

ஒருமொழிக் கொள்கையே பின்பற்றப் படும்.”

முன்னதாக இந்த அறிக்கை கூறுகிறது---

“ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே. அதுவே அறிவு அல்ல.”

(அதுவே அறிவு என்று யார் சொன்னது? அதன் மூலம் அறிவு பெறுவதே சாலச் சிறந்தது என்றல்லவா தந்தை பெரியார் போதித்தார்?)

ஆக, தமிழக வரலாற்றில் இதுவரை தோன்றியிராத ஹிட்லரிசப் பெரும் பொய்யன் சீமான் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

இவ்வளவுக்குப் பிறகும் இந்த மக்கள் விரோதி சீமான் தனது மகனும், வளர்ப்பு மகனும் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று ஒரே ஒரு முறை கூட வாய் திறந்து சொன்னதில்லை.

கூகுள் செய்தாலோ ஏ.ஐ. மூலம் தேடினாலோ கூட இது குறித்த தகவல் ஏதும் வெளிப்படையாக அறிவிக்கப் படவேயில்லை. 

ஆனாலும்  சில குறிப்புகள் இருக்கத் தான் செய்கின்றன.  

அவற்றை மறுக்கவும் சீமான் துணியவில்லை.

“என் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். எனக்கே அவமானமாக உள்ளது,” என்று மட்டும்  கூறிவிட்டு  ஓம் தமிழன் ஓடி விடுகிறார்.

நாம் தான் அவரை விடாமல் துரத்திச் சென்றுக் கூண்டில் ஏற்றி விசாரித்து மக்கள் முன் அம்பலப் படுத்தியாக வேண்டும்.

எனவே நண்பர்களே,

சீமான் பிள்ளைகள் எத்தகைய உலகத் தரம் வாய்ந்த அமெரிக்கப் பள்ளியில் எத்தனை லட்சங்கள் கொட்டிப் படிக்க வைக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் தமிழ்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கூட அவர்கள் பயிலவில்லை என்பதைப் பற்றியும் தமிழ்மக்கள் பலரும் அறிந்திடுமாறு செய்ய நீங்கள் தான் உதவ வேண்டும்.

அதன் பொருட்டு இந்தப் பதிவை இப்போதும், இனி வரும் காலங்களிலும் அடிக்கடி பகிரவேண்டும்.

 - பேராசிரியர் மருதமுத்து

புதன் 22 2026

ஒரு பழமொழி- அதன் அர்த்தம்



ஒன்பது பிள்ளை

பெற்ற ஒருத்தி

ஒரு பிள்ளை

பெற்ற ஒருத்தியிடம்

கேட்டாளாம் பிள்ளை

 பெறுவது எப்படி

என்று.............


இது மாதிரி

பத்து தடவை

ஓட்டு போட்ட

ஒருவன் ஒரு

தடவை ஓட்டு

போட்டவனிடம் கேட்டானாம்

 ஓட்டு போடுவது

எப்படி என்று.ஃ 

ஞாயிறு 19 2026

7 அடி உயரமுள்ள உயர்ந்த மனிதர்கள்

 



உயர்ந்த மனிதர்கள்

என்பவர்கள் யார்

என்று என்னை 

கேட்டார்கள் நான்

கேட்டவர்களிடம் கேட்டேன்

உயர்ந்த மனிதர்கள்

யரென்று  அவர்கள் 

சொன்னார்கள் அதிக

செல்வமும் செல்வாக்கும்

உள்ளவர்களும், உயர்ந்த

பதவியில் இருப்பவர்களும்

ஏழைபாழைகளுக்கு உதவி

செய்பவர்களும் சமூகத்தில்

உயர்ந்த மனிதர்கள் 

 என்றார்கள் எனக்கு

 அப்படித் தெரியவில்லை

சமூகத்தில்  7 அடி

உயரமுள்ள மனிதர்கள்

தான் உயர்ந்த 

மனிதர்கள் என்று.............


வியாழன் 09 2026

சம்பந்தமே இல்லாத ஒரு கனவு...!!!




 இரண்டு நாள் தூக்கமில்லை

அதனால் மூன்றாம் நாள்

நல்ல தூக்கம் அந்த

தூக்கத்தில் சம்பந்தமே இல்லாத

ஒரு கனவு  வந்தது.


மதுரை திருப்பரங்குன்றம் பகுதி

வேட்பாளர் ராஜன் செல்லப்பா

 அவர் கடைக்கு ஒரு

பொருள் வாங்க செல்கிறேன்

பொருள் வாங்கு முன்பே

அறுபது ரூபாயை அவரிடம்

கொடுத்தேன்.நான் கேட்ட

பொருள் இல்லை என்றும

 வேறு பொருள் இருக்கிறது

விலை கூடுதல் என்கிறார்

சில்லரை இல்லாததால் ரூ 500யை

கொடுத்தேன் சிறிது நேரத்தில்

ஆளை காணவில்லை. சிறிது

நேரம் காத்திருந்த பின்

நடிகர் பரத் கடைக்கு

வருகிறார் அவரிடம் விபரைத்தை

கூறுகிறேன் பொருளை வாங்காமல்

ஏன்? பணத்தை கொடுத்தாய்

என்கிறார்.பிறகு ராஜன்

செல்லப்பாவுக்கு போன் செய்கிறார்

பிறகு அவரையும் காணவில்லை

 வெறுப்பில் எனக்கு முழிப்பு

வந்து விட்டது. தலையை

வறு டியவாறே என்னடா

இது சம்பந்தமே இல்லாமல்

இந்த ரெண்டு பேரையும்

நான் நேரில் பாரத்ததேயில்லை

திங்கள் 30 2026

மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..



அவர்கள் இப்படி

சொல்வார்கள் ..

புராணங்களை இப்போ

யாரு நம்புறாங்க..

என்று.....ஆனா


நடப்பு அப்படியா

 இல்லவே இல்லை.. 


புராணங்களில் சொல்லப்படுவதை

பண்டிகையா கொண்டாடுவாங்க

புர்ராணப்படி விரதம்

இருப்பாங்க..புர்ராணங்களில்

வரும் ஆபாச 

பொருக்கிகளை தெய்வமா

கும்பிடுவாங்க...........


அவர்கள் அப்படித்தான்

சொல்வார்கள் புர்ராணங்களை

இப்போ யார் 

நம்புறாங்க என்று


இன்னும் எத்தனை

ஏஐ தொழில் நுட்பம்

வந்தாலும் மாறாதய்யா

மாறாது மனமும்

குணமும் மாறாது


 

ஞாயிறு 29 2026

மந்திரத்தில் எரிவாயு வரவழைத்தல் .....

 

மழை வேண்டி மந்திரம்

தந்திரத்தை மந்திரமாக சொல்லி

சொர்க்கத்துக்கே மாளிகை பொருட்களை

அனுப்பும்  பார்ப்பனர்களை அழைத்து

வந்து அவர்கள் மூலம்...




மந்திரம் சொல்லி சமையல் எரிவாயுவை

வரவழைத்தால்   பற்றாக்குறை தீருமல்ல.


அவாளின் சமஸ்கிருத மந்திரத்தை

கேட்டு மாழையே வரும்போது

எரிவாயு வராத என்ன....


சீக்கீரம் மந்திரத்தை ஓத....

சொல்லுங்கப்பா...பக்தி மான்களே!!!


ஞாயிறு 15 2026

அமெரிக்காவின் அஸ்திவாரம்

 

அமெரிக்கா



உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். 


பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. 


நான் கீழே  சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச் செய்திகளும், போர்களும், பொருளாதார வீழ்ச்சிகளும் உங்களுக்கு முற்றிலும் புதிய கோணத்தில் புரியும்.


ஏனென்றால், அமெரிக்காவின் அதிகாரத்தை ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் ஒரே ஒரு நுட்பமான இயந்திரம் ஒன்று உள்ளது.


அமெரிக்க ராணுவம், அதன் பொருளாதாரம், தொழில் நுட்பங்கள், அரசியல் செல்வாக்கு என அனைத்தும் இந்த ஒரு அஸ்திவாரத்தின் மீதுதான் நிற்கின்றன.


அமெரிக்கா ஏன் இவ்வளவு சக்தி வாய்ந்தது என்று கேட்டால், பொதுவாகச் சொல்லப்படும் பதில்கள்: அதன் ராணுவ வலிமை, தொழில்நுட்பம் அல்லது பொருளாதாரத்தின் அளவு. 

இவை உண்மைதான், 

ஆனால் இவை அடிப்படை 'காரணம்' அல்ல; இவை வெறும் 'விளைவுகள்.


அமெரிக்காவின் ஒட்டுமொத்த அதிகாரமும், உலக நாடுகளின் மீதான அதன் பிடியும் எதன் மேல் நிற்கிறது தெரியுமா? அந்த அஸ்திவாரத்தின் 

பெயர்: 


பெட்ரோ டாலர் (Petrodollar). 


இதைப்புரிந்துகொள்ள நாம் 1970-களின் ஆரம்பக்காலத்திற்குச் செல்ல வேண்டும். 


அதற்கு முன், உலக நிதி அமைப்பு 'பிரெட்டன் வூட்ஸ்' (Bretton Woods) ஒப்பந்தத்தின் கீழ் இயங்கியது. அப்போது global reserve currency யாக இருந்த அமெரிக்க டாலருக்கு ஒரு உத்திரவாதம் இருந்தது: புழக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு டாலருக்கும் ஈடாக அமெரிக்க கருவூலத்தில் தங்கம் இருக்கும். 


எந்த நாடும் டாலரைக் கொடுத்துவிட்டு அதற்கு இணையான தங்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதுதான் டாலருக்கு ஒரு நம்பகத்தன்மையைக் கொடுத்தது.


1960-களில் அமெரிக்கா -  வியட்நாம் போர் ஒரு சாதாரண போர் இடம்பெற்றது… அது சாதாரணமான போர் அல்ல, அது அமெரிக்காவின் கஜானாவைக் காலி செய்த போர். 


அரசாங்கம் தன்னிடம் இருந்த தங்கத்தை விட அதிகமான டாலர்களை அச்சடித்துப் போரை நடத்தியது.


இதைப் பார்த்த பிரெஞ்சு அதிபர் சார்லஸ் டி கோல் (Charles de Gaulle) உஷாரானார். 


1965-ல் அவர் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். பிரான்சிடம் இருந்த காகித டாலர்களை அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடாகத் தங்கத்தைத் திருப்பிக் கேட்டார். 


போர்க்கப்பல்களை (French Ships) அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்திற்கு அனுப்பி, அங்கிருந்த federal reserve வங்கியிலிருந்து டன் கணக்கிலான தங்கத்தை ஏற்றிக்கொண்டு சென்றது. 


இதைப் பார்த்த மற்ற நாடுகளும் பயந்துபோய் தங்கத்தைக் கேட்கத் தொடங்கின. அமெரிக்கா தன்னிடம் இருந்த தங்கத்தை இழந்து திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 


1971-ல் அதிபர் ரிச்சர்ட் நிக்சன், "இனி டாலரைத் தங்கமாக மாற்ற முடியாது" என்று அறிவித்து 'Gold Window வை மூடினார்.


அன்று முதல் டாலர் வெறும் காகிதமானது. வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே ஓடும் ஒரு காகிதமாக மாறியது.


அப்படியென்றால், உலக நாடுகள் “நாம் ஏன் தொடர்ந்து டாலரை வைத்திருக்க வேண்டும்?”என்ற நிலைக்கு வந்தன.


டாலர் வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹென்றி கிஸிஞ்சர் (Henry Kissinger) 1974-ல் ஒரு மாஸ்டர் பிளான் போட்டார். 


அவர் சவுதி அரேபியாவிற்குச் சென்று ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்தார்: 


அந்த ஒப்பந்தத்தில் சவுதி தனது கச்சா எண்ணெயை டாலருக்கு மட்டுமே விற்க வேண்டும். வேறு எந்த நாட்டு நாணயத்தையும் ஏற்கக்கூடாது.


அதற்கு கைம்மாறாக சவுதி அரச குடும்பத்திற்குத் தேவையான ராணுவப் பாதுகாப்பு, நவீன ஆயுதங்கள் மற்றும் அரசியல் பாதுகாப்பை அமெரிக்கா வழங்கும்.


சவுதி ஒப்புக்கொண்டது, மற்ற ஒபெக் (OPEC) நாடுகளும் இதைப் பின்பற்றின.


 'பெட்ரோ டாலர்' பிறந்தது.


இந்த ஒரு முடிவின் மூலம், தங்கம் இல்லாமலேயே டாலருக்கு உலக அளவில் நிரந்தரத் தேவை உருவானது. 


எண்ணெய் வாங்க வேண்டும் என்றால் உலக நாடுகள் டாலரைத் தேடி ஓட வேண்டியிருந்தது.


எண்ணெய் இன்றி நவீன உலகம் இயங்காது. ஜப்பான், இந்தியா, ஜெர்மனி என எந்த நாடாக இருந்தாலும், அதன் தொழிற்சாலைகள் ஓட எண்ணெய் வேண்டும். 


அந்த எண்ணெயை வாங்க வேண்டுமென்றால் அவர்களிடம் டாலர் இருக்க வேண்டும். 


இது உலக அளவில் டாலருக்கான ஒரு நிரந்தரத் தேவையை உருவாக்கியது. 


மக்கள் டாலரை நேசிப்பதால் அல்ல, தங்கள் நாடு முடங்கிவிடக் கூடாது என்பதற்காக டாலரைச் சேமிக்க வேண்டிய கட்டாயம் உருவானது.


இது டாலருக்கு ஒரு 'முடிவில்லாத' தேவையை உருவாக்கியது.


இதில் இரண்டாவது கட்டம் இன்னும் சுவாரசியமானது. 


எண்ணெய் விற்று சவுதி போன்ற நாடுகள் சம்பாதிக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை அவர்கள் என்ன செய்வார்கள்? 


அவர்கள் அதை மீண்டும் அமெரிக்காவிலேயே முதலீடு செய்கிறார்கள் (Petrodollar Recycling). அமெரிக்க அரசுப் பத்திரங்கள், பங்குகள் மற்றும் நிலங்களில் அந்தப் பணம் முதலீடு செய்யப்படுகிறது.


இதனால் தான் அமெரிக்கா சம்பாதிப்பதை விட அதிகமாகச் செலவு செய்ய முடிகிறது. 


எவ்வளவு கடன் வாங்கினாலும், பெற்றோடொலரை வாங்க உலக நாடுகள் தயாராக இருக்கின்றன. அதாவது, உலகின் எண்ணெய் வர்த்தகம் மூலமாக அமெரிக்காவுக்குத் தேவையான முதலீடு உலக நாடுகளிடமிருந்தே கிடைத்துக்கொண்டே இருக்கிறது. 


இதுதான் அமெரிக்காவை ஒரு உற்பத்திப் பொருளாதாரத்திலிருந்து 'நிதிப் பொருளாதாரமாக' (Financial Economy) மாற்றியது.


டாலர் என்பது வெறும் பணம் மட்டுமல்ல, அது ஒரு பயங்கரமான ஆயுதம். 


உலக நிதி அமைப்பே டாலர் உள்கட்டமைப்பில் இருப்பதால், அமெரிக்கா நினைத்தால் எந்த ஒரு நாட்டையும் இந்த அமைப்பிலிருந்து துண்டிக்க முடியும். 


ரஷ்யா, ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியதை நாம் பார்த்தோம்.


ஆனால், இந்த அளவிற்கு மீறிய ஆயுதமாக டாலரை பாவித்து உலக நாடுகளை மிரட்டல் என்பது ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது. 


அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் நம்மை முடக்கலாம் என்று பயந்த நாடுகள், டாலருக்கு மாற்றாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளன.


இந்த 'பெட்ரோ டாலர்' அமைப்பிற்கு யாரெல்லாம் சவால் விடுகிறார்களோ, அவர்களை அமெரிக்கா ஒவ்வொன்றாகக் குறிவைத்து அழித்து வருகிறது. 

இதுதான் நீங்கள் செய்திகளில் காணும் பல போர்களின் உண்மைக் கதை. 


2000-ஆம் ஆண்டில் சதாாம் உசேன் தனது எண்ணெயை டாலருக்குப் பதில் 'யூரோ'வில் விற்கப் போவதாக அறிவித்தார். 2003-ல் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்து அவரை வீழ்த்தியது. ஈராக் எண்ணெய் மீண்டும் டாலருக்கு மாறியது. 


கடாபி ஆப்பிரிக்க நாடுகளுக்கென தங்கம் சார்ந்த தனி நாணயத்தை உருவாக்கி, எண்ணெயை அதில் விற்க முயன்றார். 2011-ல் நேட்டோ படைகள் லிபியாவைச் சிதைத்தன.


சிரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளும் டாலர் மேலாதிக்கத்திற்கு எதிராகவோ அல்லது அமெரிக்காவுக்குச் சாதகமற்ற எரிசக்திப் பாதைகளை உருவாக்கவோ முயன்றபோது சிதைக்கப்பட்டன.


வெனிசுவலா ஒரு உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு கொண்ட நாடு. இவர்கள் டாலரைத் தவிர்த்து 'பெட்ரோ' (Petro) என்ற கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்த முயன்றபோது, மிகக்கடுமையான பொருளாதாரத் தடைகளால் அந்த நாடு முடக்கப்பட்டது.


தற்போது அமெரிக்காவின் மிக முக்கியமான இலக்கு ஈரான். ஈரான் பல ஆண்டுகளாகத் தனது எண்ணெயைச் சீனா போன்ற நாடுகளுக்கு டாலர் அல்லாத நாணயங்களில் (யுவான், தங்கம்) விற்று வருகிறது.


டாலரை ஒரு 'ஆயுதமாக'ப் பயன்படுத்தி ஈரானை உலக வங்கி அமைப்பிலிருந்து அமெரிக்கா துண்டித்துள்ளது.


ஈரான் உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி நாடுகளில் ஒன்று. ஆனால், அவர்கள் டாலர் அல்லாத வேறு நாணயங்களில் எண்ணெய் விற்க முயற்சிக்கும் போதெல்லாம், அமெரிக்கா அவர்கள் மீது கடுமையான 'பொருளாதாரத் தடைகளை' (Sanctions) விதிக்கிறது.


அமெரிக்கா ஈரானை 'SWIFT' எனப்படும் சர்வதேச பணப் பரிமாற்ற அமைப்பிலிருந்து துண்டித்தது. இதன் பொருள், ஈரான் தனது எண்ணெயை விற்று பணத்தைப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.


ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்பது ஒரு காரணம் என்றாலும், அதன் ஆணிவேர் ஈரான் டாலரின் மேலாதிக்கத்தை ஏற்க மறுப்பதுதான். 


ஒரு நாடு டாலரை மீறிச் சென்றால், அந்த நாட்டை உலகப் பொருளாதாரத்திலிருந்தே அமெரிக்காவால் துண்டிக்க முடியும் என்பதற்கு ஈரானே நேரடி உதாரணம்.


சமீபத்திய 2026 மோதல்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் இந்த 'பெட்ரோ டாலர்' அதிகாரத்தைக் காப்பாற்ற நடக்கும் போராட்டங்களே தவிர, அணுசக்திப் பிரச்சனைக்காக அல்ல.


இப்போது முதல்முறையாக 50 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் நிகழ்கிறது.


சீனா தனது சொந்த நாணயமான 'யுவான்' (Yuan) மூலம் ஈரானிடமிருந்தும், இப்போது சவுதியிடமிருந்தும் எண்ணெய் வாங்கத் திட்டமிடுகிறது.


அரை நூற்றாண்டு கால அமெரிக்க விசுவாசத்தைத் தாண்டி, இப்போது சீனாவுடன் நெருங்கி வருகிறது சவுதி.


இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் டாலரைத் தவிர்த்துவிட்டு தங்கள் சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளன. 


ஈரான் இப்போது சீனாவின் உதவியுடன் இந்த டாலர் வலையை உடைக்கப் பார்க்கிறது.


பெட்ரோ டாலர் அமைப்பு உடைந்தால், உலக நாடுகள் டாலரைச் சேமித்து வைப்பதைக் குறைத்துக்கொள்ளும். 


அமெரிக்க அரசுப் பத்திரங்களை யாரும் வாங்க மாட்டார்கள். இதனால் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயரும், பங்குச் சந்தை சரியும், சாதாரண அமெரிக்கர்களின் சேமிப்பு கரையும், டொலர் மீதான நம்பிக்கை என்பது மெதுவாகக் கசிந்து, பின் ஒரே இரவில் ஆவியாகிவிடும்.


நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் ஒரு அமைப்பு, ஒரு வருடத்தில் நடந்துவிடாது, ஆனால் அது நடக்கத் தொடங்கிவிட்டது 


அதற்கான அஸ்திவாரம் இப்போது திட்டமிட்டு பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது என்பதுதான் நிதர்சனம்.


இன்று நீங்கள் செய்திகளில் பார்க்கும் உக்ரைன் போர் முதல், தைவான் பதற்றம் வரை எல்லாவற்றிற்கும் பின்னால் இருக்கும் ஒரே அடிப்படைக் கேள்வி இதுதான்:


"உலகம் எரிசக்தியை வாங்க எந்த நாணயத்தைப் பயன்படுத்தப் போகிறது?"


இந்தக் கேள்விக்கான பதிலைத் தீர்மானிப்பவர்களே 21-ஆம் நூற்றாண்டின் உலகத்தை ஆளுவார்கள். 


கடந்த 50 ஆண்டுகளாக அந்தப் பதில் அமெரிக்காவிடம் இருந்தது. 


இப்போது முதல்முறையாக அது சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.


50 ஆண்டுகால பெற்றோடொலர் ஆதிக்கம் முடிவுக்கு வரவேண்டும். 


புதிதாக ஒரு அமைதியான உலகம் ஒன்று உருவாக வேண்டும்


படித்ததில் தெரிந்தது...

தோற்றுபோனவன்....

  அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல்  கேட்டு வளர்த்தேன்..   கஷ்டமில்லாமல்  தலைமயிரை....... வயது முதி...