புதன் 28 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -16

ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டீர்கள். எனக்கு எந்த அனுபவமும் தெரியவில்லை. தெரிந்தாலும் சொல்லத் தெரியாத முட்டா பீசாகத்போனோன் என்று நொந்து கொண்டு தன் காதல் கதையை சொன்னார் அவர்.


 சிறுபிள்ளையிலிருந்து சர்ச்சில்தான் வளர்ந்து வந்தான். சர்ச்தான் அவனுக்கு எல்லாமே... சர்ச்சில் இருப்பவர்கள் மட்டுமே அவனுக்கு உறவுக்காரர்கள்.  வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் வரும் பகதர்கள்தான் அவனின் வெளி உலகம், இப்படித்தான் வாலிப வயதுவரை இருந்துவந்தான். விசேச நாட்களில்  சர்ச்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில்  இளம் பெண் தேவதைகளின்  நிகழ்ச்சிகளில் போது தேவதைகளின் உதவியாளர்களாக  பணி செய்த போது பல தேவதைகளின் ஒரு தேவதை இவனிடம் அன்பு செலுத்தியது.

அன்பா. அம்பா என்று அப்போது அவனுக்கு தெரியாது. சர்ச்சுகளில் பணிபுரிந்த ஆண்ட்னி. கிருபா இவர்களின் எபிசோட்களின் மூலம்தான் தேவதை அவனிடம் காட்டியது காதல் என்று தெரிந்தது.

சான்சன்...அவனது பெயர் சர்ச்சுகளின் பாதர் முதற்கொண்டு எல்லோரும் அழைப்பது ஜான்.

ஒரு நாள் அந்த ஜானை ..தேவதை தனியாக அழைத்தது. பாதர் இட்ட வேலையை செய்ததினால் தேவதையின் அழைப்பை மறந்து போனான் கோபம் கொண்ட தேவதை அவனிருப்பிடம் வந்து அவனை திட்டி அவ்விடத்தின் ஒரு மூலைக்கு அழைத்து சென்று  முத்தம் கொடுத்து தன் காதலையும் கோபத்தையும் வெளிப்படுத்தியது.  நடுங்கிப்போன அவன் அந்தத் தேவதையிடம் சொன்னான்

தாய் தந்தை யாரென்று அறியாதவன். சர்ச்சே கதியென்று இருப்பவன். படிப்போ கம்மி..நனோ அனாதை  இதில் நீயோ தேவதை... நான் எப்படி உனக்கு ஈடாவேன் என்றான். தேவதைக்கு கோபம் வந்தது. அவன் கன்னத்தில் அறைந்தது.. சத்தம்  கேட்டு புளோரினா அக்கா வந்தது.

தேவதையை கண்டதும் புன்முறுவல் பூத்தது. நிலமையை புரிந்து கொண்டு ,ஃபாதரிடம் பேசு என்று தேவதையிடம் கூறியது.


ஒரு நாள் ஃபாதர் ஜானிடம் தேவதையை விரும்புகிறாயா..? னு கேட்டார். பதில் சொல்ல முடியாமல் திணறினான். புளோரினா அக்காவிடம்  பேசினார்.


கா்த்தர் பிறந்த நாள். அன்று சர்ச்சுக்கு போலீஸ் ஆய்வாளர் வந்தார். ஜான் என்பவனைப்பற்றி விவரம் கேட்டார். தேவதையின் ஒன்றுவிட்ட உறவு ஒன்று ஜான் மீது புகார் தெரிவித்ததாக தெரிவித்தார். .பாதர் பேசிய பேச்சுகளுக்கு பணிந்து வணக்கம் செலுத்திவிட்டு சென்றார்.

மறுநாள் காலையில் ஜானை சரச்சைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று ஃபாதர் உத்தரவிட்டார். ஆண்டனி, கிருபா இவர்களை கூப்பிட்டு.. ஜானுக்கு இரண்டாயிரம் அபதாரம் விதித்து இருக்கிறார்கள். கட்டிவிட்டு வரவும் என பணித்தார்.


ஜானுக்கு  ஒன்றும் புரியவில்லை. .பாதரிடம் கேட்கவில்லை, மற்றவர்களும் சொல்லவில்லை...ஒரே குழப்பத்துடன் இருந்துவந்தான்.  தனியாக உட்கார்ந்து இருந்தவரை சுட்டிகாட்டி அவரைப்போலவே நானும் திருமணம் ஒன்று இல்லாமலே சர்ச் ஊழியனாகவே காலத்தை கடந்து விட்டேன் என்றான்.


அந்த தேவதை ..ன்னு இழுத்தார் ஒருவர்.  தெரியவில்லை என்று கையை விரித்தார்.சில வருடங்களில் .பாதர் இறந்தவிட்டார் என்றார்.


இதையும் கொஞ்சம் படியுங்கள் 



1 கருத்து:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...