வெள்ளி 19 2025

ஏ1 குற்றவாளி நினைவிடம் காறி உமிழ்ந்த உயர்நீதிமன்றம்.


ஏ1 குற்றவாளி நினைவிடம் காறி உமிழ்ந்த உயர்நீதிமன்றம்.

மக்களிடம் தகவலை மறைத்த ஊடகங்கள்…


“ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடம் ஆக்கும்

சட்டத்தை இரத்து செய்த நீதிமன்றம், வீட்டை 

தீபா & தீபக் வசம் ஒப்படைக்கச் சொன்னதை 

மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டன.


ஜெயலலிதா அத்தகு நினைவிடத்திற்குத் 

தகுதியற்றவர் என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டி

இருப்பதைக் கூறவில்லை.


குறிப்பாக,

1. "தொழில்முறையில் சாதித்ததாலேயோ, 

அரசியல் பிரபலம் என்பதாலோ, திட்டமிடப்பட்ட

அலங்கரிப்பின் மூலம் செயற்கையாகக் 

கவர்ச்சியைப் பெற்றதனாலேயோ அல்லது 

தேர்தல் பெரு வெற்றிகளாலோ ஒருவருக்கு

நினைவில்லம் பொதுமக்கள் பணத்தில் 

அமைக்க முடியாது."


2. "இங்கே அரசு வழக்கறிஞர் 1969ம் ஆண்டு

அலகாபாத்தில் மகாத்மா காந்தி நினைவிடம்

சம்பந்தமான தீர்ப்பைச் சுட்டிகாட்டினார். அரசு

பணத்தில் நினைவிடம் அமைக்க மகாத்மா காந்தி

வழக்கைக் காரணம் காட்டும் நீங்கள், நினைவிடம்

அமைக்கப்படும் நபர் காந்தியின் வாழ்க்கையை

வாழ்ந்தவரா அல்லது குறைந்தபட்சம் காந்தியின் உணர்வையாவது கொண்டவரா? என்று

யோசித்தீர்களா?"


3."ஏற்கனெவே மக்கள் வரிப்பணம் ரூ80 கோடியைக் கொட்டி மெரினா கடற்கரையில் சம்பந்தபட்டவருக்கு நினைவிடம் கட்டியாயிற்று. வேதா நிலையத்திற்கு

வெகு அருகில் இருக்கும் இந்த  நினைவிடம் வெளிப்படுத்தாததை இந்த இல்லம் என்ன வெளிபடுத்தப்போகிறது ?"


4."மக்கள் வரிப்பணம் பாழாவதை 

மகாபாரதத்தின் திருதிராஷ்டரை போல 

கண் மூடிப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது."


5."அரசு செலவிடும் ஒவ்வொரு ரூபாயின் 

பயனும்  மக்களைச் சென்றடையும் வண்ணம் உறுதிபடுத்தவேண்டும். இது எதுவுமே தராத 

இந்த நினைவிட திட்டம் ரத்து செய்யப்படுகிறது. 

இதற்கு ஒதுக்கப்பட்ட ரூ50 கோடியை உடனே

கஜானாவில் சேர்க்க வேண்டும்."


இவ்வளவு அசிங்கத்தின் ஒரு வார்த்தையைக் கூட வெளியே கசியவிடாத ஊடகங்கள், வழக்கறிஞர்கள்,

சமூக ஆர்வலர்கள்  அனைவரும் வெட்கப்பட 

வேண்டும்.

நன்றி தோழர் Sugumar Munirathinam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஏ1 குற்றவாளி நினைவிடம் காறி உமிழ்ந்த உயர்நீதிமன்றம்.

ஏ1 குற்றவாளி நினைவிடம் காறி உமிழ்ந்த உயர்நீதிமன்றம். மக்களிடம் தகவலை மறைத்த ஊடகங்கள்… “ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடம் ஆக்கும் சட்டத்தை இரத்து...