நடுச்சாமம் ... டொக்.....டொக்..டொக் ..கதவு தட்டும் சத்தம் தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு கேட்டது. தூக்கத்தில் மல்லாந்து கிடந்தான்
இரண்டு மூன்று தடவை கதவை தட்டிய கைகள் கோபம் கொண்டு கதவை தள்ளிய போது கதவு திறந்து கொண்டது.. தலையை போர்த்திய உருவம் உடனே வீட்டுக்குள் புகுந்து கதவை தாளிட்டது. பின் தலையை போர்த்திய துணியை எடுத்துவிட்டு ..சாக்கெட்டுக்குள் கையைவிட்டு அதுக்குள் இருந்த சிறிய செல்போனை எடுத்து லைட் அடித்து பார்த்தது.
மல்லாக்க படுத்து கிடந்தவனை நாலு எத்து எத்தியது.. எந்த சலனுமும் இல்லாததால் ஒங்கி அவன் வயிற்றில் ஒதை விட்டது. சட்டுபட்டுன்னு எழுந்தான். சுதாரித்தவன். “ என்னடி இவ்வளவு நேரம் ” என்றான்..
“ ஆமா வரச் சொல்லிபுட்டு இப்படி பொச்ச பொளந்து தூங்கினா எப்படி”
“ இவ்வளவு நேரம் முழிச்சுதான் இருந்தேன். நீ வரமாட்டே ன்னு நிணச்சு இப்பத்தாண்டி தூங்கினேன்.”
“கதவ தட்டுனேனே கேட்கலையா “..
“கதவ எங்க அடச்சேன் சும்மா சாத்திதான் வச்சேன்.
“வர்ரதுக்கு கிளம்புனா..உன் ஆத்தாகாரி வழிய மரிச்சுகிட்டு உட்காந்திருந்தா... அங்கிட்டு உன் அண்ணன் காரன் போதையில புலம்பிக்கிட்டு இருக்கான்....பெத்திருக்னே..ரெண்டு ..என்னய விட்டு நகரவே மாட்டேங்குது. எல்லாத்தையும் சமாளிச்சுகிட்டு வர்ரதுக்கு இம்புட்டு நேரமாச்சு....”
“ரெம்ப கஸ்டம்தான்....எங்க வரமாட்டியோன்னு நிணச்சுதான் படுத்துட்டேன்”...
“ வர்ரேன்னு சொல்லிட்டு, எப்ப வராம இருந்திருக்கேன் சொல்லு..”..
“சரிசரி கோவிச்காதே....!!! ” என்றபடி மல்லாக்க படுத்தான். “
அவனுக்கருகில் அமர்ந்திருந்தவளும் அவன் மேல் சாய்ந்தால்
சிறிது நேரங்கழித்து இருவரும் படுத்தபடியே புஸ்்்புஸ்னு மூச்சு விட்டுக் கொண்டு இருந்தனர்...மூச்சு விடுவது சம நிலைக்கு வந்ததும் அவனிடம் கேட்டாள்.
“ நாளைக்கு வரவா...”
“நாளைக்கா.... நாளைக்கு அம்சவள்ளிய பார்க்க போறேன். வந்தவுடன் சொல்கிறேன்..”
“ ஆமா..ஆமா கண்டிப்பா போயி பாரு, கட்டுனவள தவிக்கவிடாத” என்று சொல்லியபடி ஆசையாய் அவனது உதட்டில் முத்தம் கொடுத்து வரட்டா “ என்றபடி விடைபெற்றாள்.
சரடு விடுதல் | --------- பொய் : புனைந்துரை. |
---|
அடடே...
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஐயோ...!
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு