ஞாயிறு 02 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -17

 அண்ணன் எலக்ட்ரிசன்..அண்ணி சூப்பர்வைசர்..அண்ணனுக்கு உதவியாளர் இந்தக்கதையை சொன்னவர். அண்ணன் இந்த தொழிற்கூடத்தில் சிறுவயதிலிருந்தே வேலை பார்த்து எலக்ட்ரிசனாக உயர்ந்தவர் அண்ணி நிறைய படிப்பு படித்து அதன்மூலமா சூப்பர்வைசராக பதவிக்கு வந்தவரு.. ஆரம்பத்தில் அண்ணனோட வேலையில குற்றம் கண்டுபிடிக்கிறதையே வேலையாக வச்சிருந்தாங்க.. அண்ணன் அந்த தவறை எல்லாம் பொறுமையாக இருந்து திருத்திக்கிட்டாங்க...அதோடு தன்னோட உதவியாரும் அந்த தப்ப செய்திடக்கூடாதுன்னு தொழில் நுணுக்கத்தை சொல்லி தந்தாங்க

அண்ணன் அண்ணி மேல கோபம் கொள்ளாமல் அவுக சொல்றத யெல்லாம் கேட்டு சரி செய்ததால் அண்ணன் மேல் ஒரு பிரியம் வந்து அது காதலாக மாறிவிட்டது. 

அண்ணன் வேலைக்கு தாமதமாக வந்தாலோ... லீவு போட்டாலோ அண்ணி .. உதவியாளரைத்தான் மொதல்ல கேட்பாங்க....உதவியாளர் தெரியல என்று சொன்னால் அவரைத்தான் கோபிப்பாங்க.. அவுங்க இருவரின் காதலுக்கும்  தபால்காரர் அந்த உதவியாளர்தான்.


நாளாடைவில் உதவியாளர் இல்லாமலலே கோயில், சினிமா தியேட்டர்போன்ற இடங்களுக்கு அவர்களே தனியாக சென்றுவர பழகி விட்டார்கள்... இப்படியே நாட்கள் சென்றன.

அந்த உதவியாளரும் பதவி உயர்வு அளிக்கபட்டு வேறு ஒரு பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஒரு நாள் அந்த முன்னால் உதவியாளரை தேடி அண்ணி வந்தார். அண்ணனை பற்றி விசாரித்தார். தான் பிரிவுக்கு மாற்றப்பட்டதிலிருந்து அண்ணனிடம் சரியாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார்.  இரண்டு வாரங்களாக வேலைக்கும் வரவில்லை தொடர்பும் கொள்ளவும் முடியவில்லை. என்ன ..எது என்று விசாரித்து வா என்று கேட்டார். சரி என்றுவிட்டு அண்ணன் வீட்டுக்கு சென்று விசாரித்து வந்த விபரத்தை  வேலை  பளுவினால் உடம்புக்கு முடியாமல் போனதினால் அண்ணியிடம்    சொல்லாமல் மறந்துவிட்டார்  முன்னால் உதவியாளர்.

உடம்பு தேறி வேலைக்கு வந்த போதுதான் அவருக்கு அந்த அதிர்ச்சி செய்தி தெரிந்தது. அண்ணி  தற்கொலை செய்து கொண்டார் என்று..அன்று எல்லா தொழிலாளர்களுடன் சேர்ந்து மருத்துவமனை சென்று   துக்க நிகழ்வில் கலந்து கொண்டார் உதவியாளர்.


ஒரு மாதம் இரு மாதம் வரை தற்கொலை செய்து கொண்ட சூப்பர்வைசர் அண்ணியை பற்றித்தான் தொழிற்கூடத்தில் பேச்சாக இருந்தது. அண்ணி கரப்பமாக இருந்ததும். அண்ணியின் வீட்டில் கர்ப்பத்துக்கு காரணமானவரை தேடியதும். அந்த நிலையில் அண்ணன் கானாமல் போனதும்.. அண்ணி தனக்குதானே தீ வைத்துக் கொண்டதும்தான் செய்தியாக இருந்தது.


ஆனால், உண்மை அந்த உதவியாளருக்குத்தான் தெரியும். அண்ணன் தாய் தந்தை எந்த உறவும் இல்லாதவர்.  அண்ணியோ தொழிற்கூடத்தின் முதலாளியின் உறவுக்காரர். தாய்தந்தை அண்ணன்.தம்பி போன்ற எல்லா உறவும் பெற்ற வசதியான இடத்தை சேர்ந்தவர்.  அண்ணி அண்ணனைத்தான் கட்டிக்கிடுவேன் என்று உறுதியாக பிடிவதாமாக இருந்ததால்... முதலில் அண்ணனை கானாத பொணமாக்கினார்கள்.... பிறகு தங்களின் கௌவரத்ததையும்  காப்பாற்றிக் கொள்ள அண்ணியின்மீது பெட்ரோல் ஊற்றி சாகடித்தார்கள்.  ரெண்டு கொலைகளை செய்தது பெரிய இடமாதலால் கேள்வி கேட்பார் யாருமில்லாததால்  கொலை தற்கொலையாக ஜோடிக்கப்பட்டது. 

 தற்போது. அந்தக் தொழிற்கூடத்தில் வேலை செய்த பெரும்பாலானவர்கள் ஆட்குறைப்பினால் வெளியேற்றபட்டார்கள் .அவர்களில்  உதவியாளரும் ஒருவர் அவருக்கு வயது எழுபது...


2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...