கனடா அமெரிக்க எல்லையில் நான்கு இந்தியர்கள் குளிரால் இறந்து போயிருக்கிறார்கள்.
மைனஸ் 35 டிகிரி குளிர். அநேகமாக சட்டவிரோத குடியேற்றத்துக்கு முயற்சி செய்தவர்களாக இருந்திருக்கக்கூடும். அமெரிக்காவுக்குள் அழைத்து செல்ல வேண்டிய வண்டி வராததால் இது நிகழ்ந்திருக்கலாம் என்று செய்தி.
ஒரு கணவர் மனைவி, பதின் வயது பிள்ளையொன்றும் கைக்குழந்தையொன்றும் இறந்திருக்கிறார்கள். அவர்களிடம் சில ஆடைகள், குழந்தைக்கான டயாப்பர் மற்றும் மருந்துகள் இருந்திருக்கிறது.
நான்கு பேர் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேற ஆகும் செலவில் இந்தியாவில் ஒரு ஜென்மத்தையே வாழ்ந்துவிடலாம். ஆனாலும் குடிகாரனை குவாட்டர் இழுப்பது போல இழுக்கிறது அமெரிக்கா.
இல்லற இன்பத்தை தொலைத்துவிட்டு லீவே எடுக்காமல் பிரஸ்மீட் கூட கொடுக்க நேரமில்லாமல் ஜீ ஒரு மாநிலத்தை பூலோக சொர்க்கமா மாத்தியிருக்காரு.
அந்த குஜராத்ல இருக்க பிடிக்காம ஒரு குடும்பம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற முயற்சி செய்து செத்துப்போயிருக்கிறது.
வேதனை அளிக்கிறது நண்பரே...
பதிலளிநீக்குஇந்திய மக்களின் அறியாமைமை நினைத்து...
நன்றி!
நீக்குகொடுமை...
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு