நண்பர்கள் இருவரும் சாராயக் கடையின் பார்-ல் இருந்து வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்த போது , அவர்களை நோக்கி அழகிய பெண் வந்தாள். வந்தவள் இருவரில் ஒருவனிடம்.
“எனக்கு அர்ஜெண்டா ஐய்யாயிரம் தேவையாக இருக்கிறது. சும்மா தர வேண்டாம் அதற்கு ஈடா என்னை பயன்படுத்திக் கொள்ளலாம் -மெல்லிய குரலில் சொன்னாள்
மற்றொருவன் இவள் என்னவோ சொல்கிறாளே என்றபடி அருகில் வந்தான். அய்யாயிரமா ? சாஸ்தியாக இருக்கிறதே...நண்பனை பார்த்தபடி சொன்னான்
நண்பனும் தலையாட்டினான்... அவள் சொன்னாள். காசுள்ளவர்கள்தான் இந்த பார்க்குக்கு வருவார்கள் .காசு இல்லாதவர்கள் இங்கு வரமுடியுமா..??
“ சரி, இடம் ....?
“அது நீங்கதான் ஏற்பாடு செய்யனும் .”
“ நான் வெளியூர் இங்குள்ள லாட்ஜ்ச பத்தி எனக்கு தெரியாது”
“ நண்பர்கள் இருவரும் அவரவர் முகத்தை பார்த்துக் கொண்டனர்..
ஒருவன் சொன்னான். மணி ரூம்க்கு போகலாமா....”
“ போன் பண்ணி கேட்டுப்பாரு...”
போன் செய்தவன்.. அவுட் ஆப் ஆர்டர்ன்னு வருதுடா..”
“ எனது செல்லின் பேசிப் பார்க்கிறேன்..”
“ ரிங் போய்கிட்டே இருந்தது.. ... ”
“அவள் சொன்னாள்,“அவசரம் இல்லை, ட்ரை பன்னி பாருங்கள்..”
ஒரு வழியாக ஒரு இடம் கிடைத்தது. ஒரே வண்டியில் மூவரும் சென்றனர். சாவியை பக்கத்து வீட்டாரிடம் வாங்கி கதவைத் திறந்து உள்ளே சென்றனர்.
அந்தப் பெண் யூரின் போகனும் என்று ஒருவிரலை காட்டினாள்... பாத்ரூம் அருகில் சென்று அவளுக்கு உதவினான். இரு நண்பர்களும் தங்கள் முகத்தை ஃப்ரசாக வைத்துக் கொண்டு ரெடியாக இருந்தனர்..
அவள் சொன்னாள்...முதலில் பணத்தை கொடுங்கள்..“
ஏன்? எங்களிடம் நம்பிக்கை இல்லையா..?
“ நம்பிக்கை இருப்பதால்தானே ..உங்களுடன் வந்திருக்கிறேன். நீங்கள் நம்பிக்கையாக நடந்து கொள்ளுங்கள்...”
“ நண்பர்களின் ஒருவன் “ இந்தா என்று பணத்தை நீட்டினான்.”
பணத்தை பெற்றுக் கொண்டவள்.. பணத்தை எண்ணிபார்த்துவிட்டு தாங்க்ஸ் சொல்லிவிட்டு தயாரானாள்.
நண்பர்கள் இருவரும் நீ போடா...நீ போடா..மொதல்ல என்று மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தனர். பின் அந்தப் பெண்ணே..நீங்க வாங்க என்று ஒருவனை பிடித்து இழுத்தாள்.
எல்லா வேலையும் முடிந்த பிறகு , மூவரும் வாங்கி வந்த நொருக்கு தீனிகளை தின்று கொண்டு ஒய்வு எடுத்தனர். அந்தப் பெண்ணின் இருப்பிடம் செல்போன் நம்பர் விபரம் கேட்டபோது தர மறுத்துவிட்டாள் இவர்களின் செல்போன் மற்றும விபரம் கேட்க மறுத்துவிட்டாள். நீங்களும் எனக்கு தரவேண்டாம், நானும தரவேண்டாம். வந்த இடம் எந்த இடம் என்று எனக்கு தெரியாது . என்னை அந்த பார்க்.. அருகில் கொண்டுவந்து விடுங்கள் நான் கிளம்பி சென்றுவிடுகிறேன் என்றாள்..
அந்தப் பெண் சொன்னது நண்பர்களுக்கும் சரியென்றே மனதில் பட்டது. ஒருவன்அந்தவீட்டில் இருக்க ஒருவன் மட்டும் டூவீலரில் போய் இறக்கிவிட்டு வந்தான்.
அன்று முழுவதும் நண்பர்கள் இருவரும் தங்கள் மனைவிமார்களிடம் அனுபவிக்காத சுகத்தை அனுபவித்தாக சிலாகித்துக் கொண்டனர் . அவர்களின் நண்பர்களுக்கும் அவர்கள் பெற்ற அனுபவத்தை அதுவும் கல்யாணம் முடிக்காத பிரம்மசாரி நண்பர்களிடம் வீரசாகசமாக சொன்னார்கள்
ஹா... ஹா...
பதிலளிநீக்குஇப்படி கதை சொல்லி கடுப்பேத்துறாங்க மை லார்ட்
பதிலளிநீக்கு